எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மற்றும் டிவிஷன் முறையில் தோல்வி அடைந்தது. அ.தி.மு.க. கொண்டுவந்த இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் தங்களது ஆதரவை தெரிவித்திருந்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு மீது அ.தி.மு.க. சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சட்டப்பேரவையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களை பேச அனுமதிப்பது இல்லை, அவர்கள் பேசும்போது சபாநாயகர் அப்பாவு அடிக்கடி குறுக்கீடு செய்கிறார், ஆளுங்கட்சி அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களிடம் எழுப்பப்படும் கேள்விகளுக்கு சபாநாயகரே பதில் கூறுகிறார், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை நேரலையில் ஒளிப்பரப்புவுது இல்லை, சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இந்த தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கொண்டு வந்தார்.
ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆதரவு: சட்டப்பேரவை விதிகளின்படி, இந்த தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள 35 எம்.எல்.ஏக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அப்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ செங்கோட்டையனும் எழுந்து நின்று தனது ஆதரவைத் தெரிவித்தார். அதேபோல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
அப்பாவு வெளியேறினார்...
தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டதைத் தெடர்ந்து, அவையிலிருந்து அப்பாவு வெளியேறினார். இதையடுத்து, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி அவையை வழிநடத்தினார்.
இ.பி.எஸ். குற்றச்சாட்டு:
இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பேசுகையில், “திமுக தங்களுடைய தேர்தல் அறிக்கையில், ஆண்டுக்கு நூறு நாட்கள் சட்டப்பேரவைக் கூட்டம் நடத்தப்படும் என்று கூறியிருந்தனர். அதன்படி, கடந்த 4 ஆண்டுகளில் 400 நாட்கள் சட்டப்பேரவை நடந்திருக்க வேண்டும். ஆனால் 116 நாட்கள் மட்டுமே தமிழக சட்டமன்றம் நடைபெற்றுள்ளது. மேலும், அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தின்போதும், எதிர்க்கட்சிகள் கூறும் கருத்துகளைக் கேட்பதில்லை. ஒரே நாளில் 4 துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடத்தப்படுகிறது” என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார்.
தீர்மானம் தோல்வி:
தொடர்ந்து குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த தீர்மானம் நடத்தப்பட்டது. தீர்மானத்துக்கு தி.மு.க. கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க. எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவாதத்தில், பாஜக, பாமக உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை. குரல் வாக்கெடுப்பில் இந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.
டிவிஷன் முறை எண்ணிக்கை...
எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கையை ஏற்று, சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது எண்ணிக்கை முறையிலான வாக்கெடுப்பு ஆகும். சட்டப்பேரவையில் மொத்தம் 6 டிவிஷன்கள் உள்ளன. டிவிஷன் வாரியாக இந்த தீர்மானத்தை எத்தனை பேர் ஆதரிக்கிறார்கள், எதிர்க்கிறார்கள் என்ற எண்ணிக்கை அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்படும். அதன்படி சட்டப்பேரவை செயலர் முன்நின்று இந்த டிவிஷன் வாக்கெடுப்பை நடத்தினார். டிவிஷன் முறையிலும் சபாநாயகர் மீது அ.தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. சபாநாயகர் மீது அ.தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு 63 பேர் ஆதரவளித்திருந்த நிலையில், 154 பேர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால், சட்டப்பேரவையில் அ.தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி அடைந்தது.
இதனால், சபாநாயகரை நீக்கக்கோரி அ.தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு மீண்டும் சபாநாயகர் இருக்கையில் வந்தமர்ந்து, அடுத்த அலுவல்களை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்தார். இனி தொடர்ந்து அவர் வழக்கம்போல் அவையை வழிநடத்துவார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
