எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு புறப்பட்டதால் தமிழக அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இடம் பெற்றிருந்தது. ஆனால், அந்த கூட்டணியில் அ.தி.மு.க. 66, பா.ம.க. 5, பா.ஜ.க. 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அ.தி.மு.க.வின் முக்கிய அமைச்சர்களே தோல்வியை சந்தித்தனர். இந்த தோல்விக்கு பா.ஜ.க.வுடனான கூட்டணிதான் காரணம். அவர்களுடன் கூட்டணி வைத்ததால்தான் சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்காமல் போனது" என்று முன்னாள் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார், சி.வி. சண்முகம் ஆகியோர் வெளிப்படையாகவே தெரிவித்தனர்.
இதுகுறித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையுடன் கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில், 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந்தேதி பா.ஜ.க.வுடனான கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது. தொடர்ந்து 2024-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. கட்சிகளுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட்டது. பா.ஜ.க.வோ பா.ம.க., த.மா.கா., ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட அணிகளுடன் கூட்டணி வைத்தது. இந்த தேர்தலில் வலுவான கூட்டணியுடன் களம் இறங்கிய தி.மு.க. 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிகள் ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால், இவை இரண்டும் இணைந்து தேர்தலை சந்தித்து இருந்தால் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும் என்று அப்போதே பேசப்பட்டது.
இந்த நிலையில், எதிர்வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க.வை இணைக்கும் முயற்சிகள் இப்போதே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. பா.ஜ.க. இரண்டாம் கட்ட தலைவர்கள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை ஆரம்பித்து விட்டதாக தெரிகிறது. அதற்கான வித்தியாசம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சிலும் தெரிய தொடங்கியிருக்கிறது. ஆரம்பத்தில், "இனி எந்த காலத்திலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது" என்றார். தற்போது, எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க.தான்" என்கிறார்.
இதனால், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி தேர்தல் நெருங்கும் சமயத்தில் உறுதியாகி விடும் என்று பேசப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில், நேற்று முன்தினம் காலை சட்டசபை கூட்டம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டார். பொதுவாக, இதுபோன்று அவர் டெல்லி சென்றால் முன்கூட்டியே அவரது பயண விவரம் தெரிய வரும். ஆனால், நேற்றைய பயணம் ரகசியம் காக்கப்பட்டது. கடைசி நேரத்திலேயே தெரிய வந்தது.
அவர் டெல்லி புறப்பட்டு சென்ற நிலையில், இந்த விவகாரம் தமிழக சட்டசபையிலும் எதிரொலித்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "எதிர்க்கட்சி தலைவர் யாரை சந்திக்க செல்கிறார் என்று தெரியும். அவர் சந்திக்கும் நபரிடம் இருமொழி கொள்கையை வலியுறுத்த வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார். இதனால், எடப்பாடி பழனிசாமி டெல்லியில் யாரை சந்திக்க இருக்கிறார்? என்று பரபரப்பாக பேசப்பட்டது.
இதற்கு மத்தியில், நேற்று முன்தினம் காலை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார். அவரை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, "கடந்த மாதம் திறக்கப்பட்ட அ.தி.மு.க. அலுவலகத்தை பார்வையிட வந்தேன்" என்று மட்டும் கூறிவிட்டு அவசர அவசரமாக சென்று விட்டார்.
வேறு எந்த கேள்விக்கும் அவர் பதில் அளிக்கவில்லை. அவரை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் டெல்லி செல்கிறார். இதனால், டெல்லியில் ஏதோ நடக்கிறது?" என்பது மட்டும் தெரிகிறது. அதன் விளைவாக, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மீண்டும் மலருமா? என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. தற்போது டெல்லியில் எடப்பாடி பழனிசாமி இருப்பதால் தமிழக அரசியல் களம் அதிர்ந்து கொண்டிருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: புள்ளி பட்டியல் 'ஏ' பிரிவில் முதலிடத்தில் இந்திய அணி
15 Sep 2025துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் தற்போது வரை 6 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்த நிலைியல் புள்ளி பட்டியலில் ஏ பிரிவில் இந்திய அணியும் பி பிரிவில் ஆப்கானிஸ்தானும்
-
வக்பு திருத்த சட்டத்திற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: சில விதிகளுக்கு இடைக்காலத் தடை
15 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை எந்த முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், வக்ஃப் சட்டத் திருத்த சட்
-
தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
15 Sep 2025சென்னை, தலைமகன் அண்ணா நிமிர்த்திய தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று ஏ.ஐ.
-
தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 Sep 2025சென்னை, தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜு வரவேற்பு
15 Sep 2025டெல்லி : வக்பு சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வரவேற்றுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-09-2025.
