எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களில் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார். இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி நேற்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
இந்நிலையில், சுதர்சன் பட்நாயக் பூரி கடற்கரையில் 5 அடி உயரமுள்ள விராட் கோலி மணல் சிற்பத்தை வரைந்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதற்காக 4 டன் மணலை பயன்படுத்தி உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி, இதுவரை 118 டெஸ்ட் போட்டிகளில் 29 சதம், 31 அரைசதங்களுடன் 9,040 ரன்கள் குவித்துள்ளார். 295 ஒருநாள் போட்டியில் 50 சதங்கள், 72 அரைசதங்களுடன் 13,906 ரன்கள் குவித்துள்ளார்.மேலும், 125 டி20 போட்டியில் ஒரு சதம், 38 அரைசதங்களுடன் 4,188 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
__________________________________________________________________________________________
தோல்வி குறித்து டெண்டுல்கர்
டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் நியூசிலாந்து தொடரை முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்தது. இதனால் எளிதில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணிக்கு தற்போது சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "0 - 3 என சொந்த மண்ணில் தோல்வி அடைவது ஜீரணிக்க முடியாத விஷயம். தோல்வி குறித்து நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது. இது தயாராவதில் தவறு நடந்ததாலா? சுமாரான ஷாட் செலக்சன் காரணமாகவா? சுமாரான பயிற்சி காரணமாகவா? என்று சோதிக்க வேண்டும். 3-வது போட்டியின் முதல் இன்னிங்சில் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரிஷப் பண்ட் 2 இன்னிங்சிலும் அசத்தினார். தொடர் முழுவதும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்திற்கு முழு பெருமை. இந்தியாவில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெறுவது எவ்வளவு சிறந்த முடிவு" என்று பதிவிட்டுள்ளார்.
__________________________________________________________________________________________
டோனிக்கு பாண்டிங் புகழாரம்
டோனி அணியில் கேப்டனாக இல்லாவிட்டாலும் அவர் சிறந்த தலைவர் மற்றும் வழிகாட்டி என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், " இரண்டு வருடங்களுக்கு முன்பு டோனி மோசமான ஐ.பி.எல். சீசன்களை கொண்டிருந்தார். ஆனால் கடந்த ஆண்டு அவர் பழைய டோனியாக திரும்பி வந்து போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தினார். சிஎஸ்கே அணி அவரை முழு சீசனுக்கும் பெற முடியாமல் போகலாம்.
ஆனால் அவரிடமிருந்து சிறந்ததை பெறுவதற்கு, அவருக்கு தேவையான ஓய்வு கொடுத்து அணி நிர்வாகம் அவரை பயன்படுத்தும். அவர் எந்த அணியில் இருந்தாலும் கேப்டனாக இல்லாவிட்டாலும் கூட, சிறந்த தலைவராகவும் சிறந்த வழிகாட்டியாகவும் இருப்பார். தற்போது சிஎஸ்கே அணியில் விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் அவர் மிகவும் முக்கியமானவர். அவர் களத்திற்கு வெளியே இருந்தும் அணிக்கு தேவையானதை கொண்டு வருவார். அவர் இப்பொழுதும் கடைசி 20 பந்துகளில் பேட்டிங் செய்து போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். அவர் இப்படி விளையாடுவதன் மூலமும் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியும் என்று காட்டுகிறார்" என கூறினார்.
__________________________________________________________________________________________
இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம்
நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது. இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய பெண்கள் அணி கைப்பற்றியது. இந்நிலையில், பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா - நியூசிலாந்து ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
அதன்படி பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் (654 புள்ளி) 3 இடங்கள் முன்னேறி 9வது இடத்திற்கு வந்துள்ளார். தீப்தி சர்மா (538 புள்ளி) ஒரு இடம் முன்னேறி 19வது இடத்திற்கு வந்துள்ளார். பேட்டிங் பட்டியலில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (728 புள்ளி) 4வது இடத்தில் உள்ளார். பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், தீப்தி சர்மா (703 புள்ளி) 2வது இடத்தில் உள்ளார். ரேனுகா சிங் தாகூர் (424 புள்ளி) 4 இடம் முன்னேறி 32வது இடத்திற்கு வந்துள்ளார். ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா (378 புள்ளி) 4வது இடத்தில் உள்ளார்.
__________________________________________________________________________________________
பட்லர் கீப்பீங் செய்ய மாட்டார்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரு ஒரு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இந்நிலையில், ஒருநாள் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது போட்டி இன்று நடைபெறுகிறது. இதையடுத்து டி20 தொடர் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டி20 தொடருக்கு மட்டும் ஜாஸ் பட்லர் இங்கிலாந்து அணியில் இடம் பெற்றிருந்தார். இதன் காரணமாக அவர் டி20 தொடரில் பங்கேற்க வெஸ்ட் இண்டீஸூக்கு சென்றுள்ளார்.
பொதுவாக கேப்டன் பொறுப்பு மட்டுமின்றி விக்கெட் கீப்பிங் பணியையும் மேற்கொள்ளும் பட்லர், வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டி20 தொடரில் விக்கெட் கீப்பிங் பணியை செய்ய மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக பில் சால்ட் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்வார் என கூறப்படுகிறது. காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள பட்லர் மீண்டும் காயம் அடைவதை தடுக்கும் பொருட்டு அவர் விக்கெட் கீப்பிங் பணியை செய்ய மாட்டார் என கூறப்படுகிறது.
