எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, சென்னை விமானநிலையத்தில் புதிதாக காவேரி மருத்துவமனையின் 4 கிளினிக்குகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையங்களான டெர்மினல் 1, 4 மற்றும் சர்வதேச முனையமான டெர்மினல் 2, சென்னை விமான நிலைய கார்ககோ பகுதி என மொத்தம் 4 இடங்களில் காவேரி மருத்துவமனை புதிதாக அவசரகால சிகிச்சை மைய கிளினிக்குகளை துவக்கியுள்ளது.
சென்னை விமான நிலையத்தின் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில் பயணிக்க வருபவர்கள், சென்னைக்கு வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளில் யாருக்கேனும் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டால், அவர்களுக்கு உடனடியாக காவேரி மருத்துவமனை கிளினிக்கில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படும்.
அதே போல் பயணிகள் மட்டுமின்றி, விமான நிலைய மற்றும் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் உள்பட பல்வேறு துறை பணியாளர்கள், விமான சரக்கக ஊழியர்கள் யாருக்கேனும் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டால், அவர்களுக்கும் இங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்படும்.
தொடர் சிகிச்சை அளிக்க வேண்டிய நபர்களுக்கு உதவ, இங்கு 2 ஆம்புலன்ஸ்கள் 24 மணி நேரமும் தயார்நிலையில் நிறுத்தப்பட்டு இருக்கும் என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், சென்னை விமானநிலையத்தில் காவேரி மருத்துவமனையின் புதிதாக துவங்கப்பட்ட 4 அவசரகால கிளினிக்குகளின் திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி 4 கிளினிக்குகளின் செயல்பாடுகளைத் துவக்கி வைத்தார். இதில் காவேரி மருத்துவமனை நிறுவனரும் செயலாக்க தலைவருமான டாக்டர் சந்திரகுமார், சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள் ஷோபி, புல்லா, மத்திய தொழில் பாதுகாப்பு படை டி.ஐ.ஜி. அருண்சிங், இ.கருணாநிதி எம்எல்ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும்: நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள்: அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
12 Jan 2026சென்னை, மொழியும், இனமும்தான் நம்மை இணைக்கும் என்றும் நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள் என்றும் அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்
-
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் ஒரு புதிய கட்சி இணையவுள்ளது: எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல்
12 Jan 2026சென்னை, ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சி ஒன்று இணையவுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026


