எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மே.12 - சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி சென்னையில் உள்ள 17 தொகுதிகள் 4 மையங்களில் வாக்கு எண்ணப்படுகிறது. இதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3 அடுக்கு பாதுகாப்புடன் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
இது பற்றி நேற்று செய்தியாளர்களை சந்தித்த போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது:-
சென்னையில் உள்ள 16 தொகுதிகள் மற்றும் காஞ்சிபுரத்தில் ஒரு தொகுதி சேர்த்து 17 தொகுதிகளுக்கு 4 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
சென்னைக்கு உட்பட்ட இடத்தில் 3 மையங்களும், காஞ்சிபுரத்தில் ஒரு வாக்கு எண்ணிக்கை மையமும் சென்னை போலீசாரின் பாதுகாப்பில வருகிறது. லயோலா கல்லூரி, அண்ணா பலக்கலைக்கழகம், ராணி மேரி கல்லூரி ஆகிய மையங்கள் சென்னையிலும், முகமது சதக் கலைக்கல்லூரி காஞ்சி மாவட்டத்திலும் வருகிறது. லயோலா கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பெரம்பூர், கொளத்தூர், வில்லவாக்கம், திரு.வி.க.நகர், எழும்பூர், ஆயிரம்விளக்கு, அண்ணாநகர் ஆகிய தொகுதிகளும், அண்ணா பல்கலைக்கழக வாக்கு மையத்தில், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய தொகுதிகளும், ராணி மேரி கல்லூரி வாக்கு மையத்தில் ஆர்.கே.நகர், துறைமுகம், ராயபுரம், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி ஆகிய தொகுதிகளும், முகமதுசதக் கலைக்கல்லூரி வாக்கு மையத்தில் சோளிங்நல்லூர் தொகுதியின் வாக்குகளும் எண்ணப்படும்.
ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கும், ஒவ்வொரு இணை ஆணையர் தலைமையில் இரண்டு துணை ஆணையர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஒரு துணை ஆணையர் வாக்கு மையத்தின் உள்ளேயும், ஒரு துணை ஆணையர் வாக்கு மையத்தின் வெளியிலும் பாதுகாப்புக்களை கவனிப்பார்கள். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு உதவி ஆணையர் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்படுவார்கள்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 துணை ஆணையர்கள், 7 உதவி ஆணையர்கள், 27 ஆய்வாளர்கள், 63 உதவி ஆய்வாளர்கள் உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். லயோலா கல்லூரியில் 2 துணை ஆணையர்கள், 2 கூடுதல் துணை ஆணையர்கள், 10 உதவி ஆணையர்கள், 30 ஆய்வாளர்கள், 60 உதவி ஆய்வாளர்கள் உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
ராணி மேரி கல்லூரி வாக்கு மையத்தில் 2 துணை ஆணையர்கள், 7 உதவி ஆணையர்கள், 28 ஆய்வாளர்கள், 55 உதவி ஆய்வாளர்கள் உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். முகமதுசதக் கலைக்கல்லூரி வாக்கு மையத்தில் 1 துணை ஆணையர், 3 உதவி ஆணையர், 9 ஆய்வாளர்கள், 20 உதவி ஆய்வாளர்கள் உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
மொத்தம் 2700 போலீசார், 320 துணை ராணுவப்படை உட்பட 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் வெளியே 1 அடுக்கும், வாக்கு எண்ணிக்கை மைய வாயிலுக்கும் வாக்கு எண்ணிக்கை மைய கட்டிடத்திற்கும் இடையேயில் 1 அடுக்கு பாதுகாப்பும், வாக்கு எண்ணிக்கை மைய கட்டிட வாசலில் 1 அடுக்கு பாதுகாப்பும் போடப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை 100 மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அனுமதிக்கப்படாது. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு தலைமை தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். தேர்தல் அதிகாரிகள் வாகனம் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கப்படும். கண்காணிப்பாளர்கள், தேர்தல் அலுவலர்கள், வேட்பாளர்கள், தலைமை ஏஜெண்டுகள், செய்தியாளர்கள் மட்டுமே செல்போன் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள், காவலர்களில் உதவி ஆணையர், மற்றும் அதற்கு மேல் பதவியில் உள்ள காவல் அதிகாரிகள் மட்டுமே உள்ளே கொண்டு செல்லலாம்.
