எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே சவுக்கு தோப்பில் வைத்து 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஒரு ஊரை சேர்ந்த 16 வயது சிறுமி கீழத்தோட்டம் கிராமத்தில் உள்ள தனது தோழியை சந்திக்க சென்றுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் அரவிந்த் என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து இருவரும் செல்போன் மூலம் அடிக்கடி தொடர்பில் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த பெண்ணிடம் பேசிய அரவிந்த், தனிமையில் சந்திக்க சிறுமியை அழைத்துள்ளார். அதை நம்பி அரவிந்தை சந்திப்பதற்காக ராஜாமடம் சவுக்கு தோப்பு பகுதிக்கு சிறுமி தனியாக சென்றுள்ளார். அங்கு வைத்து அத்துமீறியதுடன் சிறுமியை, அரவிந்த் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அவர் மட்டுமல்லாது அவருடன் வந்த அரவிந்தின் நண்பனும், கீழத்தோட்டம் பகுதியை சேர்ந்த சக்திவேலின் மகனுமான சரண் என்பவரும் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இதனால் அந்த சிறுமி கதறி அழுத நிலையில் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். பொதுமக்கள் வருவதை பார்த்தவுடன் இருவரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதுகுறித்து பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா தலைமையிலான போலீசார், தப்பியோடிய அரவிந்த் மற்றும் சரண் ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து பட்டுக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதனைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்பேரில் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


