எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐதராபாத், மக்களுக்கு அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் புனிதமாகக் கருதுவதாக பிரதமர் மோடிக்கு அளித்துள்ள பதிலில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரேவந்த் ரெட்டி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தெலங்கானா மாநிலம் குறித்தும், தெலங்கானாவை ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு குறித்தும் பல்வேறு தவறான கருத்துகள் உங்கள் அறிக்கையில் இருந்ததை பார்க்க முடிந்தது. இவ்விஷயத்தில் தெளிவுபடுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தெலங்கானாவில் டிசம்பர் 7, 2023 இல் காங்கிரஸ் அரசாங்கம் பதவியேற்றது. 10 ஆண்டு கால பாரத் ராஷ்ட்ர சமிதியின் தவறான ஆட்சிக்குப் பிறகு காங்கிரஸ் பொறுப்பேற்றதில் மாநிலம் முழுவதும் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையின் அலை வீசத் தொடங்கியது.
பொறுப்பேற்ற இரண்டு நாட்களுக்குள் தெலங்கானா அரசு தனது முதல் மற்றும் இரண்டாவது வாக்குறுதிகளை நிறைவேற்றியது. தெலங்கானாவின் அனைத்து அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், ராஜீவ் ஆரோக்கியஸ்ரீ திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு ஆகிய இரண்டு திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன.
கடந்த 11 மாதங்களில் தெலங்கானாவைச் சேர்ந்த சகோதரிகள் மற்றும் தாய்மார்கள் ஒரு ரூபாய் கூட கட்டணம் செலுத்தாமல் மாநிலம் முழுவதும் 101 கோடி இலவச பேருந்து பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இதன்மூலம், அவர்கள் ஒரு வருடத்திற்குள் ரூ.3,433.36 கோடியை மிச்சப்படுத்தியுள்ளனர்.
ஆட்சிக்கு வந்து ஓராண்டை முடிப்பதற்கு முன்பே, மாநில அளவிலான விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். ரூ. 2,00,000 வரையிலான அனைத்து விவசாயக் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 22 லட்சத்து 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இப்போது எந்தக் கடனும் இல்லாமல், ராஜாவைப் போல வாழ்கிறார்கள். 25 நாட்களில் விவசாயிகளின் கணக்கில் 18,000 கோடி ரூபாய் செலுத்தியுள்ளோம். 200 யூனிட்கள் வரை வீடுகளுக்கு மின் கட்டணம் இல்லாமல் இலவச மின்சாரம் கிடைப்பதால் பெண்கள் எங்களை ஆசிர்வதிக்கிறார்கள்.
பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சியின் கீழ் இருந்த இருள் மற்றும் விரக்தி சூழலை மாற்றியுள்ளோம். இருளை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம். காலை சூரியனைப் போல தெலங்கானா இப்போது பிரகாசித்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


