எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும்; அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதே நடைமுறையை தொடர வேண்டும்’ என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள், சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
7 மாநிலங்களை...
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்தின்படி, ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று (மார்ச் 22) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் மாநில முதல்வர்கள் உள்பட 7 மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். சுமார் 3 மணி நேரம் நடைபெற்றக் கூட்டம் நிறைவடைந்தது.
விரிவாக விவாதிக்க...
பின்னர், திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்துப் பேசினார். அதன் விவரம்: மத்திய அரசு தொகுதி மறுவரையறை மேற்கொள்வதற்கு முன்னர், அனைத்து மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் மற்றும் பிற அமைப்பினரை உள்ளடக்கிய ஜனநாயகத்தை நிலைநாட்டும் வகையில், வெளிப்படைத் தன்மையுடன் விரிவாக விவாதிக்க வேண்டும். 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு இதே நடைமுறையை தொடர வேண்டும்.
சட்டத்திருத்தத்தை...
மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள், மத்திய அரசின் தொகுதி மறுவரையறையால் தண்டிக்கப்படக் கூடாது. இதை உறுதி செய்ய தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு செய்ய வேண்டும். தொகுதி மறுவரையறை தொடர்பாக, மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்கொள்ள, கூட்டு நடவடிக்கைக் குழுவில் இடம்பெற்றுள்ள கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய மையக் குழு, பாராளுமன்ற உத்திகளை ஒருங்கிணைத்து செயல்படும்.
மாநில மக்களிடம்...
நடப்பு பாராளுமன்றக் கூட்டத் தொடரிலேயே, பாராளுமன்றக் குழு பிரதமரைச் சந்தித்து, இந்தக் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சமர்ப்பிக்கும். கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள மாநிலங்கள், தொகுதி மறுவரையறைக்கு எதிராக அந்தந்த மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றி, அதை மத்திய அரசுக்கு தெரிவிப்பர். கடந்த காலத்தில் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வந்த தொகுதி மறுவரையறை விவரங்கள் மற்றும் மத்திய அரசு தற்போது மேற்கொள்ள இருக்கும் தொகுதி மறுவரையறை குறித்த விவரங்களை அந்தந்த மாநில மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகளை கூட்டு நடவடிக்கைக் குழு மேற்கொள்ளும் என்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
பரவலாக வரவேற்பு...
மேலும் அவர், “இந்தக் கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டனர். திரிணமூல் காங்கிரஸ் கட்சியால் வரமுடியாத சூழ்நிலை. அவர்கள் பங்கேற்கவில்லை. இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் நடந்துள்ளது. கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்துக்கு பரவலாக வரவேற்பு கிடைத்துள்ளது. நியாயமான தொகுதி மறுவரையறைக்காக அனைவரும் இணைந்து ஒருமித்த குரல் எழுப்பியுள்ளார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலினின் முயற்சிக்கு அனைவரும் உறுதுணையாக இருப்பார்கள். கூட்டு நடவடிக்கைக் குழுவில் பிற மாநில கட்சிகளின் தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதாக உறுதி அளித்துள்ளனர்.
பெண்களுக்கு இடஒதுக்கீடு...
பாராளுமன்றத்தில் மகளிர் மசோதா நிறைவேற்றப்பட்டபோது, தொகுதி மறுவரையறைக்குப் பிறகுதான், மகளிர் மசோதா நடைமுறைக்கு வரும் என தெளிவாகக் கூறினா். ஜனநாயகத்தின் உச்சபட்ச அதிகாரம் பெற்றது பாராளுமன்றம். அங்கு, கட்டாயம் தொகுதி மறுவரையறை செய்யப்படும். அதன்பிறகு 33 சதவீதம் பெண்களுக்கான இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதேபோல், அண்மையில் உள்துறை அமைச்சர் தமிழக வருகையின்போது, தொகுதி மறுவரையறையால் தமிழகம் பாதிக்கப்படாது என்று தெரிவித்திருக்கிறார்.
உரிமைகளை கேட்கிறோம்...
தொகுதி மறுவரையறை குறித்து எவ்வித தெளிவையும் ஏற்படுத்தாமல், குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக இருப்பதால்தான், ஒரு தெளிவான பதிலை மத்திய அரசு தர வேண்டும் என்று வலியுறுத்துகிறார். நாங்கள் எங்களுக்கான உரிமைகளை கேட்கிறோம். இது எந்த மாநிலத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை. நான் என்னுடைய உரிமையைக் கேட்பது என்பது, உங்களுக்கு எதிராக பேசுகிறேன் என்று அர்த்தமில்லை. மத்திய அரசின் இந்த அநீதியால், ஒருசில மாநிலங்கள் பாதிக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எனவே, நாங்கள் சரியான தொகுதி மறுவரையைறைக் கோருகிறோம் என்று கனிமொழி தெரிவித்தார்.
கூட்டத்தில் பங்கேற்றோர்:
1) கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன்.
2) தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி.
3) பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்.
4) கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்.
5) பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் கே.டி. ராமாராவ்.
6) பிஜூ ஜனதா தளம் - சஞ்சய் குமார் தாஸ் பர்மா.
7) பிஜூ ஜனதா தள கட்சி - அமர் பட்நாயக்.
8) பஞ்சாப் சிரோன்மணி அகாலி தளம் - பல்வீந்தர் சிங்.
9) கேரள இ.கம்யூ. மாநிலச் செயலாளர் பினாய் விஸ்வம்.
10) கேரள இ.யூ.மு.லீக் - மாநில பொதுச்செயலாளர் சலாம்.
11) கேரள புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி - பிரேம சந்திரன்.
12) கேரள இ.தே.காங். மாநில தலைவர் கும்பக்குடி சுதாகரன்.
