எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மதுரை : வடகிழக்கு பருவமழையில் 34 பேர் பலி என்பது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தோல்வி தான் காட்டுகிறது என்று மதுரையில் தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் எம்.எல்.ஏ.தெரிவித்தார்.
இது குறித்து மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது-
அக்டோபர், நவம்பர்,டிசம்பர் மூன்று மாத காலங்களிலே நமக்கு வடகிழக்கு பருவமழை இருக்கும். தற்போது தென்மேற்கு வங்க கடல் மற்றும் மன்னர் வளைகுடா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் பெரும்பாலான இடங்களிலே 13-ம் தேதி வரை ஒரு சில இடங்களிலும் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்ற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
அதனால் தமிழகத்தில் இன்று (நேற்று)கன்னியாகுமரி திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர்,மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர்,திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பொழிந்து இருக்கிறது
தற்போது வடகிழக்கு பருவமழையில் தமிழகத்தில் 34 பேர்கள் பலியாகி உள்ளதாக செய்திகள் வருகிறது. தமிழக முழுவதும் கடந்த மாதம் மழைக்கு மட்டும் 9 பெண்கள்,2 குழந்தைகள் 15 ஆண்கள் பேர் பலியாகிவிட்டது என்பது நமக்கு ஒரு வேதனை தரக்கூடிய செய்தியாக நாம் பார்க்கிறோம்.அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எப்படி எடுத்தார்கள் என்பதற்கு இந்த உயிரிழப்பு என்பது நமக்கு அதனுடைய தோல்வியை நமக்கு காட்டுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் வடகிழக்கு பருவமழை தோல்வி காரணத்தால் 34 பேர்கள் பலியாகி உள்ளனர். இந்த வடகிழக்கு பருவ மழையில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் எந்த உயிரிழப்புகள் இல்லாமல் எதிர்கொள்வோம் என்று முதலமைச்சரும், துணை முதலமைச்சரும்,அமைச்சர்களும் கூறினார்கள்.ஆனால் இன்றைக்கு நிலவரம் கலவரமாக மாறிவிட்டது.
ஆனால் இன்றைக்கு 34 பேர் பலி மட்டுமல்லாது. 500 கால்நடைகள் மழையால் இறந்து போய் உள்ளன.மழையால் 864 குடிசைகள் சேதம் அடைந்துள்ளது, அதேபோல் மழைநீரில் 89,000 ஏக்கர் வேளாண் பயிர்கள் மூழியுள்ளன, இதில் 5,856 ஏக்கர் பயிர்கள் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளன. 919 ஏக்கர் தோட்டக்கலை பயிர்கள் சேதம் அடைந்துள்ளது,முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து விட்டோம் என்று அரசு சொன்னது ஆனால் இன்றைக்கு உயிர் சேதம்,பொருள் சேதம் இன்றைக்கு எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மதுரையில் பெய்த இரண்டு நாள் மழைக்கே தத்தளித்தது, கழிவுநீருடன் கலந்து துர்நாற்றம் வீசியது ,பணியாளர்கள் இல்லை, மீட்பு பணியாளர்கள் இல்லை
இதனால் மீட்பு நடவடிக்கை இல்லை. அமைச்சர்கள் முகாமிட்டுள்ளார்கள் என்று முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தும் துறை வரியாக இடைவெளி ஏற்பட்டது.துறைக்குள் ஒருங்கிணைப்பு குழு அவசியம், ஆனால் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படவில்லை. துப்புரவு பணியாளர் பற்றாக்குறை,பம்பு செட் பற்றாக்குறை , கேபிள் மற்றும் பாதாள சாக்கடைக்கு தோண்டிய பள்ளங்களை சரிவர மூடவில்லை இதனால் நீர் தேக்கம் ஏற்பட்டு மதுரையே ஸம்பித்தது இதற்கு முழுமையான தீர்வு காணப்படவில்லை.
இதற்கு முழுமையான தீர்வை காண தாழ்வான பகுதிகளை கண்டறிந்து கூடுதலாக கவனத்தை செலுத்த வேண்டும், அதேபோல் குழுக்களை தயார் நிலை அமைக்கப்பட வேண்டும், மருத்துவ முகாம் நடத்தப்பட வேண்டும் தற்போது அக்டோபர் மாதம் முடிந்து விட்டது நவம்பர் டிசம்பர் 2 மாதங்கள் உள்ளது.இந்த நவம்பர்,டிசம்பர் காலங்களில் இருக்கக்கூடிய சூழ்நிலையிலே இந்த அரசு விழித்துக் கொள்ளுமா?. முதலமைச்சர் துறை வாரிய ஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார். ஆய்வு கூட்டம்,மற்றும் அறிக்கையால் மக்களை காப்பாற்ற முடியாது. களப்பணியால்தான் காக்க முடியும். விளம்பரம் வெளிச்சம் மக்களுக்கு பயன் தராது. வடகிழக்கு பருவமழை குறித்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து எடப்பாடியார் வலியுறுத்தி வருகிறார்
ஆனால் அரசு காது கொடுத்து கேட்கவில்லை. இந்த அரசிடம் கனிவு ,அக்கறை இல்லை ஆனால் ஆணவ போக்குடன் உள்ளது இது அழிவுக்கு தான் கொண்டு செல்லும் இது மக்களுக்கு விடியல் தேடுகின்ற முயற்சியாக நமக்கு காணவில்லை மக்களை நீங்கள் கைவிட்டால் மக்களை உங்களை கைவிடும் காலம் நிச்சயம் வரும். இன்றைக்கு மக்களே அரசு காப்பாற்றாது,
நமக்கு நாமே காப்பாற்றும் சூழ்நிலை உருவாகிவிட்டது என்று கூறி வருகிறார்கள். ஆகவே வருகின்ற வடகிழக்கு பருவமழையில் முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
