எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சுந்தர் சி, பாலக் லால்வானி, பாகுபலி பிரபாகர், ஜெய்ஸ் ஜோஸ், தம்பி ராமையா, ஐரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வி. இசட். துரை இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் தலைநகரம் 2 . இயக்குநராக இருந்த சுந்தர். சி கதாநாயகனாக நடித்த முதல் படம் தலைநகரம். இதன் தொடர்ச்சியாக இப்போது தலைநகரம் 2 வந்துள்ளது. கதை, ரவுடி தொழிலை கைவிட்டு விட்டு நண்பர் தம்பி ராமையாயுடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுகிறார் சுந்தர் சி. இந்நிலையில் நடிகை பாலக் லால்வானியை சிலர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குகிறார்கள். இந்தப் பிரச்சனையில் தேவையில்லாமல் தம்பி ராமையா சிக்குகிறார். அவரை இந்த சிக்கலிருந்து விடுவிக்க சுந்தர் சி மீண்டும் ரவுடியாக மாறுகிறார். சென்னையை ஆட்டிப்படைக்கும் மூன்று பிரபல ரவுடிகளுக்கும், சுந்தர். சிக்கும் இடையேயான மோதல்களும், இறுதியில் யார் வெல்கிறார்கள்? என்பதும் தான் படத்தின் திரைக்கதை. சுந்தர். சி ஓய்வு பெற்ற ரவுடி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அதிலும் ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்திருக்கிறார். வழக்கமாக போலீஸ் தொடர்பான காட்சிகளும், அணுகுமுறையும் பலவீனமாக இருப்பதால் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் சுமார் தான். இருந்தாலும் இயக்குநர் வி இசட் துரையின் உழைப்பு பல இடங்களில் எதிர்பாராதவையாக இருப்பதால் பார்வையாளர்களை இப்படம் வசீகரிக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