13) தெலங்கானா அகில இ.மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் - இம்தியாஸ் ஜலில்.
14) கேரளா காங்கிரஸ் (மணி) கட்சியின் ஜோஸ் கே. மணி.
15) தெலங்கானா இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மகேஷ் கவுட்.
160 கேரளா காங்கிரஸ் - பாராளுமன்ற உறுப்பினர் பிரான்சிஸ் ஜார்ஜ்.
நிறைவேற்றப்பட்ட 7 தீர்மானங்கள்
1) மத்திய அரசு தொகுதி மறுவரையறை பணியையும் வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும்.
2) 1971 சென்சஸ் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு அடுத்த 25 ஆண்டுகளுக்கு இருக்க வேண்டும்.
3) மத்திய அரசு தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களைச் செய்ய வேண்டும்.
4) குறிப்பிட்ட மாநிலங்களின் எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில் இதுகுறித்த கருத்துகளை எடுத்துரைப்பர்.
5) மேலும் பிரதமர் மோடியிடம் இதுகுறித்து கூட்டாக எம்.பி.க்கள் வலியுறுத்துவார்கள்.
6) அந்தந்த மாநிலங்களில் சட்டமன்றத் தீர்மானங்களைக் கொண்டுவந்து மத்திய அரசுக்குத் தெரிவிப்பர்.
7) தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களை மக்களிடையே எடுத்துரைப்போம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை மேலும் உயர்வு
08 Jul 2025சென்னை : இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்தவாறு இருக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-07-2025.
08 Jul 2025 -
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 18-ல் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம்
08 Jul 2025சென்னை, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க வரும் 18-ம் தேதி அன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.
-
கடலூர் ரயில் விபத்து; நடந்தது என்ன? ரயில்வே விளக்கம்
08 Jul 2025கடலூர், ரயில்வே கேட்டை திறக்கும்படி கேட் கீப்பரிடம் வேன் ஓட்டுநர் வலியுறுத்தியுள்ளார் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
பகுதி நேர ஆசிரியர்கள் கைது: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
08 Jul 2025சென்னை, பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
கவுதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படம்
08 Jul 2025வேரூஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கவுள்ளார்.
-
நெல்லையப்பர் கோவிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
08 Jul 2025திருநெல்வேலி : நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
கயிலன் முன்னோட்டம் வெளியீடு
08 Jul 2025BTK பிலிம்ஸ் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கயிலன்.
-
பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் அஞ்சலி
08 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்தில் பலியான மாணவர்களின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
ஹிமாச்சலில் நிலச்சரிவு; நாயால் 67 பேர் உயிர் பிழைத்த அதிசயம்
08 Jul 2025சிம்லா : ஹிமாச்சலில் நாயின் முன்னெச்சரிக்கையால் 67 பேர் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சுரேஷ் ரெய்னா
08 Jul 2025புதிய பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், தனது முதல் படைப்பான "புரொடக்ஷன் நம்பர் 1" மூலம் திரைப்பட உலகில் தனது கால் பதித்துள்ளது.
-
கும்பகோணம்-தஞ்சை சாலையில் விபத்து - 4 பேர் பலி
08 Jul 2025தஞ்சை : சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
2 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் பயணம்
08 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகிற 9 மற்றும் 10-ம் தேதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
-
ஜூலை 11ல் வெளியாகும் தேசிங்குராஜா- 2
08 Jul 2025இயக்குநர் எழில். கடந்த 2013 ம் ஆண்டு தேசிங்கு ராஜா படத்தை இயக்கினார். 12 வருடங்களுக்கு பிறகு தற்போது இதன் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.
-
அரசுப் பணியில் பீகார் பெண்களுக்கு 35 சதவிகித ஒதுக்கீடு வழங்க முடிவு
08 Jul 2025பாட்னா : பீகார் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 35 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
-
மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக புதிய இணையதளம்: மத்திய அரசு அறிவிப்பு
08 Jul 2025புதுடெல்லி, மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் சுயவிவரம் தெரிவிக்க புதிய இணையதளம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
இஸ்ரேலுடனான போரில் இதுவரை 1,060 பேர் பலி : ஈரான் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
08 Jul 2025தெஹ்ரான் : இஸ்ரேல் தாக்குதலில் 1,190 பேர் ஈரானில் பலியாகி உள்ளனர் என வாஷிங்டனை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் குழு தெரிவித்து உள்ளது.
-
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
08 Jul 2025தேவகோட்டை, கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
-
கடலூர் ரயில் விபத்து: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
08 Jul 2025சென்னை, கடலூர் பள்ளி வேன் விபத்தில் இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
நாளை வெளியாகும் சசிகுமாரின் ஃபிரீடம்
08 Jul 2025விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோள் ஜோஸ் நடிப்பில், கழுகு பட இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உருவாகியுள்ள
-
இணையத் தொடரை இயக்கும் நடிகை ரேவதி
08 Jul 2025ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம்.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு: முதல்முறையாக, பொதுமக்களே தங்கள் பெயரை சேர்க்கும் வசதி
08 Jul 2025புதுடெல்லி : மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் பெயரை சேர்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
-
காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய பேராசிரியை நிகிதா மீண்டும் கல்லூரி பணிக்கு திரும்பினார்
08 Jul 2025திண்டுக்கல் : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா மீண்டும் பணிககு திரும்பினார்.
-
கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம்: தெற்கு ரயில்வே குற்றச்சாட்டு
08 Jul 2025கடலூர், கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம் என தெற்கு ரயில்வே குற்றம் சாட்டியுள்ளது.
-
ஏர் இந்தியா விமான விபத்து: விசாரணை அறிக்கை தாக்கல்
08 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் சமர்பித்துள்ளது.