வாக்கு எண்ணிக்கை ஏஜெண்டுகள் பென்சில் மட்டுமே எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவார்கள். கேமரா, வீடியோ கேமரா, சாதாரண ரக கால்குலெட்டர் அனுமதி உண்டு. தேர்தல் அலுவலர்கள் வாகனம் தவிர மற்றவர்களின் வாகனங்கள் குறிப்பிட்ட அனுமதிக்கப்பட்ட இடங்களிலும் மட்டுமே அனுமதிக்கப்படும். உணவுப்பொருட்கள், தண்ணீர், தீப்பெட்டிகள், சயின்டிபிக் கால்குலெட்டர், இங்க்பேனா உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை. அனுமதி இன்றி எடுத்து வரும் பொருட்கள் போலீஸ் கவுன்டரில் பாதுகாக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்களிடம் டோக்கன் வழங்கப்படும்.
வாக்கு மைய கட்டிடத்தின் உள்ளே 4 பிரிவுகள் பிரிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல் பிரிவு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இங்கு வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் அனுமதிக்கப்படுவார்கள். 2 பிரிவில் தேர்தல் அலுவலக கண்காணிப்பு அலுவலகம் இயங்கும், 3 -வது பிரிவில் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும், அவர்கள் இங்கு அமர்ந்து செய்திகளை சேகரிக்கலாம். இந்த அறையில் மட்டுமே கேமராக்கள், செல்போன்கள் வைத்துக்கொள்ளலாம். 4-வது பிரிவில் வேட்பாளரும், அவர்களுடைய ஏஜெண்டுகளும் பயன்படுத்தும் வகையில் அமைந்திருக்கும். இங்கு அவர்களது செல்போன்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
தலைமைத் தேர்தல் ஆணையருடன் தி.மு.க. எம்.பி.க்கள் சந்திப்பு
17 Jul 2025புதுடில்லி: டில்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தி.மு.க. எம்.பி.க்கள் நேற்று (வியாழக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளனர்.
-
தமிழகத்தில் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: வி.சி.க. தலைவர் திருமாவளவன்
17 Jul 2025சென்னை, தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறினார்.
-
வங்கதேசத்தில் மோதல்: 4 பேர் பலி
17 Jul 2025டாக்கா: வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
-
பா.ம.க. மகளிர் மாநாடு துண்டு பிரசுரத்தில் அன்புமணியின் பெயர், படம் புறக்கணிப்பு
17 Jul 2025சென்னை: பூம்புகார் மகளிர் மாநாடு துண்டு பிரசுரங்களில் அன்புமணியின் பெயர், புகைப்படம் புறக்கணிக்கப்பட்டுள்ளது பா.ம.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
13 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் மேலும் 488 இடங்கள் அதிகரிப்பு
17 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை பட்டப்பிரிவுகளில் 488 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Jul 2025சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 18) நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர்,
-
த.வெ.க.வின் மாநாடு குறித்து 50-க்கும் மேற்பட்ட கேள்விகள் மதுரை காவல்துறை எழுப்பியது
17 Jul 2025மதுரை: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு குறித்து சுமார் 50 கேள்விகளை காவல்துறையினர் எழுப்பியுள்ளனர்.
