எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் 1.39 லட்சம் இளைஞர்கள், மகளிருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்தும், அதன் மூலம் மாநிலத்துக்கு கிடைத்த தொழில் முதலீடு குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி இருந்தன. இந்நிலையில், அது தொடர்பாக விளக்கம் அளித்து விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றது முதல் தொழில் வளர்ச்சிக்கு அளித்து வரும் அளப்பரிய ஊக்கம் காரணமாகப் பல்வேறு புதிய தொழிற்சாலைகள் மாநிலத்தில் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம் இளைஞர் சமுதாயத்தினர் வேலை வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர்.
2021-ம் ஆண்டில் திராவிட மாடல் ஆட்சி தொடங்கிய பின் 2030-ம் ஆண்டிற்குள் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி பெற்ற மாநிலமாகும் எனும் இலக்குடன் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தப்பட்டு, புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
முதற்கட்டமாக, முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற பெயரில் சென்னை கோயம்புத்தூர், தூத்துக்குடி ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடுகள் மூலம் ரூ.1,90,803 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, 2,80,600 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
இரண்டாம் கட்டமாக, ஐக்கிய அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு 17 ஆயிரத்து 371 பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துகிற வகையில், 7 ஆயிரத்து 441 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் பெறப்பட்டன.
மூன்றாம் கட்டமாக, 2024 ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவாக, 631 ஒப்பந்தங்கள் மூலம் 6,64,180 கோடி ரூபாய் முதலீடுகளும், அவற்றின் மூலம் 14,54,712 பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளும் 12,35,945 பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் என மொத்தம் 26,90,657 வேலைவாய்ப்புகளுக்கு உறுதி செய்யப்பட்டன.
நான்காம் கட்டமாக, ஜனவரி 27, 2024 அன்று புறப்பட்டு ஸ்பெயின் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்று அங்குள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சக அதிகாரிகள், ஸ்பெயின் தொழில் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள், இன்வெஸ்ட் ஸ்பெயின் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆகியோரைச் சந்தித்து தமிழகத்தில் உள்ள தொழில் வாய்ப்புகளையும், அரசு வழங்கும் சலுகைகளையும், கிடைக்கும் திறன் வாய்ந்த மனித வளத்தையும் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட வருமாறு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அவற்றின் பயனாக ரூ.3,440 கோடி ரூபாய் அளவிற்குத் தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
5-வது கட்டமாக, முதல்வர் ஸ்டாலின், 22-9-2024 அன்று அமெரிக்கா பயணம் மேற்கொண்டு உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களைச் சந்தித்து தமிழ்நாட்டில் உள்ள தொழில் வாய்ப்புகளையும் ஆற்றல் வாய்ந்த மனித வளங்களையும் எடுத்துரைத்து தொழில் தொடங்கிட வருமாறு அழைப்பு விடுத்தார்கள். அதன் பயனாக அமெரிக்காவில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. அந்த ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 11,516 புதிய வேலை வாய்ப்புககள் உருவாக்கப்பட்டுள்ளன.
தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த 21-8-2024 அன்று, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைச் சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 17,616 கோடி ரூபாய் முதலீட்டில் 19 தொழில்சாலைகளைத் திறந்து வைத்துள்ளார்.
19 புதிய தொழிற்சாலைகளை தொடங்கி வைத்ததுடன், அதே நாளில் முதல்வர் ஸ்டாலின் 51,157 கோடி ரூபாய் முதலீட்டிலான 28 புதிய தொழிற்சாலைகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார். அந்தத் தொழிற்சாலைகளின் வாயிலாக, 41 ஆயிரத்து 835 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இவற்றுடன், ரூ.9,000 கோடி முதலீட்டில் 5,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தித் தொழிற்சாலை அமைப்பதற்காக ராணிப்பேட்டைக்கு நேரடியாகச் சென்று அங்கு சிப்காட் பனப்பாக்கம் தொழிற் பூங்காவில் அடிக்கல் நாட்டியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
இத்தொழிற்சாலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2024 மார்ச் மாதம் நடைபெற்று 6 மாதங்களில் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது என்பது திராவிட மாடல் அரசு தொழில் வளர்ச்சியில் கொண்டுள்ள அக்கறைக்குச் சிறிய சான்றாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிட மாடல் அரசு 3 ஆண்டுகளில் மொத்தம் 31 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கத்தக்க வகையில் ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு முதலில் 27 புதிய தொழிற்சாலைகளை திறந்து வைத்துள்ளது. அத்துடன் மேலும் 19 தொழிற்சாலைகள் 17,616 கோடி ரூபாய் முதலீட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 46 புதிய தொழிற்சாலைகள் இதுவரை திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு தொழிற்சாலைகள் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றின் காரணமாக திராவிட மாடல் அரசின் தொழில் வளர்ச்சி சாதனைகள் இந்திய அளவில் சிறந்து விளங்குகின்றன இதனை ஓரிரு நாட்களுக்கு முன் மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
செங்கோட்டையன் நீக்கம் ஏன்? - இ.பி.எஸ். பரபரப்பு விளக்கம்
01 Nov 2025சேலம் : செங்கோட்டையன் கட்சியில் இருந்து ஏன் நீக்கப்பட்டார் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். அப்போது அ.தி.மு.க.
-
முதியோர்- மாற்றுத்திறனாளிகளுக்கான 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தின் வயது வரம்பு தளர்வு
01 Nov 2025சென்னை, வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்திற்கான வயது வரம்பை 70 வயதில் இருந்து 65 வயதாக தமிழக அரசு தளர்த்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-11-2025.
