எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை நேற்று (ஜூன் 10) சந்தித்துப் பேசினர்.பிரதமர் நரேந்திர மோடி பதவியேபு விழாவில் பங்கேற்பதற்காக ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வருகை புரிந்தார். அந்த நிகழ்ச்சி முடிந்து தில்லியில் அவர் தங்கியிருந்தபோது, இந்த சந்திப்பு நடைபெற்றது.
காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர், வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனாவை தில்லியில் சந்தித்தனர்.
ஷேக் ஹசீனாவுக்கும் காந்தி குடும்பத்துக்கும் இடையிலான உறவு அவர்களின் முன்னோர்கள் காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது. ஷேக் ஹசீனாவின் தந்தையும் வங்கதேச தலைவருமான ஷேக் முஜிபூர் ரஹ்மான், இந்திரா காந்தியுடன் இணக்கமான சுமூகமான உறவைக் கொண்டவர். 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேச விடுதலைப் போராட்டத்தில் இந்திரா காந்தி வங்கதேசத்துக்கு பெரிதும் உதவியாக இருந்தார். அதன் விளைவாக காந்தி குடும்பத்தின் மீது அவர்களுக்கு இணக்கமான பற்று மற்றும் நன்றியுனர்வை வெளிப்படுத்தும் வகையில் பரஸ்பர மரியாதையையும் நீடித்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக தொடர்ந்து 3வது முறையாக பதவியேற்றார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது அமைச்சரவை உறுப்பினர்கள் சிலருடன் தில்லிக்கு வருகை புரிந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


