எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
இம்பால் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். ஏறக்குறைய 20 மாதங்களாக இந்த பகுதியில் இரு குழுவினருக்கும் இடையே மோதல்கள் நடைபெறுவதும், பின்னர் அமைதி ஏற்படுவதும் காணப்படுகிறது.இந்நிலையில், மணிப்பூரின் இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, காக்சிங் மற்றும் தவுபல் மாவட்டங்களில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பாதுகாப்புப்படையினர் அப்பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பல்வேறு தடைசெய்யப்பட்ட அமைப்புகளை சேர்ந்த 9 பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இம்பால் கிழக்கு மாவட்டத்தின் மந்திரிபுக்ரி தாகுர்பாரி பகுதியில் காங்லீபாக் கம்யூனிஸ்ட் கட்சியின் 5 பேரை நேற்று பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 9 மி.மீ பிஸ்டல், இரண்டு கைக்குண்டுகள், தோட்டாக்கள் மற்றும் 3 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல, இம்பால் மேற்கு, காக்சிங், காக்லீபாக் மற்றும் தவுபல் மாவட்டங்களில் தலா ஒருவரை பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