15 Sep 2025 -
இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது: அமெரிக்காவுக்கு ரஷ்யா பதில்
15 Sep 2025மாஸ்கோ : எண்ணை வாங்கும் விவகாரம் தொடர்பாக இந்தியாவுடனான உறவை முறிக்க முடியாது என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா கூறியுள்ளது.
-
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட கோரிக்கை
15 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை விட வேண்டும் என்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இப்போதே கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர்.
-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலைக்கு ரூ. 1 கோடி அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை
15 Sep 2025ராஞ்சி : தலைக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு பாதுகாப்பு படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
15 Sep 2025சென்னை, வக்பு திருத்த சட்டம் தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
-
மிராய் திரைவிமர்சனம்
15 Sep 2025பேரரசர் அசோகர் சாகாவரம் பெறக்கூடிய ரகசியங்களை 9 புத்தகங்களில் எழுதி அதனை ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார்.
-
நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: மத்திய அரசு வெளியிட்டது
15 Sep 2025புதுடெல்லி, நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு விளக்கமளித்துள்ளது.
-
ரஷ்யா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் தாக்குதல்
15 Sep 2025மாஸ்கோ : ரஷ்யாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மேலும் கால அவகாசம்: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
15 Sep 2025சென்னை, பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலை சற்று சரிவு
15 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (செப். 15) சவரனுக்கு ரூ. 80 குறைந்து விற்பனையானது.
-
பார்லி.யில் காப்பீட்டு திருத்த மசோதா தாக்கல் செய்யப்படுவது எப்போது? - நிர்மலா சீதாராமன் பதில்
15 Sep 2025புதுடெல்லி : காப்பீட்டு திருத்த மசோதா எப்போது தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
-
நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் அமைச்சரவையில் 3 பேர் பதவியேற்பு
15 Sep 2025காத்மாண்டு : நேபாள பிரதமர் சுசீலா கார்கியின் புதிய அமைச்சரவையில் 3 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர்.
-
அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை
15 Sep 2025பியாங்காங் : அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் பேட்டியை ரத்து செய்ய மறியல்: 37 பேர் கைது
15 Sep 2025கோவை : இந்தியா - பாகிஸ்தான் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யகோரி கோவையில் ரெயில் மறியலில் ஈடுபட்ட 37 பேரை பேலீசார் கைது செய்தனர்.
-
பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி: இந்திய ராணுவ வீரர்களுக்கு அர்பணித்த கேப்டன் சுப்மன்
15 Sep 2025துபாய் : பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி பஹல்காமில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நம்மைப் பாதுகாக்கும் துணிச்சல்மிக்க நமது ஆயுதப் படைகளுக்கும் அர்ப்பணிக்கப்படுகிறது என்று இந்
-
தாய்லாந்தில் இருந்து மும்பைக்கு கடத்தி வரப்பட்ட 67 அரிய வகை விலங்குகள் மீட்பு..!
15 Sep 2025மும்பை, தாய்லாந்தில் இருந்து மும்பைக்கு கடத்தி வரப்பட்ட 67 வகை அரிய விலங்குகளை விமான நிலைய அதிகாரிகள் மீட்டனர்.
-
காவல்துறை நிபந்தனைகளை மீறல்: திருச்சி த.வெ.க. நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்குப்பதிவு
15 Sep 2025திருச்சி : திருச்சியில் த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டபோது, நிபந்தனைகளை மீறியதாக திருச்சி த.வெ.க.
-
எங்களுடைய அடிப்படையே பதவி அல்ல, பொறுப்புதான்: 'அன்பு கரங்கள்' திட்ட தொடக்க விழாவில் முதல்வர் பேச்சு
15 Sep 2025சென்னை, அரசியல் என்பது மக்கள் பணி. அது கடுமையான பணி.
-
மருத்துவ படிப்பை பாதியில் உதறிய மதராசி பட நடிகர்
15 Sep 2025சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மதராசி படத்தில் துப்பாக்கியை எடுத்து சித்தார்தா சங்கரிடம் கொடுக்கும் காட்சி இருக்கும். திரையில் இந்த காட்சி வரும்போத
-
1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்க உள்ளார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
15 Sep 2025சென்னை : 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணையை 22ம் தேதி முதல்வர் வழங்குகிறார் என மா. சுப்பிரணியன் தெரிவித்துள்ளார்.