எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிதம்பரம், சிதம்பரம் நடராஜர் கோயிலில், சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின் நடராஜர் கோவில் தெப்போற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
கடலூர் மாவட்டம். சிதம்பரம் நடராஜர் கோவில் தரிசன திரு விழாவின் போது நிறைவு நாளன்று சிதம்பரம் ஞானப்பிரகாசர் குளத்தில் தெப்போற்சவம் நடைபெற்று வருவது தொன்று தொட்டு வழக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது குளம் சீரமைக்கப்பட்டு சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தெப்போற்சவம் விமரிசையாக கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்றது.
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் தென் கிழக்குப் பகுதியில் சுமார் 2 கி.மீ. தொலைவில், ஞானபிரகாசம் நகர் எனும் பகுதியில் ஞானபிரகாசம் குளம் பெரிய நீர்நிலையாக விளங்குகிறது. இந்தப் பெருங்குளத்தில் ஆனி மற்றும் மார்கழி ஆருத்ரா தரிசன மஹோத்ஸவ காலத்தின் முத்துப்பல்லக்கு திருவிழாவிற்கு அடுத்த நாளில் தெப்பம் அமைக்கப்பெற்று, அதில் ஸ்ரீ நடராஜர் கோவிலின் சந்திரசேகரர் எழுந்தருளி குளத்தை வலம் வரும் தெப்பல் உற்சவம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ஏறக்குறைய நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை நாட்டில் உள்ள நல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி நகரைச் சேர்ந்த ஞானபிரகாசர் எனும் பெருமானார் தில்லைத் திருத்தலத்தின் மீது பெரும்பற்று கொண்டு சிதம்பரம் வந்து தங்கியிருந்து, சிவகாமி அம்மன் ஆலயத்தின் திருப்பணிகளிலும், ஞானபிரகாசம் குளம் திருப்பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார் என வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இச்சிறப்பு வாய்ந்த குளம் பராமரிப்பின்றி பாழடைந்து போனதால், கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக தெப்போற்சவம் நடைபெறாமல் நின்று போனது. இந்நிலையில் தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், சிதம்பரம் நகரமன்ற தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தீவிர முயற்சியால் தெப்ப உற்சவம் நடைபெறும் ஞானப்பிரகாசர் குளம், சிதம்பரம் நகராட்சி சார்பில் ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குளம் தூர்வாரப்பட்டு, நான்கு புறமும் மின்விளக்குகளுடன் நடைபாதையும், குளத்தின் நடுவே நீராழி மண்டபம் அமைக்கப்பட்டு அண்மையில் திறக்கப்பட்டது. தெப்பல் உற்சவத்தை முன்னிட்டு கோவில் கமிட்டி செயலாளர் உ.வெங்கடேச தீட்சிதர், கட்டளை தீட்சிதர்கள் பாலதண்டாயு தீட்சிதர், பட்டு தீட்சிதர் கட்டளைதாரர்கள் நடராஜன், வனஜா, குமரகுரு கண்ணன் ஆகியோரால் நீராழி மண்டபம் அமைக்கப்பட்டு அண்மையில் திறக்கப்பட்டது.
இந்நிலையில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு ஜன.15-ம் தேதி புதன்கிழமை இரவு தெப்பல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. தெப்பல் உற்சவத்தில் நடராஜர் கோயில் உற்சவரான சிவகாமசுந்தரி அம்பாள் சமேத சந்திரசேகரர் எழுந்தருளி குளத்தை வளம் வந்து நீராழி மண்டபத்தில் வீற்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். நீராழி மண்டபத்தில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் நகரமன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார், ஆணையாளர் டி.மல்லிகா, பொறியாளர் சுரேஷ், மூத்த மருத்துவர் கே.ஆர்.முத்துக்குமரன், நகரமன்ற துணைத் தலைவர் முத்துக்குமார், நகரமன்ற உறுப்பினர்கள் அப்புசந்திரசேகரன், தில்லை ஆர்.மக்கீன், ஏஆர்சிமணிகண்டன், பூங்கொடி தியாகராஜன், திமுக மாவட்ட பிரதிநிதிகள் ரா.வெங்கடேசன், வி.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, நகர துணைச் செயலாளர்கள் பா.பாலசுப்பிரமணியன், ஆர்.இளங்கோ, மக்கள் அருள், சிதம்பரம் நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் சமூகப்பணி சங்க அமைப்பாளர் மு.செங்குட்டுவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தெப்பல் உற்சவத்தை முன்னிட்டு ஞானப்பிரகாசர் குளம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.
-
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
22 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
தமிழக அரசியலில் பரபரப்பு: டி.டி.வி.தினகரன் - அண்ணாமலை சந்திப்பு
22 Sep 2025சென்னை : டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். இந்நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: சிங்கப்பூரில் இந்தியருக்கு 4 ஆண்டு சிறை
22 Sep 2025சிங்கப்பூர், சிங்கப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியருக்கு சாட்டையடி தண்டனையும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 13 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தேர்வு செய்யப்பெற்ற 13 நபர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்கு
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 24 பேர் பலி
22 Sep 2025லாகூர், பாகிஸ்தானில் குண்டு வெடித்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
உண்மை சம்பவத்தைச் சொல்லும் வட்டக்கானல்
22 Sep 2025கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் வெளீடு
22 Sep 2025ஜி. எஸ். ஆர்ட்ஸ் ஜி.
-
மறு வெளியீடுக்கு வரும் குஷி
22 Sep 2025விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் குஷி.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் : ஐகோர்ட்டில் த.வெ.க. சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
22 Sep 2025சென்னை : விஜய் பிரசாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் நடுத்தர மக்களின் சேமிப்பு மேலும் உயரும்: அமித்ஷா
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி.