எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊா்திகள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்துள்ளது.
நாடு முழுவதும் குடியரசு தின விழா நேற்று (ஜன. 26) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தையொட்டி டெல்லி கடமை பாதையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றினார். அதனைத்தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். நிகழாண்டு குடியரசு தினம், அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு 75 ஆண்டுகள் (பவள விழா) நிறைவுபெற்றதைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படப்பட்டு வருகிறது.
அதற்காக, ‘ஸ்வா்ணிம் பாரதம்: விராசத் ஔா் விகாஸ்’ அதாவது ‘தங்க பாரதம்: பாரம்பரியமும் மேம்பாடும்’ என்ற கருப்பொருளில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 16 அலங்கார ஊா்திகள் குடியரசு தின விழா அணிவகுப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த அணிவகுப்பின் முக்கிய அங்கமாக, நாட்டின் ராணுவ பலத்தை உலகுக்கு பறைசாற்றும் வகையில் ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படை வீரா்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. முப்படைகளின் கூட்டுறவை பறைசாற்றும் விதமாக, முதன் முறையாக ‘பலம்வாய்ந்த, பாதுகாப்பான பாரதம்’ என்ற கருப்பொருளில் முப்படைகளின் அலங்கார ஊா்திகள் அணிவகுப்பில் இடம் பெற்றது. குடியரசு தின விழா சிறப்பு நிகழ்வாக, இந்தோனேசிய ராணுவ வீரா்கள் மற்றும் இசைக் குழுவும் அணிவகுப்பில் இடம்பெற்றது. மேலும் டி.ஆர்.டி.ஓ. சாா்பில் ‘பன்முனைத் தாக்குதல்களுக்கு எதிரான பல அடுக்கு பாதுகாப்பு’ என்ற கருப்பொருளில் தனி அலங்கார ஊா்தி அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


