எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
திருநெல்வேலி : மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றும் விவகாரம் மற்றும் அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையம் அமைத்துள்ள குழு நேற்று மாஞ்சோலை சென்று விசாரணை நடத்தியது.
மாஞ்சோலை தேயிலை தோட்டங்களின் ஒப்பந்த காலம் 2028-ம் ஆண்டுடன் முடிவடையுள்ளதால் அதற்கு முன்னதாகவே அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு மின்சாரம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட மனித உரிமை ஆணையம், இது குறித்து விசாரிக்க தலைமை விசாரணை இயக்குநர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, இந்த குழுவானது மாஞ்சோலை பகுதிக்கு நேரில் சென்று ஒரு மாத காலத்திற்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில் தலைமை விசாரணை இயக்குநர் அடங்கிய குழுவானது நேற்று நெல்லை சென்றது. இந்தக் குழுவானது மாஞ்சோலைக்கு நேரில் சென்று மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அங்குள்ள மக்களிடம் விசாரணை நடத்தியது.
இந்த குழுவில் தேசிய மனித உரிமை ஆணைய விசாரணை குழு அதிகாரிகள் ரவி சிங் (துணை காவல் கண்காணிப்பாளர், யோகேந்திர குமார் திரிபாதி (ஆய்வாளர்) இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் தொழிலாளர் துறையின் தோட்டங்கள் பிரிவின் உதவி ஆணையர் விக்டோரியா மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குநர் இளையராஜா ஆகியோருடன் நெல்லையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் ஆலோசனை நடத்தினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