__________________________________________________________________________________________
தொடரை வெல்வோம் - ஷிகர் தவான்
இந்திய அனி இந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நாம் தொடரை வெல்வோம் என ஷிகர் தவான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஆஸ்திரேலிய மண்ணில் நாம் தொடர்ந்து மூன்றாவது முறையாக தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு இருப்பதாகவே நினைக்கின்றேன். கடந்து இரண்டு தொடர்களாக ஆஸ்திரேலிய மண்ணில் நாம் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறோம். எனவே அதே மனநிலையுடன் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் ஆஸ்திரேலிய மண்ணுக்கு இந்திய அணி செல்லும். விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் ஆஸ்திரேலியாவில் அதிகளவு விளையாடி இருக்கிறார்கள். எனவே அவர்களுடைய அனுபவம் இளம் வீரர்களுக்கு நிச்சயம் கை கொடுக்கும்.
இளம் தலைமுறையினரும் நல்ல நம்பிக்கையுடன் ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உத்வேகத்துடன் இருக்கிறார்கள். தங்களுடைய திறமையை அவர்கள் ஏற்கனவே நிரூபித்து இருக்கிறார்கள். இதனால் ஆஸ்திரேலிய மண்ணில் ரன் குவிப்பது என்பது அவர்களுக்கு நிச்சயம் சாதகமான விஷயமாகவே இருக்கும். அது மட்டுமில்லாமல் ஆஸ்திரேலிய மண்ணில் வேகம் என்பது ஒரு சவாலாக இருக்கும். அதற்கு ஏற்றார் போல் நமது வீரர்கள் தயாராகிக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். பயிற்சியாளர் கம்பீர், கேப்டன் ரோகித் சர்மா கூட்டணியில் இந்திய அணியில் திறமை வாய்ந்த சீனியர்கள், இளைஞர்கள் கலந்த வகையில் இருக்கிறார்கள் இதனால் சாம்பியன்ஸ் கோப்பையை இந்தியா வெல்லும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு
21 Oct 2025சென்னை, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
-
வட தமிழகத்தை நோக்கி நகர்கிறது புயல் சின்னம் : 15 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
21 Oct 2025சென்னை, வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக தீவிரமாகும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், புயல் சின்னம் வட தமிழகத்தை நோக்கி நகர்வதாக தெரிவ
-
தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியாது - ஆர்.பி.உதயகுமார் தகவல்
21 Oct 2025சென்னை : தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
-
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
21 Oct 2025மதுரை, மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
-
சபரிமலையில் தங்கம் மாயம்: ஐகோர்ட்டில் விசாரணை அறிக்கை தாக்கல்
21 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலையில் தங்கம் மாயம் ஆனதை தொடர்ந்து ஐகோர்ட்டில் முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை முன்னிட்டு 10 பேர் மது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025 -
மழை வெள்ள முன்னேற்பாடு பணிகள்: சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு
21 Oct 2025சென்னை : சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
விருதுநகரில் மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி : அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
21 Oct 2025விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அரசு சார்பில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ந
-
நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
21 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளா
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை
21 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
-
தங்கம் விலை சற்று சரிவு
21 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று மாலை (அக். 21) சவரனுக்கு ரூ.1,440 குறைந்து விற்பனையானது. காலையில் அதிரடியாக சவரனுக்கு ரூ.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு
21 Oct 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
ஊட்டி மலை ரயில் ரத்து
21 Oct 2025மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் ரத்துசெய்யப்பட்டது. இதனால் சற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
-
கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
21 Oct 2025புதுடெல்லி : வட கிழக்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கணித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் பாலக்காடு, கோழிக்கோடு உள்பட 10 மாவட்டங
-
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 8 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
21 Oct 2025சென்னை, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை உள்ளிட்ட 8 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதல்
-
நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
21 Oct 2025புதுடெல்லி, நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம் என நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
காவலர் வீரவணக்க நாள்: முதல் முறையாக காவலர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
21 Oct 2025சென்னை, காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் காவலர் நினைவு சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
-
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவோம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் கடிதம்
21 Oct 2025புதுடெல்லி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
-
சென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 151 மெ.டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்
21 Oct 2025சென்னை : சென்னையில் கடந்த 3 நாட்களில் 151 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
-
நடப்பு ஆண்டில் 7-வது முறையாக நிரம்பியது: மேட்டூர் அணையில் இருந்து 34 அயிரம் கன அடி நீர் திறப்பு
21 Oct 2025மேட்டூர் : காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, நடப்பாண்டில் மேட்டூர் அணை 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
போர்க்கால அடிப்படையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
21 Oct 2025சென்னை, போர்க்கால அடிப்படையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அ.தி.மு.க.
-
பரூக் அப்துல்லா பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
21 Oct 2025சென்னை : காஷ்மீரின் உரிமைகளுக்காக போராடி வரும் பரூக் அப்துல்லா பிறந்த நாள் வாழ்த்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு
21 Oct 2025வாஷிங்டன், எச்-1 பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
-
பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட்டம்: டெல்லியில் 15 மடங்கு அதிகரித்த காற்று மாசு
21 Oct 2025புதுடெல்லி : டெல்லியில் இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து மக்கள் 'பட்டாசு தீபாவளி'யை கொண்டாடியதன் எதிரொலியாக, உலக சுகாதார நிறுவனம் நிர்
-
கனமழையால் நாகை, திருவாரூரில் நீரில் மூழ்கிய குறுவை நெற்பயிர்கள்
21 Oct 2025நாகப்பட்டினம் : நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழைக்காரணமாக அயிரக்கனக்கான குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.