எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் பஸ் விபத்துக்குள்ளானதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 36க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ராஜஸ்தானின் சலாசரில் இருந்து லஷ்மங்கர் நோக்கி தனியார் பஸ் ஒன்று நேற்று பிற்பகல் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் சிகார் மாவட்டத்தில் சாலையில் திருப்பும் போது மேம்பாலத்தின் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 36க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக லஷ்மங்கர் மற்றும் சிகார் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி புவன் பூஷன் யாதவ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


