எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெங்களூர்,மே.4 - கர்நாடக மாநிலத்தில் நேற்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்தது. முன்னதாக அரசியல் தலைவர்கள் உச்சக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலத்தில் சட்டசபை பதவிக்காலம் முடிவதால் நாளை (5-ம் தேதி) சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் இவ்வாறு அறிவித்ததும் அம்மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்தது. 224 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த 224 தொகுதிகளில் ஒரு தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் இறந்துவிட்டதால் அந்த தொகுதியில் வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைத்து தொகுதிகளிலும் நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் பாரதிய ஜனதாவில் இருந்து விலகிய எடியூரப்பா புதியதாக தொடங்கியுள்ள கர்நாடக ஜனதா ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதலில் கட்சின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரசாரம் செய்தார். அப்போது அவர் பாரதிய ஜனதா ஆட்சியை கடுமையாக தாக்கி பேசினார். உலகத்திலேயே இந்த அரசு மாதிரி ஊழல் அரசு எதுவும் இல்லை என்று குற்றஞ்சாட்டினார். அவரை அடுத்து அவரது தாயாரும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரபிரசாரம் மேற்கொண்டார். பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அவர்களுக்கு விட்டுக்கொடுக்காமல் பாரதிய ஜனதா தலைவர்களும் தங்களுடைய கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தனர். அப்போது காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு அவர்கள் பதில் அளித்தனர். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, கட்சியின் அகில இந்திய தலைவர் ராஜ்நாத் சிங், லோக்சபை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி, அனந்த சர்மா ஆகியோரும் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டனர். கர்நாடக மாநிலத்தின் வடபகுதியில் குறிப்பாக ஹூப்ளி பகுதிகளில் பாரதிய ஜனதாவுக்கு செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் கிடைத்த வெற்றியதால்தான் கடந்த தேர்தலின்போது பாரதிய ஜனதா 105 தொகுதிகளில் வெற்றிபெற முடிந்தது. மதசார்பாற்ற ஜனதாதளமும் தீவிரபிரசாரத்தை மேற்கொண்டது. அந்த கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவுகவுடா, முன்னாள் முதல்வரும் அவரது மகனுமான குமாரசாமி மற்றும் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து ஓட்டு சேகரித்தனர். கர்நாடக ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து எடியூரப்பாவும் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டார். பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. ஓட்டுப்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நடைபெறுகிறது. ஓட்டுப்பதிவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதட்டம் நிறைந்த தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடிகளுக்கு எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை அனுப்பும்பணியில் அரசு அதிகாரிகள், போலீசார், ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
கூட்டணியில் 30 தொகுதிகள் கேட்போம்: ராமதாஸ் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு
21 Sep 2025திண்டிவனம் : பா.ம.க.வில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முன்பு அன்புமணியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார் ராமதாஸ்.
-
காசாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: 85 பேர் உயிரிழப்பு
21 Sep 2025காசா நகரம் : காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 85 பே ர் கொல்லப்பட்டனர். அதில், உயிருக்கு பயந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்ற மக்களும் உயிரிழந்தனர்.
-
விஜய்க்கு வருகின்ற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது : நடிகர் கமல்ஹாசன் ஆருடம்
21 Sep 2025சென்னை : விஜய்க்கு கூடுகிற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
-
நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
21 Sep 2025சென்னை : நடிகர் எஸ்.வி. சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம்
21 Sep 2025திருவனந்தபுரம் : கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம் மூலம் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
21 Sep 2025மேட்டூர் : காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 9731கன அடியிலிருந்து விநாடிக்கு 11,397 கன அடி
-
4 ரிக்டர் அளவில் வங்காளதேசத்தில் நிலநடுக்கம்
21 Sep 2025டாக்கா : 4 ரிக்டர் அளவில் வங்காளதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
தாலிபான்கள் பாக்ராம் விமான தள கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் விரைவில் ஒப்படைக்க வேண்டும்: ட்ரம்ப்
21 Sep 2025நியூயார்க் : ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு அமெரிக்க ஆதரவு பெற்ற அரசு கவிழ்ந்ததையடுத்து ஆட்சியை தலிபான்கள் கைப்பற்றினர்.
-
கொரோனா பரவலை முதலில் தெரிவித்த சீன பெண் பத்திரிகையாளருக்கு தண்டனை மேலும் நீட்டிப்பு
21 Sep 2025பீஜிங் : சீனாவில் கொரோனா தொற்று பரவியுள்ளதை பற்றி முதலில் தெரிவித்த பெண் பத்திரிகையாளருக்கு மேலும் 4 ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
நான் ஆளுங்கட்சிக்கு எதிரானவன் இல்லை: நடிகர் பார்த்திபன் பேச்சு
21 Sep 2025கோவை : நான் ஆளுங்கட்சிக்கு எதிரானவன் இல்லை என்று பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் பயங்கரம்: இந்திய வம்சாவளி பெண் சுட்டுக்கொலை
21 Sep 2025நியூயார்க் : அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-09-2025.
22 Sep 2025 -
சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் பல்டி
22 Sep 2025சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் பல்டி.
-
நரேந்திர மோடியின் பயோபிக்காக உருவாகும் 'மா வந்தே
22 Sep 2025பிரதமர் நரேந்திர மோடியின் பயோபிக்காக பல மொழிகளில் உருவாகும் 'மா வந்தே' படத்தில் நரேந்திர மோடியாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன். நடிக்கிறார்.
-
சக்தித் திருமகன் திரைவிமர்சனம்
22 Sep 2025தலைமைச் செயலகத்தில் இடைத்தரகர் பணி செய்து வரும் விஜய் ஆண்டனி, கேட்ட பணத்தை கொடுத்தால் எந்த வேலையாக இருந்தாலும், அதை செய்து முடிக்க கூடியவர்.
-
கண்ணன் ரவியுடன் இணையும் கவுதம் கார்த்திக்
22 Sep 2025KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில், தீபக் ரவி இணைந்து தயாரிக்க, கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த திங்களன்று தொடங்கியது.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
தண்டகாரண்யம் திரைவிமர்சனம்
22 Sep 2025நக்சலைட்டுகள் தீவிரவாதிகள், போராளிகள் என்று அறியப்பட்டாலும், உண்மையில் அவர்கள் வலியோரால் வஞ்சிக்கப்பட்ட பழங்குடியினர் என்பதையும், ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்த
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
22 Sep 2025இடா நகர், அருணாசல்லில் ரூ. 5,100 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் நடுத்தர மக்களின் சேமிப்பு மேலும் உயரும்: அமித்ஷா
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.