எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காத்மாண்டு, நேபாளத்தில் முடியாட்சிக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் கார்களுக்கு தீ வைக்கப்பட்டன, கடைகள் சூறையாடப்பட்டன. இதனால், தலைநகர் காத்மாண்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி கோரி, முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவின் ஆதரவாளர்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் காத்மாண்டுவில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்டது. ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் அலுவலகத்தைத் தாக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், வாகனங்களுக்கு தீ வைத்து, கடைகளை சூறையாடினர்.
மற்றொரு சம்பவத்தில், காத்மாண்டு தலைநகரில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தை நோக்கி போராட்டக்காரர்கள் கற்களை வீசினர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்தனர். ஒரு தொலைக்காட்சி கேமராமேன் மற்றும் ஒரு போராட்டக்காரர் என இருவர் இதில் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டது.
இந்த வன்முறை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிருத்வி சுப்பா குருங், “இது ஒரு அப்பட்டமான நாசவேலை, தீ வைப்பு, கொள்ளை மற்றும் அராஜகம். இது ஒரு போராட்டமாக இருக்க முடியாது.” என்று கூறினார்.
நேபாளத்தில் 239 ஆண்டு கால மன்னராட்சி கடந்த 2008 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. நாட்டின் கடைசி மன்னரான 77 வயதான ஞானேந்திரா, காத்மாண்டுவில் உள்ள ஒரு தனியார் வீட்டில் தனது குடும்பத்துடன் ஒரு சாதாரண குடிமகனாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


