எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கயா,ஜூலை.11 - புத்தகயா கோயில் வளாகத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 அல்லது 4 பேருக்கு தொடர்பு இருக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் வரலாற்று சிறப்பு மிக்க புத்தகயா கோயிலில் தீவிரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு நடத்தியுள்ளனர். இதில் 2 புத்தமத துறவிகள் படுகாயம் அடைந்தனர். சக்திகுறைந்த வெடிமருந்து பொருட்களை பயன்படுத்தியிருந்தால் உயிர்சேதம் ஏற்படவில்லை. இருந்தபோதிலும் வரலாற்று சிறப்புமிக்க இந்த கோயிலில் தீவிரவாதிகள் குண்டுவெடித்திருப்பது நாடே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இதனையொட்டி இந்த கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவும் பார்வையிட்டனர். பின்னர் ஷிண்டே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், புத்தகயா கோயிலில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 3 முதல் 4 பேர் வரை சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றார். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விரிவான முறையில் விசாரணை நடத்தி வருகிறது. புனித மிக்க புத்தர் கோயில் வளாகத்தில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அமைதி தழுவும் பூமியில் நாசவேலையை ஏற்படுத்த தீவிரவாதிகள் முயன்றிருப்பது கவலையளிக்கக்கூடிய விஷயம். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ.க்கு இணையான இரண்டு புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புலனாய்வு அமைப்புகள் பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது என்றும் ஷிண்டே கூறினார். நாங்கள் முழு விசாரணை நடத்தி வருகிறோம். சுமார் 4 பேர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. பீகார் அரசு கேட்டுக்கொண்டதின்பேரில் தேசிய புலனாய்வு அமைப்பிடம் விசாரணையை ஒப்படைத்துள்ளோம். புத்தர்கோயில் வளாகத்தில் 13 குண்டுகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. அவைகளில் 10 குண்டுகள் வெடித்தன. 2 முதல் 3 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரில் இருந்து டெட்டோனேட்டர் மூலம் அந்த குண்டுகள் வைக்கப்பட்டுவெடிக்கப்பட்டுள்ளது. அருகில் ஒரு கடிகாரமும் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததுள்ளது. இந்த குண்டுகளில் 10 குண்டுகள் சம்பவம் நடந்த அன்று காலை 5 மணி முதல் 6 மணிக்குள் வெடித்துள்ளன என்றும் ஷிண்டே மேலும் கூறினார்.
குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை யாரையும் ஏன் கைது செய்யவில்லை என்று நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த ஷிண்டே, அவசரப்பட்டு யாரையும் கைது செய்வது சரியல்ல. விரிவான முறையில் விசாரணை நடத்த வேண்டும். அதன் பிறகுதான் கைது செய்ய வேண்டியவரை கைது செய்யப்படும் என்றும் ஷிண்டே தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சோனியா மருத்துவமனையில் அனுமதி
06 Jan 2026புதுடெல்லி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் தில்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
திடீர் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு: இந்தோனேசியாவில் 9 பேர் பலி
06 Jan 2026ஜகார்த்தா, இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான வடக்கு சுலவேசியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள்
-
எஸ்.ஐ.ஆர். விவகாரம்: முகமது சமி நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் சம்மன்
06 Jan 2026கொல்கத்தா, எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமிக்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
-
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
06 Jan 2026டோக்கியோ, ஜப்பானில் நேற்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை சுனாமி ஏற்படும் அச்சம் மக்கள் இடையே ஏற்பட்டது.
-
அதிபர் ட்ரம்ப்புடன் நோபல் பரிசை பகிர விரும்பும் வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர்
06 Jan 2026காரகஸ், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொள்ள வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ விருப்பம் தெரிவித்துள்ளார்.
-
வெனிசுலாவில் தேர்தல் கிடையாது: ட்ரம்ப்
06 Jan 2026வாஷிங்டன், வெனிசுலாவில் இப்போதைக்கு தேர்தல் கிடையாது என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெனிசுலாவை மறுகட்டமைப்பு செய்ய வேண்டியது அவசியம் என்றும் தெரிவ
-
தொடர்ந்து சாதனைகளை படையுங்கள்: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
06 Jan 2026சென்னை, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை நிச்சயம் பழிதீர்ப்போம்: நிகோலஸ் மதுரோவின் மகன் உறுதி
06 Jan 2026நியூயார்க், அமெரிக்காவை கண்டிப்பாக பழிதீர்ப்போம் என்று அமெரிக்க படையால் கைது செய்யப்பட்ட நிகோலஸ் மதுரோவின் மகன் குரேரா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-01-2026
07 Jan 2026


