எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சேலம், கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில் அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தலைக் கட்சியின் பொதுச்செயர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பிலும் தொண்டு அமைப்பின் சார்பிலும் கோடை வெயிலில் தாக்கத்தை தணிக்கும் வகையில் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் அமைத்து நாள்தோறும் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சூரமங்கலம் பகுதியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அ.தி.மு.க.வின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு நீர்மோர் பந்தலை திறந்துவைத்தார்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது நீர் மோர், கம்மங்கூழ், நுங்கு, இளநீர், குளிர்பானங்கள் வெள்ளரிப்பிஞ்சு, கோசாப்பழம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை பொதுமக்களுக்கு இலவசமாக அவர் வழங்கினார். நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளும் நீர் மோரினை பெற்றனர்.
இந்த விழாவில் அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளர் எம்.கே.செல்வராஜ், ஏ.கே.எஸ். எம். பாலு மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


