எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 36-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான், லக்னோ அணிகள் ஜெய்பூரில் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்து 180 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 178/5 ரன்கள் எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
இந்தப் போட்டியில் 14 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களமிறங்கினார். தனது முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த இவர் 20 பந்துகளில் 34 ரன்கள் அடித்தார். மார்க்ரம் வீசிய பந்தில் ரிஷப் பந்திடம் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்த சூர்யவன்ஷி அழுதுகொண்டே வெளியேறினார். பலரும் இந்த இளம் வீரருக்கு வாழ்த்துகளை தெரிவித்துவரும் நிலையில் கூகுள் சி.இ.ஒ. சுந்தர் பிச்சை தனது எக்ஸ் தளத்தில், “8-ஆவது படிக்கும் சிறுவனின் ஐ.பி.எல். விளையாட்டை பார்ப்பதற்காக எழுந்தேன்!!! என்ன ஒரு அறிமுகம்!” எனக் கூறியுள்ளார். சுந்தர் பிச்சை தமிழ்நாட்டில் பள்ளியில் படிக்கும்போது கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை - ஐதராபாத் டிக்கெட் இன்று விற்பனை தொடக்கம்
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 5 முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 5 தோல்வி மற்றும் 2 வெற்றி கண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தடுமாறி வருகிறது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற எதிர்வரும் போட்டிகளில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற சூழலில் விளையாட உள்ளது.சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் விலகிய நிலையில் கேப்டன் பொறுப்பை மகேந்திரசிங் தோனி மீண்டும் ஏற்றுள்ளார். தொடர்ச்சியாக 5 தோல்விகளுக்கு பிறகு தோனி தலைமையில் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது.
நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் சென்னை அணி , மும்பை அணியுடன் மோதியது. தொடர்ந்து வரும் 25ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை அணி , ஐதராபாத் அணியுடன் மோதுகிறது. இந்த நிலையில், சென்னை - ஐதராபாத் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை காலை 10:15க்கு ஆன்லைனில் தொடங்குகிறது.
கொல்கத்தா அணியில் இணைந்த அபிஷேக் நாயர்
இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக உள்ள மும்பையைச் சேர்ந்த அபிஷேக் நாயர் நீக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அபிஷேக் நாயர் நீக்கம் குறித்து பி.சி.சி.ஐ. இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்காத நிலையில் அவர், ஐ.பி.எல். தொடரில் கே.கே.ஆர். (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) அணியின் பயிற்சியாளர் குழுவில் இணைந்துள்ளார். அவரை வரவேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
அபிஷேக் நாயர் இந்திய அணியின் உதவி பயிற்சியாளராக கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் நியமிக்கப்பட்டார். 8 மாதங்களிலேயே அவர், நீக்கப்பட்டுள்ளார். கடந்த 2024-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணி பட்டம் வென்ற போது அபிஷேக் நாயர், துணை பயிற்சியாளராகவும், ஆலோசகராவும் பணியாற்றியிருந்தார். மேலும் கே.கே.ஆர். அகாடமியிலும் வீரர்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகித்து வந்தார்.
ஆர்.சி.பி. அணியில் இருந்து லிவிங்ஸ்டன் அதிரடி நீக்கம்
ஐ.பி.எல். 2025-இன் 37-ஆவது போட்டியில் முல்லன்பூர் திடலில் நடைபெறும் போட்டியில் ஆர்.சி.பி., பஞ்சாப் அணிகள் மோதின. பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆர்.சி.பி. அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். ஆர்.சி.பி. அணியில் லிவிங்ஸ்டன் நீக்கப்பட்டு, ரோமாரியோ ஷெப்பர்டு சேர்க்கப்பட்டுள்ளார். பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் இல்லை என அதன் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.
10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ள பஞ்சாப் இதில் வெற்றி பெற்றால் 12 புள்ளிகளுடன் முதலிடத்துக்குச் செல்லும். 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளஆர்.சி.பி. இந்தப் போட்டியில் அபாரமாக வென்றால் முதலிடத்துக்குச் செல்லவும் வாய்ப்பிருக்கிறது.
ஐதராபாத் மைதானத்தில் அசாருதீனின் பெயர் நீக்கம்
ஐதராபாத் உப்பல் மைதானத்தின் ஸ்டாண்ட் ஒன்றுக்கு, முன்னாள் வீரர் முகமது அசாருதின் பெயர் சூட்டப்பட்டதை ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் குறைகேட்பு அதிகாரி.ரத்து செய்தார் 'வி.வி.எஸ். லக்ஷ்மன் ஸ்டாண்ட்' என இருந்ததை, 2019ம் ஆண்டில் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த அசாருதின் தலைமையிலான நிர்வாகக் குழு, 'முகமது அசாருதின் ஸ்டாண்ட்' என பெயர் மாற்றம் செய்தது. இது அதிகார துஷ்பிரயோகம் என அளிக்கப்பட்ட புகாரின்பேரில் குறைகேட்பு அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.
சூர்யவன்ஷியை பாராட்டிய லக்னோ அணி உரிமையாளர்
ஐ.பி.எல். தொடரின் ஜெய்ப்பூரில் நடைபெற்ற 36-வது லீக் போட்டியில் முதலில் ஆடிய லக்னோ அணி 180 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது. இதற்கிடையே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி இம்பேக்ட் பிளேயர் அடிப்படையில் தொடக்க வீரராக களம் இறங்கினார். இதன்மூலம் ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைந்த வயதில் களம் இறங்கிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். சூர்யவன்ஷி 14 வயது 23 நாட்களில் அறிமுகம் ஆகியுள்ளார்.
