எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மே.19 - சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த சூதாட்ட தரகர்களின் தலைவர் தென் ஆப்பிரிக்காவுக்கு தப்பிச் சென்று விட்டதாகவும், அவரது கார் சென்னை விமான நிலையத்தில் சிக்கியதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஐ.பி.எல். கிரிக்கெட் வெற்றி-தோல்வி பற்றி சென்னையில் சூதாட்டம் நடத்தியதை போலீசார் கண்டு பிடித்தனர். அவர்கள் சென்னையில் தனி அலுவலகம் அமைத்து செயல்பட்டு வந்தனர். 20 இடங்களில் தரகர்கள் செயல்பட்டனர். இவர்கள் தங்களுக்கிடையே `நெட்வொர்க்' அமைத்துக் கொண்டு தங்கள் இருப்பிடத்தில் இருந்தவாறே பந்தயம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் மாநில சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 6 பேர் கைது செய்யப்பட்டனர். அனைவரும் வசதி படைத்தவர்கள். வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். சூதாட்டத்தை நடத்திய முக்கிய புள்ளிகள் பலர் தப்பி ஓடி விட்டனர். அவர்களில் ஒருவர் பிரசாந்த் அயனாவரம் மேடவாக்கம் டேங்க் ரோட்டில் வசிக்கிறார். இவர்தான் சென்னையில் உள்ள சூதாட்ட தரகர்கள் சங்கத்தின் தலைவராக செயல்பட்டார். அவரைத்தேடி போலீசார் நேற்று முன்தினம் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவர் இல்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது அவர் குடும்பத்துடன் வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருந்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் விமான நிலையம் சென்றனர். அங்கு அவரது கார் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு பிடித்தனர். குடும்பத்தினருடன் விமானத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு தப்பிச் சென்று விட்டது தெரிய வந்தது. பிரசாந்த்துக்கு அயனாவரத்தில் மிகப்பெரிய ஆடம்பர பங்களா உள்ளது. ஒரு ஆண்டுக்கு முன்புதான் இந்த பங்களாவை அவர் ரூ.3 1ற2 கோடிக்கு வாங்கினார்.
இந்த பங்களாவில் 8 தனித் தனி வீடுகள் உள்ளன. இங்கு 7 மாதங்களுக்கு முன்பு குடியேறினார். இங்கு அக்கம் பக்கம் வசிப்பவர்கள் அனைவரும் வசதி படைத்தவர்கள். பிரசாந்த்தை அவர்கள் பைனான்சியர் என்றே கருதி இருந்தனர். அவரது அலுவலகத்துக்கு வசதி படைத்தோர் வந்து செல்வதாகவும் தெரிவித்தனர். பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பிரசாந்த் பேச மாட்டார். புன்சிரிப்பு மட்டும் சிரிப்பார். கார் நேராக வீட்டுக்குள் சென்றுதான் நிற்கும்.
அதேபோல் வீட்டில் இருந்தே கார் புறப்பட்டுச் செல்லும் அந்த அளவுக்கு அவரது பயணம் ரகசியமாக இருக்கும். வீட்டுக் காவலாளியிடம் போலீசார் விசாரித்த போது, பிரசாந்த்தின் மனைவி 10 நாட்களுக்கு முன் வட நாட்டுக்கு சுற்றுலா சென்று விட்டதாகவும், பிரசாந்த்தும் அவரது 2 மகன்களும் 2 நாட்களுக்கு முன் வெளியூர் சென்றதாகவும் தெரிவித்தார். இந்த சூதாட்டத்தில் பிரசாந்த் முக்கிய பங்கு வகித்தார் என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்தனர்.
தலைமறைவாக இருக்கும் 8 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பிரசாந்த் வீட்டில் கோர்ட்டு அனுமதியுடன் போலீசார் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர். அவருக்கு டெல்லியைச் சேர்ந்த சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் பிடிப்பட்ட 6 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-09-2025.
18 Sep 2025 -
காசா கொடூரத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Sep 2025சென்னை, காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை தடுக்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும்.
-
மோசடி செய்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் காப்பாற்றுகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
18 Sep 2025புதுடெல்லி, கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
-
5 மாவட்டங்களில் இன்று கனமழை
18 Sep 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? - சீமான் விளக்கம்
18 Sep 2025சென்னை: விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
-
தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து
18 Sep 2025சென்னை: பெரியார் விருது பெற்ற கனிமொழி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
-
சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இ.டீ. சோதனை
18 Sep 2025சென்னை, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்.
-
பொதுக்கூட்ட விதிமுறைகளை காவல்துறை வகுக்க வேண்டும்: த.வெ.க. வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
18 Sep 2025சென்னை, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்
-
எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
18 Sep 2025கோவை: எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் மீது வழக்குப்பதிவு
18 Sep 2025விருதுநகர்: பட்டாசு ஆலைல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இதில் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-
ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: மதுரை ஐகோர்ட் கிளையில் தகவல்
18 Sep 2025மதுரை, வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
18 Sep 2025சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
-
ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார் எதற்காக? அமித்ஷா பேச்சால் பரபரப்பு
18 Sep 2025பாட்னா, வங்காளதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காகதான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு புகாரை தெரிவித்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பே
-
அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை
18 Sep 2025சென்னை: 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
-
16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
18 Sep 2025சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சமரசமற்ற சமூகநீதி போராளி: இரட்டைமலை சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
18 Sep 2025சென்னை, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடினார் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
பனை மரம் வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 Sep 2025சென்னை: பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் என அரசாணை வெளியீட்டுள்ளது.
-
வைகை அணையில் இருந்து 120 நாட்களுக்கு நீர் திறப்பு
18 Sep 2025ஆண்டிபட்டி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்துக்காக 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து நேற்று (செப்.18) காலை தண்ணீர் திறக்கப்பட்டது.
-
இன்று முதல் பழனி கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்
18 Sep 2025திண்டுக்கல்: பழனி கோவிலில் ரோப்கார் இன்று முதல் இயங்காது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
வார விடுமுறை: இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Sep 2025சென்னை, வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருநதுகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்
-
தமிழகம் முழுவதும் தீர்மான கூட்டங்கள் நடத்த உத்தரவு: தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியீடு
18 Sep 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' என்ற தீர்மான விளக்கக் கூட்டங்கள் வருகிற செப்.
-
இனி ‘ஐஸ்கிரீம்’ கிடையாது: அதிபர் கிம் போட்ட உத்தரவால் குழப்பத்தில் வடகொரிய மக்கள்
18 Sep 2025பியாங்யாங்: அதிபர் கிம் போட்ட உத்தரவால் வடகொரிய மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
-
அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல்: 2,250 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்மச்சாவு..!
18 Sep 2025பிரேசிலியா: அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல் எழுப்பிய 2,250 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்மமாக இறந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க. தலையீடு இல்லை: டெல்லி பயணம் குறித்து இ.பி.எஸ். விளக்கம்
18 Sep 2025சேலம், கூட்டணியை பொறுத்தவரை அ.தி.மு.க.வில் நான், பா.ஜ.க.வில் அமித்ஷா கூறுவது தான் இறுதி என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.
-
நேபாளத்தில் அமைதி திரும்ப இந்தியா முழுஆதரவு அளிக்கும்: சுசீலா கார்கிடம் பிரதமர் மோடி உறுதி
18 Sep 2025புதுடெல்லி, நேபாள இடைக்கால பிரதமர் சுசீலா கார்கியுடன் பேசிய பிரதமர் மோடி, நேபாளத்தில் அமைதி திரும்ப அந்நாட்டு அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்று