எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,மே.7 - ரூ.1.76 லட்சம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆஜரானார். அப்போது முன் ஜாமீன் மனுவையும் தாக்கல் செய்தார். மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக தி.மு.க.வை சேர்ந்த ஆ.ராசா இருந்தபோது விதிமுறைகளை மீறி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டதில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. இந்த ஊழல் குறித்து சுப்ரீம்கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் பாராளுமன்ற பொதுகணக்குக்குழுவும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விசாரணை நடத்தியது. அதன் வரைவு அறிக்கை பாராளுமன்ற லோக்சபை சபாநாயகர் மீராகுமாரிடம் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இதைத்தவிர பாராளுமன்ற கூட்டுக்குழுவும் விசாரணை நடத்தியது.
2ஜி ஸ்பெக்டரம் ஊழல் குறித்த சி.பி.ஐ. விசாரணையை சுப்ரீம்கோர்ட்டு கண்காணித்ததோடு மார்ச் 31-ம் தேதிக்குள் விசாரணையை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட்டு காலக்கெடு விதித்தது. சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவின்படி விசாரணையை தீவிரப்படுத்திய சி.பி.ஐ. கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி முதல் குற்றப்பத்திரிகையை சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அவரது தனிச்செயலாளர் சந்தோலியா, தொலை தொடர்புத்துறை முன்னாள் செயலாளர் பெஹூரா சித்தார்த்தா, ஸ்வான் நிறுவன புரமோட்டர் பால்வா ஆகியோர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. அதனையடுத்து இரண்டாவது குற்றப்பத்திரிகையை கடந்த மாதம் 25-ம் தேதி சி.பி.ஐ. தாக்கல் செய்ததது. அதில் தமிழக முதல்வர் கருணாநிதி இரண்டாவது மனைவி தயாளு அம்மாள், 3-வது மனைவி ராஜாத்தி அம்மாளின் மகள் கனிமொழி, கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார், சினியுக் பிலிம்ஸ் இயக்குனர் கரீம் மொரானி, உள்பட 5 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் 5 பேரும் இன்று மே-6-ம் தேதி) டெல்லியில் உள்ள பாட்டியாலா சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி ஆஜராகுவதற்கு நேற்றுமுன்தினமே கனிமொழி டெல்லி சென்றுவிட்டார். கனிமொழி டெல்லிக்கு செல்லும் முன்பு, தமிழக அமைச்சர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா எம்.பி. உள்பட தி.மு.க.வை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் டெல்லி சென்று கனிமொழியை காப்பாற்றுவதற்கு சட்ட நிபுணர்கள்,முன்னாள் நீதிபதிகள் ஆகியோர்களை சந்தித்து பேசியதாக தெரிகிறது. நேற்றுமுன்தினம் டெல்லிக்கு சென்ற கனிமொழி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை சட்டப்பூர்வமாக சந்திப்பேன் என்றார்.
டெல்லியில் உள்ள பாட்டியாலா சி.பி.ஐ.தனிக்கோர்ட்டில் கனிமொழி ஆஜரானார். அவருக்கு வாதாட பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜாராகி வாதாடினார். அப்போது அவர் கூறுகையில் கனிமொழி ஒரு அப்பாவி என்றும் அவருக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் கூறினார். கலைஞர் டி.வி.யின் பங்குதாரராக மட்டுமே கனிமொழி இருக்கிறார். தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளாக அவர் இருப்பதால்தான் கனிமொழி குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்றும் ராம்ஜெத்மலானி மேலும் கூறினார். கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் நேற்று சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் ஆஜரானார். ஆனால் சினியுக் பிலிம்ஸ் இயக்குனர் கரீம் மொரானி நேற்று சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராக கனிமொழி சென்றபோது அவருடன் தி.மு.க. வை சேர்ந்த 5 எம்.பி.க்கள் சென்றனர்.
சி.பி.ஐ.தாக்கல் செய்துள்ள இரண்டாவது குற்றப்பத்திரிகையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட்டுச்சதி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். மேலும் கலைஞர் டி.வி. செயல்பாட்டில் ஒரு மூளையாக செயல்பட்டு வருகிறார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கலைஞர் டி.வி.யில் கனிமொழிக்கு 20 சதவீதம் பங்கும், அதன் நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கு 20 சதவீத பங்கும் முதல்வர் கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்கும் உள்ளது. 2 ஸ்பெக்ட்ரம் ஊழலில் கலைஞர் டி.வி.க்கு ரூ. 200 கோடி சென்றிருக்கிறது என்று சி.பி.ஐ. குற்றஞ்சாட்டியுள்ளது. அதாவது டி.பி.ரியாலிட்டி கம்பெனியில் இருந்து குசேகான் ப்ரூட்ஸ் அண்ட் வெஜிடேபிள்ஸ் பிரைவேட் லிமிடெட், டிபி கம்பெனி, சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனிகள் மூலம் இந்த பணம் கலைஞர் டி.வி.க்கு போய் சேர்ந்துள்ளது. ஸ்வான் தகவல்தொடர்பு பிரைவேட் லிமிடெட்டுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் பல சலுகைகளை செய்ததற்காக இந்த பணம் கலைஞர் டி.வி.க்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் 2ஜிஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் கனிமொழி கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. அதனால்தான் நேற்று சி.பி.ஐ.கோர்ட்டில் ஆஜரானபோது முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கலும் செய்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களான கனிமொழி, சரத்குமார் ஆகியோரை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது கனிமொழி, சரத்குமார் சார்பில் ஆஜரான பிரபல வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி, இந்த வழக்கில் கனிமொழிக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும், இந்த ஊழலுக்கு முழுப்பொறுப்பும் அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவுக்குத்தான் உண்டு என்றும் ராம்ஜேத்மலானி வாதிட்டார். ஆ.ராசாவும் தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. வாத பிரதிவாதங்களைக் கேட்ட நீதிபதி ஷைனி, இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை நாளைக்கு(இன்று) ஒத்திவைத்து உத்தரவிட்டார். எனவே இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை இன்றும் இதே சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடக்க இருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்கும்
24 Oct 2025புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பு
24 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.