மேலும், வைபவ் சூர்யவன்ஷி தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் விளாசி புதிய சாதனை படைத்தார். இந்தப் போட்டியில் 20 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட மொத்தம் 34 ரன்கள் எடுத்து ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். அறிமுகப் போட்டியிலேயே அபாரமாக விளையாடிய 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷியை லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு முடிவு பரிதாபத்துக்கு உரியது: ஏர் மார்ஷல் பாரதி
12 May 2025புதுடெல்லி : பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முடிவு செய்தது பரிதாபத்துக்குரியது என இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி தெரிவித்தார்.
-
கூவாகம் திருவிழா 2025: தூத்துக்குடியை சேர்ந்த சக்தி ‘மிஸ் திருநங்கை’ ஆக தேர்வு
12 May 2025விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவில் ‘மிஸ் திருநங்கை’ பட்டத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி என்ற திருநங்கை பெற்றார்.
-
தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டுடுத்தி மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்
12 May 2025மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நேற்று (மே 12) காலை 6 மணியளவில் நடைபெற்றது.
-
பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நீலகிரியில் உற்சாக வரவேற்பு
12 May 2025ஊட்டி : பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நீலகிரி சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு தி.மு.க.வினர், பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாகமாக வரவேற்றனர்.
-
ஒரே நாளில் 2 முறை குறைந்த தங்கம் விலை
12 May 2025சென்னை : தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இருமுறை சரிவு காணப்பட்டது. நேற்று ஒரேநாளில் சவரன் ரூ.2360 குறைந்து விற்பனையானது.
-
தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
12 May 2025சென்னை : தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 13) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சேவை செய்யும் தூய உள்ளங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் செவிலியர் தின வாழ்த்து
12 May 2025சென்னை : தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி, மதம், நிறம் பற்றி சிந்திக்காமல், அனைவருக்கும் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களுக்கு, உலக செவிலியர
-
நாட்டின் பாதுகாப்பிற்காக 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு: இஸ்ரோ
12 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் சற்று தணிந்திருக்கும் நிலையில், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில
-
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் புற்றுநோய் கண்டறியும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
12 May 2025திருவள்ளூர் : திருப்பாச்சூர் துணை சுகாதாரம் நிலையத்தில் சமுதாய அளவிலான புற்று நோய் கண்டறியும் திட்ட விரிவாக்கத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
-
சேலம் முதிய தம்பதி கொலை: பீகார் இளைஞர் கைது
12 May 2025சேலம் : சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்த முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் பீகார் மாநில தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு
12 May 2025சென்னை : பிளஸ்-2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்பட்ட நிலையில் விடைத்தாள் நகலுக்கு இன்று முதல் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளத
-
எல்லை பகுதிகளில் தனிந்த போர் பதற்றம்: 32 விமான நிலையங்களிலும் மீண்டும் சேவை தொடக்கம்
12 May 2025புதுடெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த வாரம் நடந்த ஆயுத மோதலைத் தொடர்ந்து சிவில் விமானங்களை இயக்க 32 விமான நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட தடை திரும்பப்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2025
13 May 2025 -
பொள்ளாச்சி வழக்கு: பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும்: அன்புமணி
13 May 2025சென்னை : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை சிறை என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
13 May 2025சென்னை : பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது.
-
இந்தியாவுடனான மோதலில் 11 பாக்., வீரர்கள் உயிரிழப்பு
13 May 2025இஸ்லாமாபாத் : மே 7 முதல் 4 நாட்களுக்கு நடைபெற்ற இந்தியாவுடனான மோதலில் தங்கள் ராணுவத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
-
இந்தியாவுடனான மோதலில் 11 பாக்., வீரர்கள் உயிரிழப்பு
13 May 2025இஸ்லாமாபாத் : மே 7 முதல் 4 நாட்களுக்கு நடைபெற்ற இந்தியாவுடனான மோதலில் தங்கள் ராணுவத்தைச் சேர்ந்த 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
-
பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : கோவை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
13 May 2025கோவை : பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
-
9 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது: மகளிர் உரிமைத் திட்டத்தில் வரும் ஜூன் 4-ம் தேதி விண்ணப்பிக்கலாம்
13 May 2025சென்னை : மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுப்பட்ட பெண்கள் வரும் ஜூன் 4-ம் தேதி விண்ணப்பிக்கலாம்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு திட்டங்களால் மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டி : தமிழக அரசு பெருமிதம்
13 May 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு திட்டங்களால் மகளிர் நலன்களை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டியாக உள்ளது என்று தமிழக அரசு பெருமிதம் தெரிவித்து
-
மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளை தி.மு.க. அரசு நிலைநாட்டி வருகிறது : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
13 May 2025சென்னை : மக்களின் சட்டப்பூர்வ உரிமைகளை தி.மு.க. அரசு நிலைநாட்டி வருகிறது என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்ற நடந்த முயற்சிகளை தி.மு.க .முறியடித்தது : தீர்ப்பை வரவேற்று துணை முதல்வர் உதயநிதி பதிவு
13 May 2025சென்னை : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இன்றைக்கு நீதி கிடைக்க தி.மு.க.வே காரணம் என்று பொள்ளாச்சி வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து வழங்கிய தீர்ப்பை வரவேற்று துணை மு
-
எங்களுடைய கூட்டணி வலுவாக இருக்கிறது: 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி கூட்டணி தொடரும் : முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில்
13 May 2025சென்னை : எங்களுடைய கூட்டணி வலுவாக, கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.