சற்று குறைந்த தங்கம் விலை
12 Nov 2025சென்னை : தங்கம் விலை நேற்று சற்று குறைந்துள்ளது.
-
இங்கு திறமையானவர்கள் இல்லை: ஹெச் -1பி நடைமுறையில் பின்வாங்கிய அதிபர் ட்ரம்ப்
12 Nov 2025வாஷிங்டன் : வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில் அமெரிக்காவில் திறமையானவர் இல்லை என்றும், அதனால் ஹெச் -1பி விசா
-
செவாலியர் விருது அறிவிக்கப்பட்ட தோட்டா தரணிக்கு முதல்வர் வாழ்த்து
12 Nov 2025சென்னை : செவாலியர் விருது அறிவிக்கப்பட்ட தோடா தரணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஐ.சி.சி. பேட்டர்கள் தரவரிசை: டாப் 10-ல் 3 இந்திய வீரர்கள்
12 Nov 2025துபாய் : ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலின் புதிய பட்டியலில் ஒருநாள் பேட்டர் தரவரிசையில் டாப் 10-ல் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
-
கனடா அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
12 Nov 2025ஒண்டாரியா : கனடா அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-11-2025.
12 Nov 2025 -
அமைச்சர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
12 Nov 2025சென்னை : தமிழக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அமைச்சர்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நிலவில் கால் பதிக்க தயாராகும் சீனா
12 Nov 2025பெய்ஜிங் : 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.
-
டெல்லி கார் வெடிப்பு: மேலும் ஒரு டாக்டர் கைது
12 Nov 2025புதுடெல்லி : டெல்லியில் கார் குண்டு வெடிப்பில் மேலும் ஒரு டாக்டர் கைது செய்யப்பட்டார்.
-
அசாமில் நிலநடுக்கம்
12 Nov 2025திஸ்பூர் : அசாமில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
பூடான் பயணம் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்
12 Nov 2025புதுடெல்லி : பூடான் மன்னருடனான சந்திப்பு மிகவும் அற்புதமானது என்று பிரதமர் மோடி சமூக வலைத்தள பதிவில் பதிவிடடுள்ளார்.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: 10 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு : தேசிய புலனாய்வு முகமை நடவடிக்கை
12 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை, 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.
-
பீகார் தேர்தலில் அதிகளவில் வாக்களித்த பெண்கள்: பா.ஜ.
12 Nov 2025பாட்னா : பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களித்தது ஒரு வரலாற்று மாற்றம் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
-
தோட்டா தரணிக்கு இ.பி.எஸ். வாழ்த்து
12 Nov 2025சென்னை : செவாலியர் விருது அறிவிக்கப்பட்ட கவிஞர் தோட்டா தரணிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மாலியில் சிக்கிய தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Nov 2025சென்னை : மாலியில் சிக்கிய தமிழர்களை மீட்க தூதரகம் வாயிலாக முன்னெடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த மத்திய அரசுக்கு இ.பி.எஸ். எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
ராயபுரத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்: அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு
12 Nov 2025சென்னை : சென்னை துறைமுகம் மற்றும் ராயபுரம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர்
-
எகிப்து: விபத்தில் 2 பேர் பலி
12 Nov 2025கெய்ரோ, எகிப்து: சுற்றுலா பஸ் மீது லாரி மோதி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 39 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் அறிவிப்பு
12 Nov 2025சென்னை : டிசம்பர் 16-ந் தேதி முதல் டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.
-
டிச. 17-ல் சிறை நிரப்பு போராட்டம்: அன்புமணி
12 Nov 2025சென்னை : டிசம்பர் 17-ல் சிறை நிரப்பு போராட்டம் நடைபெறும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்: ஜிம்பாப்வே உள்ளிட்ட மேலும் 3 அணிகளை சேர்க்கிறது ஐ.சி.சி.
12 Nov 2025துபாய் : துபாயில் சமீபத்தில் நடந்த ஐ.சி.சி.
-
சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரம்: தி.மு.க. அரசு மீது விஜய் மறைமுகமாக விமர்சனம்
12 Nov 2025சென்னை : சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அர்த்தமற்ற வாதத்தை வைத்துத் தப்பிக்கும்போது, எங்கே போனது அவர்களின் சமூக நீதிக் கொள்கை?
-
இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பு சம்பவம்: பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா கடும் கண்டனம்
12 Nov 2025புதுடெல்லி : இஸ்லாமாபாத் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது இந்திய ஆதரவுக்குழு தான் என்று பாகிஸ்தான் குற்றச்சாட்டியுள்ள நிலையில், கட்டுக் கதைகளை சுமத்துவது பாகிஸ்தானின் தந்தி
-
தமிழ்நாட்டில் இதுவரை 78 சதவீத எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் : தேர்தல் ஆணையம் தகவல்
12 Nov 2025சென்னை : தமிழ்நாட்டில் 5 கோடி(78%) எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: காயமடைந்தவர்களை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்
12 Nov 2025புது டெல்லி, டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர்.
-
சீனாவில் புதிதாக திறக்கப்பட்ட பாலம் நிலச்சரிவால் இடிந்தது
12 Nov 2025பெய்ஜிங் : சீனாவில் புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில் நிலச்சரிவால் இடிந்து விழும் நிலையில் உள்ளது.


