எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஆக்லாந்து : நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
நியூசிலாந்து பயணம்...
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலிரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில் ஆக்லாந்தில் உள்ள ஈடன் பூங்கா மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் தொடரை முடிவு செய்யும் முனைப்பில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அஹா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
204 ரன்கள்...
அதன்படி, முதலில் களமிறங்கிய ஃபின் ஆலன் ரன் ஏதுமின்றி வெளியேற, டிம் செய்ஃபெர்ட் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 19 ரன்கள் விளாசி வீழ்ந்தார். அவருக்குப் பின்னர் வந்த மார்க் சாம்ப்மேன் அதிரடியாக விளையாடி பந்துவீச்சைச் சிதறடிக்க ரன் வேகமாக ஏறியது. ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மார்க் 94 ரன்களில்(11 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்) விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். கடைசியில் அதிரடி காட்டிய கேப்டன் பிரேஸ்வெல் 18 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். நியூசிலாந்து அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹாரிஸ் ரௌஃப் 3 விக்கெட்டுகளும், ஷாகீன், அப்ரார், அப்பாஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இமாலய இலக்கு...
205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் விக்கெட் கீப்பர் முகமது ஹாரிஸ் மற்றும் ஹசன் நவாஸ் இருவரும் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை சிதறடித்தனர். முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்த நிலையில், ஹாரிஸ் 41 ரன்களில்(4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள்) ஆட்டமிழந்தார். அவர் விக்கெட் விழுந்தாலும் அணியின் ஸ்கோர் வேகமாக எகிறியது.
அபார வெற்றி...
45 பந்துகளில் 105 ரன்கள்(10 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) குவித்து நவாஸ் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார். மேலும், 3-வது போட்டியிலேயே அதிகவேக சதம் விளாசியவர், டி20 போட்டிகளில் அதிக ரன்கள் விளாசியவர் என்ற பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரானார் 22 வயதான ஹசன் நவாஸ். அவருக்குப் பின் வந்த கேப்டன் ஆஹாவும் அரைசதம் விளாச 16 ஓவர்களிலேயே பாகிஸ்தான் அணி 207 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இவ்விரு அணிகளும் மோதும் 4-வது போட்டி பே ஓவல் மைதானத்தில் வருகிற 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


