எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, ஜூலை. 3 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையின் போது சாட்சியம் அளிக்க வராமல் காலதாமதம் செய்வது ஏன்? உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவ சான்றிதழ் தராதது ஏன்? என்று கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் சரமாரி கேள்விக் கணைகளை தொடுத்து தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது. நாட்டையே உலுக்கிய ஊழல் என்றால் அது ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலாகத்தான் இருக்க முடியும். காரணம், இந்த முறைகேட்டில் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தணிக்கை துறை குற்றம் சாட்டியிருந்தது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கனிமொழி 7 மாதத்திற்கு மேலாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவோ ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர்கள் இருவரும் தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு வெளியே உள்ளனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றவர்களும் ஜாமீனில் உள்ளனர்.
இதனிடையே குற்றம் சாட்டப்பட்ட ராசா உள்ளிட்ட 17 பேர் மீது சில மாதங்களுக்கு முன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஊழல் வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இந்த விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணையின் போது ஆஜராகி சாட்சியம் அளிக்குமாறு கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாளுக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் கோர்ட்டில் ஆஜராகாமல் தயாளு அம்மாள் தட்டிக்கழித்து வந்தார். தனக்கு உடல் நிலை சரியில்லை என்று காரணத்தை கூறி அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் தட்டிக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தயாளு அம்மாள் தாக்கல் செய்த மனுவையும் மே மாதம் 31 ம் தேதி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு கோர்ட்டில் ஆஜராகவும் உத்தரவிட்டது. சி.பி.ஐ. கோர்ட்டின் உத்தரவை ரத்து செய்யக் கோரி தயாளு அம்மாள் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது. அப்போது தயாளு அம்மாளின் மனு ஏற்கத்தக்கதல்ல என சி.பி.ஐ. தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவ சான்றிதழ் அளிக்காதது ஏன்? என்றும், சாட்சியம் அளிக்க வராமல் தாமதம் செய்வது ஏன் என்றும் தயாளு அம்மாளுக்கு சரமாரி கேள்விகளை தொடுத்ததோடு அவருக்கு தனது கடும் கண்டனத்தையும் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடைபெறும் எனத் தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