01 Nov 2025 -
மண்டல பூஜைக்காக சபரிமலையில் நடை வரும் 16-ம் தேதி திறப்பு
01 Nov 2025திருவனந்தபுரம் : சபரிமலையில் மண்டல பூஜைக்காக வருகிற 16-ம் தேதி முதல் நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆந்திரா கூட்ட நெரிசல்: பிரதமர் மோடி இரங்கல்
01 Nov 2025விசாகப்பட்டினம் : ஆந்திரா கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
மருத்துவமனையில் இருந்து ஷ்ரேயாஸ் டிஸ்சார்ஜ்
01 Nov 2025சிட்னி : ஷ்ரேயாஸ் அய்யர் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
விலா பகுதியில்...
-
அதிநவீன சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன எல்.வி.எம்.–3 எம்5 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
01 Nov 2025திருப்பதி, கடலோர எல்லைகளைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சுமார் ரூ.1,600 கோடியில் 4,410 கிலோ எடை கொண்ட அதிநவீன சிஎம்எஸ்–03 செயற்கைக்கோள் எல்.வி.எம்.-3 ராக்கெட
-
சட்டப்பேரவையில் அ.தி.மு.க. அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை : சபாநாயகர் அப்பாவு பேட்டி
01 Nov 2025நெல்லை : அ.தி.மு.க. அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
-
தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் 70,449 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்
01 Nov 2025சென்னை : தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் 70,449 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்திய கலாச்சாரம் குறித்து ராகுலுக்கு தெரியவில்லை : பீகார் பிரச்சாரத்தில் அமித்ஷா தாக்கு
01 Nov 2025பாட்னா : ராகுலுக்கு இந்திய கலாச்சாரம் தெரியவில்லை என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
கடலில் மூழ்கி உயிரிழந்த 4 பெண்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
01 Nov 2025சென்னை : பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக 4 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது : சத்தீஸ்கரில் பிரதமர் மோடி பேச்சு
01 Nov 2025ராய்ப்பூர் : மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உலகில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் முதலில் உதவிக்க
-
அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு: தான்சானியா வன்முறையில் 700 பேர் பலி
01 Nov 2025டொடோமா : கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறையில் 700 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தொழில்நுட்ப வலிமையால் ஆபரேஷன் சிந்தூர் கொள்கை : ராணுவ தலைமை தளபதி பெருமிதம்
01 Nov 2025போபால் : ஆபரேஷன் சிந்தூர் கொள்கை, தொழில்நுட்ப வலிமையால் மேற்கொள்ளப்பட்டது என்று ராணுவ தலைமை தளபதி தெரிவித்தார்.
-
இந்தியாவின் தொலைநோக்கு பார்வை தெளிவாக உள்ளது : மலேசியாவில் ராஜ்நாத் சிங் பேச்சு
01 Nov 2025கோலாலம்பூர் : இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை எப்போதும் தெளிவாக உள்ளது என்றும், அனைத்து வித அழுத்தங்களில் இருந்தும் இந்தோ - பசிபிக் விடுபட வேண்டும் என்பதே இந்தியாவின் க
-
கொள்முதல் விரைவாக நடைபெறுகிறது: லாரிகளில் நெல் எடுத்து செல்வதில் எந்த தாமதமும் இல்லை: அமைச்சர்
01 Nov 2025சென்னை : நெல் கொள்முதல் விரைவாக நடைபெறுகிறது என்றும் லாரிகளில் நெல் எடுத்துச் செல்வதில் எந்த தாமதமும் இல்லை என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
ஆந்திர பிரதேசத்தில் சோகம்: கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பரிதாபமாக பலி
01 Nov 2025விசாகப்பட்டினம் : ஆந்திராவில் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பரிதாபமாக பலியான சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
நெல் கொள்முதல் குறித்து அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
01 Nov 2025சென்னை : நெல் கொள்முதல் குறித்து அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.
-
ரஷ்யப் படைகளுக்கு வினியோகம் செய்யும் முக்கிய எரிபொருள் பைப்லைனை தாக்கி அழித்தது உக்ரைன் படைகள்
01 Nov 2025மாஸ்கோ : ரஷ்யாவின் எரிபொருள் கட்டமைப்புகளை குறி வைத்து உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
நான் மக்களுக்காக உழைத்தேன், என் குடும்பத்திற்காக அல்ல: நிதிஷ் குமார்
01 Nov 2025பாட்னா, பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நிதிஷ்குமார் நான் மக்களுக்காக உழைத்தேன் என் குடும்பத்திற்காக அல்ல என்று தெரிவித்தார்.
-
கண்ணகி நகரில் உருவாகும் கபடி மைதானத்தை நேரில் ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி
01 Nov 2025சென்னை, கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் உள்ளரங்க கபடி மைதானம் அமைக்கும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
-
பெங்களூரு-எர்ணாகுளம் இடையே புதிய வந்தே பாரத் ரயில் இயக்கம் : ஈரோடு, கோவை வழியாக - நேரம் அறிவிப்பு
01 Nov 2025கொச்சி : கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருவிற்கு விரைவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்படவுள்ளது.
-
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை : முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
01 Nov 2025மதுரை : அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்த நடிகர் அஜித்
01 Nov 2025சென்னை : கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல என்று நடிகர் அஜித்குமார் முதல்முறையாக அந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவில் வறுமையில் இருந்து விடுபட்ட முதல் மாநிலம் கேரளா : முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
01 Nov 2025திருவனந்தபுரம் : வறுமை விகிதம் அதிகரித்திருந்த 1961-62 காலகட்டத்தில் இருந்து மாநிலம் வளர்ச்சியடைந்து வந்துள்ளது என பினராயி விஜயன் பேசியுள்ளார்.


