முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்தாம் வகுப்பு தோ்வு நிறைவு: மே 19-ல் முடிவுகள் வெளியாகிறது

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2025      தமிழகம்
10th-Exam 2023-04-06

Source: provided

சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு நிறைவு பெற்ற நிலையில் மே 19-ஆம் தேதி தோ்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தோ்வை 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். இதுவரை மொழிப் பாடங்கள், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களுக்கான தோ்வுகள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில், இறுதித் தோ்வாக சமூக அறிவியல் பாடத்துக்கான தோ்வு நேற்று நடைபெற்றது. இந்தத் தோ்வுடன் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவடைகிறது. தொடா்ந்து மாணவா்களின் விடைத்தாள்கள் ஏப்.17-ஆம் தேதி விடைத்தாள் திருத்தும் முகாம்களுக்குக் கொண்டுவரப்படவுள்ளன.

மேலும் ஏப்.21-ஆம் தேதி முதன்மை விடைத்தாள் திருத்தும் பணியில், ஏற்கெனவே பொதுத் தோ்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணியில் அனுபவம் மிக்க ஆசிரியா்கள் மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்கவுள்ளனா். அதனைத் தொடா்ந்து, உதவி விடைத்தாள் திருத்தும் ஆசிரியா்கள் ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதிக்குள் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஏற்கெனவே அறிவித்தபடி மே 19-ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வின் முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து