எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை, கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் சீரான குடிநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய, சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன், கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நேற்றுமுன்தினம் மற்றும் நேற்று சட்டமன்ற உறுப்பினர்கள் குடிநீர் வரவில்லை என்று கூறினார்கள். இது தொடர்பாக மாநகர ஆணையரை அனுப்பி விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் 7 நகராட்சி, 33 பேரூராட்சிகள் உள்ளது. 22 லட்சம் பேர் மக்கள் உள்ளனர். சிறுவானி, பிள்ளூர் ஆகிய 6 திட்டப்பணிகள் மூலம் 325 எம்எல்டி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், நபருக்கு 142 லிட்டர் குடிநீர் வழங்கப்பட உள்ளது. அனைத்து வார்டுகளிலும் சீரான குடிநீர் வழங்க ஆணையருக்கு அறிவுறுத்தி உள்ளேன். பிள்ளூர் கூட்டுகுடிநீர் திட்டம் பைப்லைன் போடுவதற்கு தடைஆணை பெறப்பட்டதால் 2 ஆண்டுகள் தடைபட்டது. பின் பணிகள் முடிக்கப்பட்டது. நீங்கள் ஆரம்பித்தீர்கள், நாங்கள் முடித்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


