எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பதி,மே.- 1 - திருமலையில் ரூ. 34 கோடி மதிப்புள்ள புதிதாக கட்டப்பட்டுள்ள அன்னதான வளாகத்தை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஜூலை 7 ம் தேதி திறந்து வைக்கிறார். திருமலையில் இறைவனை வழிபட்டு மனநிறைவு பெறுகின்ற பக்தர்களுக்கு இலவசமாக உணவு அளிக்கும் திட்டத்தை 1985 ல் அப்போதைய முதல்வர் என்.டி. ராமாராவ் தொடங்கி வைத்தார். இதற்காக கோயில் நிர்வாகம் அன்னதான வளாகம் கட்டி 12 மணி நேரம் உணவு வழங்கி வந்தது. தினமும் இத்திட்டத்தின் கீழ் 2000 பக்தர்கள் பயனடைந்தனர். பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. தற்போத நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வரை உணவு உண்டு வருகின்றனர். எனவே அதிகரித்து வரும் பக்தர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு திருப்பதி தேவஸ்தானம் தற்போது ரூ. 34 கோடி மதிப்பில் புதிய அன்னதான வளாகத்தை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமர்ந்து உண்ணும் படி வடிவமைத்துள்ளது. இந்த புதிய அன்னதான வளாகத்தை வரும் ஜூலை மாதம் 7 ம் தேதி ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் திறந்து வைத்து பக்தர்களின் பயன்பாட்டுக்கு அளிக்க உள்ளார் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


