Idhayam Matrimony

இந்தியாவுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்படவில்லை: ராஜ்நாத்

ஞாயிற்றுக்கிழமை, 26 மே 2024      இந்தியா
Rajnath-Singh 2023-11-14

Source: provided

புதுடெல்லி : இந்தியாவுக்கு சொந்தமான ஒரு இஞ்ச் நிலம் கூட ஆக்கிரமிக்கப்படவில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியாக கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு சொந்தமான பகுதிகளை சீனா கைப்பற்றி உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனை மத்திய அரசு மறுத்துள்ளது. இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்தியாவுக்கு சொந்தமான ஒரு இஞ்ச் நிலத்தை யாரும் ஆக்கிரமிக்கவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் என்ற முறையில் உறுதியாக தெரிவிக்கிறேன். இந்தியா - சீனா ராணுவ கமாண்டர்கள் இடையில் நல்ல சூழ்நிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதன் முடிவுகளுக்காக நாம் காத்திருக்க வேண்டும். 

தற்போது, நான் இந்த கட்டத்தில் விவாதிக்க ஆரம்பித்தால், மக்கள் பெருமைப்படுவார்கள். ஆனால், இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதால், அந்த விவரங்களை நான் வெளியிட விரும்பவில்லை. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து