போப் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
09 May 2025புதுடில்லி, புனித போப் பதினான்காம் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-05-2025
09 May 2025 -
பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம்
09 May 2025ஸ்ரீநகர், பாகிஸ்தானுக்கு எதிரான சண்டையில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார்.
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் : துணை அதிபர் ஜெ.டி.வான்ஸ் தகவல்
09 May 2025வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் போருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்ய மாட்டோம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ் தெரிவித்திருக்கிறார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று பேரணி
09 May 2025சென்னை, பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இன்று (மே.10) சென்னையில் தனது தலைமையில்
-
பாகிஸ்தானுக்கு 3 நாடுகள் ஆதரவு: பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்
09 May 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானுக்கு சீனா, துருக்கி, அஜர்பைஜான் தெளிவான ஆதரவை வழங்க முன்வந்துள்ளன என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
-
விமானநிலையங்கள் பாதுகாப்பு: அமித்ஷா தலைமையில் ஆய்வுக்கூட்டம்
09 May 2025புதுடெல்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிவரும் ராணுவ மோதல்களுக்கு மத்தியில், நாட்டிலுள்ள விமானநிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் பாதுகாப்பு நிலைமை குறித்து உள்துறை
-
24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
09 May 2025சென்னை, தமிழகத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி, பஞ்சப்பூரில் ரூ. 408.36 கோடியில் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
09 May 2025திருச்சி, திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் 40 ஏக்கரில் ரூ.408.36 கோடியில் அதிநவீன வசதிகளுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்
-
திருச்சியில் ரூ.276.95 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
09 May 2025திருச்சி, திருச்சியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், 50 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்திடுங்கள்: கட்சியினருக்கு இ.பி.எஸ். வேண்டுகோள்
09 May 2025சென்னை, எதிர்வரும் எனது பிறந்த நாளை முன்னிட்டு, கட்சியினர் என்னை நேரில் வந்து சந்திப்பதையும், எந்தவிதமான கொண்டாட்டங்களையும் தவிர்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
-
போர்ப் பதற்றம் எதிரொலி: பொதுமக்களுக்கு மத்திய அரசு அறிவுரை
09 May 2025புதுடில்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் மக்கள், ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்களில் என்ன செய்யலாம்?
-
எதிரிகளால் பேரிழப்பு: உலக வங்கியிடம் கூடுதல் கடன் கோரிய பாகிஸ்தான்
09 May 2025பாகிஸ்தான் : உலக வங்கயிடம் இருந்து பாகிஸ்தான் அரசு கூடுதல் கடன் கோரியுள்ளது.
-
ஜூன் 15ம் தேதி முதல் புதிய மினி பேருந்து திட்டம்
09 May 2025சென்னை : புதிய ஒருங்கிணைந்த மினி பேருந்து திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூன் 15ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.
-
மேலும் அதிகரிக்கும் போர் பதற்றம்: பாதுகாப்பு வளையத்துக்குள் டெல்லி - தீவிர கண்காணிப்பு
09 May 2025புதுடெல்லி, மேலும் அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக தலைநகர் டெல்லி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
-
இந்தியா-பாக் போர்ப்பதற்றம் எதிரொலி: ஐ.பி.எல். போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தம் : பி.சி.சி.ஐ. அதிகாரபூர்வ அறிவிப்பு
09 May 2025மும்பை : இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருவதை அடுத்து ஐ.பி.எல்.
-
மதுரை மீனாட்சியம்மன் கோவில் திருத்தேரோட்டம் கோலாகலம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு
09 May 2025மதுரை : மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழாவின் திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து 11ஆம் நாள் நிகழ்வாகத் திருத்தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஹர ஹர சிவா என்ற பக்த
-
வீரர்களை அழைத்துவர சிறப்பு ரயில்
09 May 2025இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தர்மசாலா திடலில் பஞ்சாப் கிங்ஸ் - டில்லி கேபிடல்ஸ் இடையிலான போட்டி வியாழக்கிழமை இரவு பாதியி
-
புதிய போப் குறித்து வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
09 May 2025வாடிகன் : கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் 26-ம் தேதி ரோம் நகரில் அடக்கம் செய்யப்பட்டது.
-
ஜம்மு - காஷ்மீரில் கல்வி பயிலும் தமிழக மாணவர்களை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை
09 May 2025சென்னை, ஜம்மு காஷ்மீரில் தற்போதைய நிலைமை சீரானவுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயின்று வரும் 52 தமிழக மாணவர்களை மீண்டும் தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கான உரிய நடவடிக்கை
-
தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
09 May 2025புதுடெல்லி, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த உத்தரவிட கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 8-ம் தேதி கடைசி நாள்
09 May 2025சென்னை : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு நேற்றுமுன்தினம் (மே 9) தொடங்கிய
-
இனிமேல் நம்முடைய பாதை சிங்கப்பாதையாக இருக்கும் திருச்சி அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 May 2025திருச்சி, இனிமேல் நாம் செல்லும் பாதை சிங்கப்பாதையாக இருக்கும். மேலும், நாட்டிலேயே தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது என்று திருச்சி அரசு விழாவில் முதல்வர் மு.க.
-
மத்திய அரசின் கனவு தமிழகத்தில் என்றைக்கும் பலிக்காது: த.வெ.க.
09 May 2025சென்னை : தேசியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும் மத்திய அரசின் கனவு, தமிழகத்தில் என்றைக்கும் பலிக்காது என்று தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
-
விமான நிலையத்துக்கு இணையாக திருச்சியில் பேருந்து முனையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 May 2025திருச்சி, திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து முனையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக நேற்று திறந்து வைத்துப் பேசிய முதல்வர் ஸ்டலின், விமான நிலையத்துக்கு