எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பெய்ஜிங் : இந்தியாவுக்குள் பாய்ந்தோடும் பிரம்மபுத்திரா ஆற்றுக்குக் குறுக்கே உலகிலேயே மிகப்பெரிய அணையைக் கட்ட சீனா திட்டம்.
இந்திய எல்லையையொட்டி, தனது ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தில் பாய்ந்தோடும் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே சுமாா் ரூ.11.17 லட்சம் கோடி செலவில், உலகின் மிகப் பெரிய அணையை கட்ட சீனா முடிவு செய்துள்ளது.
இமயமலை அமைந்திருக்கும் பகுதியில் உள்ள மிகப் பெரிய பள்ளத்தாக்கில் வளைந்து அருணாசல பிரதேசத்துக்குள்ளும், பின்னா் வங்கதேசத்துக்குள்ளும் பிரம்மபுத்திரா ஆறு பாயும் நிலையில், அந்தப் பள்ளத்தாக்கில்தான் அணை கட்டப்பட உள்ளது என்பது, மிகப்பெரிய புவியியல் மாறுபாட்டை ஏற்படுத்ததலாமோ, அதனால் இயற்கைப் பேரிடர் நேரிடுமோ என பல்வேறு ஐயங்களையும் எழுப்புகிறது. அணை கட்ட திட்டமிட்டிருக்கும் பகுதிக்கு அருகே, இந்த வாரத் தொடக்கத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், இந்தியாவின் அச்சத்தை அதிகரிக்கவே செய்திருக்கிறது.
ஐக்கிய நாடுகள் அவையின் முன்னாள் பொதுச்செயலாளர் கோஃபி அன்னான் ஒருமுறை பேசுகையில், குடிநீருக்குத்தான் கடுமையான போட்டி இருக்கும், எதிர்காலத்தில் இந்த குடிநீரே, மோதல் மற்றும் போர்களுக்குக் காரணமாக அமையும் என்று கூறியிருந்தார்.
இந்திய எல்லையையொட்டி, தனது ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தில் பாய்ந்தோடும் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே சுமாா் ரூ.11.17 லட்சம் கோடி செலவில், உலகின் மிகப் பெரிய அணையை கட்ட சீனா முடிவு செய்துள்ளது.
இந்தியா - சீனா இடையே ஏற்கனவே பல பிரச்னைகள் இருக்கும் நிலையில், புதிதாக ஒரு பெரிய சிக்கலை ஏற்படுத்தும் வகையில், பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய பாலத்தைக் கட்டுவதற்கு சீன அரசு கடந்த மாதம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பிரம்மபுத்திரா ஆறு இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன்பு, சீனத்தில் மிகப்பெரிய வளைவில் பயணித்து நாட்டுக்குள் நுழைகிறது. இங்குதான் மிகப்பெரிய மின்உற்பத்தி திறன் கொண்ட அணையை அமைக்க திட்டமிட்டுள்ளது சீனா.
ஆனால், இந்த அணை கட்டப்பட்டால், இந்தியா மற்றும் வங்கதேசத்துக்குள் பாயும் நீர் தடைபடும் என இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
இது குறித்துப் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால், சீனா கட்ட உத்தேசித்துள்ள அணைப் பகுதியை இந்தியா தொடர்ந்து கண்காணிக்கும், நமது நலன் எந்த வகையிலும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். ஆனால், இந்த அணை கட்டப்படுவதன் பின்னணியில், மிகப்பெரிய நிலச்சரிவு அபாயம் ஏற்படுத்துவதும், இந்தியாவுக்குள் வறட்சி அல்லது வெள்ளத்தை ஏற்படுத்தும் நோக்கமும் இருக்கலாம் என்றே ஆரம்பம் முதல் இந்திய நிபுணர்கள் எச்சரிக்கை ஒலியை எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசு உச்சபட்ச எச்சரிக்கையுடன் இருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிமை தெரிவித்திருந்தார். இந்த வாரம் திபெத்தில் நேரிட்ட மிகப் பயங்கர நிலநடுக்கத்தில் 126 பேர் பலியானார்கள். இந்த சம்பவம், அப்பகுதி, நிலநடுக்கத்தால் பாதிக்கும் அபாயம் கொண்ட இடமாக இருப்பதையே உணர்த்துகிறது. அதுபோன்ற ஒரு இடத்தை சீனா, உலகிலேயே மிகப்பெரிய அணை கட்ட தேர்ந்தெடுத்திருப்பதில் எப்படி நல்ல உள்நோக்கம் இருக்கும் என்று கருத முடியும் எனவும் கேள்விகள் எழுகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


