எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூலை.13 - என்எல்சி பங்கு விற்பனை தொடர்பாக செபியுடன் பேச்சு நடத்த தமிழகத்தில் இருந்து ஒரு மூத்த அதிகாரியை அனுப்பி வைக்குமாறு முதல்வர் ஜெயலலிதாவிற்கு எழுதி உள்ள பதில் கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.
என்எல்சி எனப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முடிவு எடுத்தது. இதற்கு முதல்வர் ஜெயலலிதா உள்பட தமிழகத்தின் அனைத்து தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். என்எல்சி ஊழியர்களும் காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று முதல் சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டத்திலும் அவர்கள் குதிக்க இருக்கிறார்கள். இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் என்எல்சி 5 சதவீத பங்குகளை தமிழக அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்கலாம் என்று முதல்வர் ஜெயலலிதா யோசனை தெரிவித்திருந்தார். இதுபற்றி கடந்த வாரம் பேட்டியளித்த நிதியமைச்சர் ப.சிதம்பரம் தமிழகத்தின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிரதமர் மன்மோகன் சிங் பதில் கடிதம் ஒன்று எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் 5 சதவீத பங்குகளை விற்பது தனியார் மயமாகாது என்று பிரதமர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த யோசனை பற்றி செபியுடன் ஆலோசிக்கப்பட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த விசயம் குறித்து ஆகஸ்ட்8க்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் செபியுடனும், பங்கு விற்பனை துறையுடனும் பேச்சு நடத்த தமிழக அரசு ஒரு மூத்த அதிகாரியை அனுப்ப வேண்டும்.அப்போதுதான் அதற்கு இறுதி வடிவம் கொடுக்க முடியும். எனவே ஒரு மூத்த அதிகாரியை பங்கு விற்பனை குறித்து பேச உடனே அனுப்புங்கள் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். என்எல்சி நிறுவனம் தொடர்ந்து செயல்பட வேணடும்.அப்போதுதான் மின்தட்டுப்பாடு ஏற்படாது என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


