எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஜம்மு : மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்றுமுன் தினம் லண்டனில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்றபோது, காஷ்மீர் பிரச்சினை குறித்து பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஜெய்சங்கர், பாகிஸ்தான் திருடி ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரை மட்டும் மீட்டு கொண்டு வந்துவிட்டால் மொத்த காஷ்மீர் பிரச்சினையும் தீர்க்கப்பட்டுவிடும் என்றார்.
இந்த விவகாரம் ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் எதிரொலித்தது. ஜெய்சங்கருக்கு காட்டமான கேள்விகளை முன்வைத்து ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரியும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான உமர் அப்துல்லா பேசியதாவது:-
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஜம்மு-காஷ்மீரின் பகுதியை நாங்கள் மீட்போம் என்று வெளியுறவுத்துறை மந்திரி கூறுகிறார். அவர்களை யார் தடுத்தது? அதனை மீட்க வேண்டாம் என்று எப்போதாவது நாங்கள் கூறினோமோ? கார்கில் போர் நடந்த சமயத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை திரும்பப் பெறுவதற்கான ஒரு வாய்ப்பு இருந்தது. மீட்டு எடுத்து இருக்கலாம். ஆனால் அதனை செய்யவில்லை. இப்போது நீங்கள் அதனை மீட்டெடுக்க விரும்பினால் நாங்கள் யாராவது வேண்டாம் என்று கூறினோமோ? இதேபோல் ஜம்மு-காஷ்மீரின் வரைபடத்தை பார்த்தால், அதன் ஒரு பகுதி சீனா வசம் உள்ளது. ஆனால் அதைப்பற்றி நீங்கள் பேசுவதில்லை.
எனவே, பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெக்கும்போது, தற்போது சீனாவில் உள்ள ஜம்மு காஷ்மீரின் அந்த பகுதியையும் மீட்டெடுத்தால் நாங்கள் உங்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம். இவ்வாறு உமர் அப்துல்லா பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


