எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்கால், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா எப்போது என்பதைக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனீஸ்வர பகவானை தரிசிக்க வாரந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகிறாா்கள். இக்கோயிலில் இரண்டரை ஆண்டுகளுக்கொரு முறை சனிப்பெயா்ச்சி விழா வாக்கிய பஞ்சாங்க முறையில் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இந்த ஆண்டு மாா்ச் மாதம் 29-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி என குறிப்பிடப்பட்டுள்ளதால் பக்தா்களிடையே குழப்பம் நிலவுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் தனி அதிகாரி சோமசேகா் அப்பாராவ் உத்தரவின்படி, கோயில் நிா்வாக அதிகாரி கு.அருணகிரிநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பக்தா்கள், ஜோதிடா்கள், அா்ச்சகா்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சனிப்பெயா்ச்சி தொடா்பாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, 2025 மாா்ச் 29-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி என்ற தகவல் பரவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் சுவாமி தேவஸ்தானம் சனீஸ்வர பகவான் புண்ணியத் திருத்தலம் ‘வாக்கிய பஞ்சாங்கம்‘ முறையை பின்பற்றுவதை தெளிவுப்படுத்துகிறோம்.
இந்த பாரம்பரிய கணிப்பு முறையின்படி, 2026-ஆம் ஆண்டிலேயே சனிப்பெயா்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே வரும் 29-ஆம் தேதி வழக்கமாக நடைபெறும் தினசரி பூஜைகள் மட்டுமே கோயிலில் நடைபெறும். திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சனிப்பெயா்ச்சி சம்பந்தமான நிகழ்வு நடைபெறும் சரியான தேதி மற்றும் நேரம் பின்னா் அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வி.சி.க.வுக்கு எத்தனை தொகுதிகள்? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சு
14 Mar 2026சென்னை, வி.சி.க.வுக்கு தொகுதி உடன்பாடு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
கரூர் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜராக டெல்லி சென்றார் விஜய்
14 Mar 2026கரூர், கரூர் பலி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
-
தமிழ்நாட்டில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி: உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
14 Mar 2026வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அனைத்து உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின் கட்டணத்தில் யூனிட்டிற்கு ரூ.2 சலுகை மின்சார மானியமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்
-
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
14 Mar 2026சென்னை, கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது என்று ஞானபீட விருது அறிவிக்கப்பட்டள்ள வைரமுத்துவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கிரெடிட் கார்டு விதிமுறைகளில் புதிய நடைமுறை கடைபிடிப்பு ஆர்.பி.ஐ. அறிவிப்பால் மறைமுக வட்டி, அபராதங்கள் இனி இல்லை
14 Mar 2026மும்பை, கிரெடிட் கார்டு விதிமுறைகளை ஆர்.பி.ஐ. புதுப்பித்துள்ளது. எனவே, இனி மறைமுக வட்டி, அபராதங்கள் விதிக்கப்படுவது தவிர்க்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் அளவிற்கான இலக்கை உயர்த்திட வேண்டும்: 32 லட்சம் மெட்ரிக் டன்களாக மாற்றியமைக்க பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
14 Mar 2026சென்னை, கரீப் பருவத்தில் 2025-2026 ஆண்டிற்கான தமிழ்நாட்டின் அரிசி கொள்முதல் இலக்கை முன்னுரிமை அடிப்படையில் 16 லட்சம் டன்களிலிருந்து 32 லட்சம் மெட்ரிக் டன்களாகத் மாற்றிய
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Mar 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோலுக்கினியானில் புறப்பாடு.
- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி ரிசிமுக பர்வதம் பட்ட
-
இன்றைய ராசிபலன்
14 Mar 2026 -
இன்றைய நாள் எப்படி?
14 Mar 2026


