எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அடிஸ் அபாபா, எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 229-ஆக உயர்ந்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த நிலையில் கெஞ்சோ ஷாச்சா கோஸ்டி நகரில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் அங்கு மண்ணில் புதையுண்டன. அப்போது மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் முயற்சியில் அவர்களது உறவினர் இறங்கினர்.
ஆனால் அங்கு மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதால் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மண்ணில் புதையுண்டனர். இதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர் மண்ணில் புதையுண்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மாலை வரை 157 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னரும் அடுத்தடுத்து உடல்கள் மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 229 ஆக உயர்ந்துள்ளளது.
இதில் சிலர் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் வசித்த பலரை காணவில்லை. எனவே, பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் புதையுண்டவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே நிலச்சரிவில் சிக்கி பலியானோருக்கு எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் மண்ணில் புதையுண்டவர்களை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்கவும் மீட்பு படையினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