-
ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன்..? மலேசியா பிரதமர் அன்வர் விளக்கம்
24 Oct 2025கோலாலம்பூர், ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன் என்பது குறித்து மலேசியா பிரதமர் அன்வர் விளக்கமளித்துள்ளார்.
-
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்கிறார் விஜய்
24 Oct 2025சென்னை: கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
-
மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
24 Oct 2025சென்னை: மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
-
துபாயில் இந்திய மாணவர் உயிரிழப்பு
24 Oct 2025துபாய்: துபாய் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் உயிரிழந்தார்.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் அடுத்த வாரம் முதல் தமிழகத்தில் துவக்கம் தலைமை தேர்தல் ஆணையம் தகவல்
24 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம்
24 Oct 2025சென்னை, 'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' என்ற பெயரில் தி.மு.க.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து: பிரமதர் மோடி, ஆந்திரா அரசு சார்பில் நிவாரணம் அறிவிப்பு
24 Oct 2025ஐதராபாத், ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதி
-
பீகாரில் 10 சட்டசபை தொகுதிகளில் இன்டியா கூட்டணிக்குள் போட்டி
24 Oct 2025பாட்னா: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இன்டியா கூட்டணிக் கட்சியினர் 10 தொகுதிகளில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
-
போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன்
24 Oct 2025சென்னை: போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா வுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
-
குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால் பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை
24 Oct 2025பாகிஸ்தான், குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால்பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
-
5 டி-20 போட்டிகள் தொடர்: ஆஸ்திரேலியா சென்றடைந்த இந்திய இளம் வீரர்கள் அணி
24 Oct 2025பெர்த்: 5 டி-20 போட்டிகள் தொடரில் பங்கேற்க இந்திய இளம் வீரர்கள் அணி ஆஸ்திரேலியா சென்றடைந்தது.
வருகிற 29-ந் தேதி....
-
குண்டு வைக்க சதி: டெல்லியில் 2 பயங்கரவாதிகள் கைது
24 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
பீகாரில் என்.டி.ஏ. ஆட்சிக்கு வந்தால் நிதிஷ் குமாரால் முதல்வராக முடியாது தேஜஸ்வி யாதவ் பிரச்சாரம்
24 Oct 2025பாட்னா: என்.டி.ஏ.
-
தி.மலை நீர் நிலைகளிலும், மலைப்பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு
24 Oct 2025சென்னை: மலைப் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கனமழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு
24 Oct 2025நாகப்பட்டினம்: வடகிழக்கு மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அமைச்சர் பன்னீர் செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா
24 Oct 2025மும்பை: மகளிர் உலகக் கோப்பை போட்டி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
-
சேலம் அருகே விபத்தில் 3 பேர் பலி
24 Oct 2025உளுந்தூர்பேட்டை: சேலம் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
வருகிற 30-ம் தேதி தென் கொரியாவில் சீன அதிபர் ஜின் பிங்கை சந்திக்கிறார் ட்ரம்ப்
24 Oct 2025வாஷிங்டன், தென்கொரியாவில் வருகிற 30-ம் தேதி சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேசுகிறார்.
-
ஆசிய இளையோர் கபடி இறுதிப்போட்டி: ஈரான் அணியை வீழ்த்திய இந்திய ஆடவர்-மகளிர் அணிக்கு தங்கம்
24 Oct 2025மனாமா: ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி 2025 தற்போது பஹ்ரைனில் மனாமா நடைபெற்று வருகிறது.
-
ஆந்திரா, கர்னூல் மாவட்டத்தில் பயங்கரம்: ஆம்னி பேருந்து தீ விபத்தில் 23 பேர் உடல் கருகி உயிரிழப்பு 18 பேர் படுகாயம் - மாவட்ட ஆட்சியர் தகவல்
24 Oct 2025கர்னூல்: ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஐதராபாத்-பெங்களூரு தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 23 பேர் பலியானதாகவும், 18 பேர் மருத்துவமனையில் சிகிச்ச
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-10-2025.
24 Oct 2025 -
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி ஆர்.ஜே.டி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது கடும் தாக்கு
24 Oct 2025பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார்.
-
என்றும் மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
24 Oct 2025சென்னை: மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.


