எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.3 - மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் தொடர்பான வழக்கில் அந்தத் தொகுதியின் எம்.பி.யான மு.க.அழகிரியிடம் சென்னை உயர் நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடைபெற்றது. 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதி தி.மு.க. வேட்பாளராக மு.க.அழகிரி போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.மோகன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனிடையே மோகன் காலமானதால், அவர் சார்பில் அவரது தேர்தல் முகவரான ஏ.லாசர் இந்த வழக்கினை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
இந்த வழக்கில் தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து மு.க.அழகிரி ஏற்கெனவே நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.
இதனையடுத்து தற்போது அவரிடம் குறுக்கு விசாரணை நடைபெறுகிறது. கடந்த வாரம் புதன்கிழமை அழகிரியிடம் மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் குறுக்கு விசாரணை செய்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி வி.தனபாலன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் எம்.எஸ்.கிருஷ்ணன், மு.க.அழகிரியிடம் இரண்டாவது நாளாக குறுக்கு விசாரணை மேற்கொண்டார். பிற்பகல் 2.15 மணிக்கு தொடங்கிய குறுக்கு விசாரணை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. அதன் பிறகு இம்மாதம் 4ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


