எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், வீடு விற்பனைக்கான முத்திரை தீர்வை, பதிவு கட்டணம் குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில், வீடு விற்பனையின் போது, நிலத்தின் பிரிபடாத பங்கான, யு.டி.எஸ். அளவையும், மதிப்பையும் குறிப்பிட்டு, கிரைய பத்திரம் பதிவு செய்யப்படும். இதற்கு, முத்திரைத்தீர்வை 7 சதவீதம், பதிவு கட்டணம் 2 சதவீதம் வசூலிக்கப்படும்.
அதன் தொடர்ச்சியாக, கட்டுமான ஒப்பந்தம் தனியாக பதிவு செய்யப்படும். இரு வகையான பத்திரங்கள் பதிவு செய்யும் நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, நிலத்தின் பிரிபடாத பங்கு, கட்டடத்தின் அளவு, மதிப்பு குறிப்பிடப்பட்டு, ஒரே பத்திரம் பதிவு செய்யும் புதிய நடைமுறை, நேற்று(டிச.1-ல்) அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி பதிவாகும் பத்திரங்களுக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன. 50 லட்சம் ரூபாய் வரையிலான வீடுகளின் பத்திரங்களுக்கு, 4 சதவீதம் முத்திரை தீர்வை, 2 சதவீதம் பதிவு கட்டணம் செலுத்தினால் போதும். இதே போன்று, 3 கோடி ரூபாய் வரை மதிப்புள்ள வீடுகளின் பத்திரங்களுக்கு, 5 சதவீதம் முத்திரை தீர்வை, 2 சதவீதம் பதிவு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், நேற்று முதல் இது அமலுக்கு வந்துள்ளது என்றும் பதிவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