-
ஆடும் அணியிலிருந்து கருண் நாயர் நீக்கப்படுகிறார்? பரபரப்பு தகவல்
17 Jul 2025லண்டன்: கருண் நாயருக்கான நேரம் முடிந்துவிட்டதாகவும், அடுத்த போட்டிக்கான பிளேயிங் லெவனில் அவர் இடம்பெற வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
-
வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
17 Jul 2025சென்னை: வடகிழக்குப் பருவமழைக் காலத்துக்கு முன்பே மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
அடுத்த 2 போட்டிகளிலும் பும்ரா விளையாட வேண்டும் அனில் கும்ப்ளே வலியுறுத்தல்
17 Jul 2025சென்னை: இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் இந்திய பவுலர் பும்ரா விளையாட வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறியுள்ள
-
த.வெ.க. கட்சிக் கொடி விவகாரம்: விஜய் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
17 Jul 2025சென்னை, த.வெ.க. கட்சிக் கொடி தொடர்பாக த.வெ.க. மற்றும் அதன் தலைவர் விஜய் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
கர்நாடகாவில் வருகிற 5-ம் தேதி முதல் அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்
17 Jul 2025பெங்களூரு, கர்நாடகாவில் வருகிற 5-ம் தேதி முதல் அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
-
தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக இந்தூர் முதல் இடம்
17 Jul 2025புதுடெல்லி, தூய்மையான நகரங்களின் பட்டியலில் 8-வது முறையாக மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்பதிவை தொடங்கி வைத்தார்
17 Jul 2025சென்னை, 37 கோடி ரூபாய் மொத்த பரிசுத் தொகை கொண்ட 2025-ம் ஆண்டு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான முன்பதிவினை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.&nbs
-
மரணமடைந்தவர்களின் 1.17 கோடி ஆதார் எண்கள் முடக்கம்
17 Jul 2025டெல்லி: 1.17 கோடி ஆதார் எண்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
17 Jul 2025சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,840-க்கு விற்பனையானது.
-
ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு
17 Jul 2025சென்னை, ஆனைமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ராணுவ தலைமையகம் மீது குண்டு வீச்சு- இஸ்ரேலுக்கு சிரியா எச்சரிக்கை
17 Jul 2025டமாஸ்கஸ்: சிரியாவில் ஸ்விடா மாகாணத்தில் ட்ரூஸ் மதத்தினருக்கும், பெடொய்ன் பழங்குடியினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
-
ஐ.பி.எல். காரணமாக மே.இ.தீவுகள் அணி தரம் குறைந்து வருகிறது: லாரா
17 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின்: ஐ.பி.எல். மற்றும் மற்ற டி20 லீக் ஆகியவற்றின் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் தரம் குறைந்து வருகிறது என லாரா தெரிவித்துள்ளார்.
-
பும்ராவை காயப்படுத்த இங்கிலாந்து வீரர்கள் முயற்சி: கைப் குற்றச்சாட்டு
17 Jul 2025லண்டன்: பென் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் ஆகிய இருவரும் பவுன்சர் வீசி பும்ராவை காயப்படுத்த முயற்சித்தனர் என முகமது கைப் குற்றம்சாட்டியுள்ளார்.
-
திருப்புவனம் காவலாளி மரண வழக்கு: 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன்
17 Jul 2025சிவகங்கை: மடப்புரம் காவலாளி மரண வழக்கில் 5 பேருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது.
-
ஒரே நாளில் 30 பேர் பலி: பாக்.கில் மழைக்கால அவசரநிலை அறிவிப்பு
17 Jul 2025லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பருவமழை தொடர்பான சம்பவங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் பலியாகியுள்ள நிலையில் மாகாண அரசு பல்வேறு பகுதிகளில் "மழை அவசரநிலைய
-
ராபர்ட் வதேராவின் ரூ.36 கோடி சொத்து பறிமுதல்
17 Jul 2025டெல்லி: ராபர்ட் வதேராவின் ரூ.36 கோடி சொத்தை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
-
உண்மையை திரித்து எழுத முடியாது: கீழடி ஆய்வாளர் அமர்நாத் உறுதி
17 Jul 2025சென்னை, கீழடி அறிக்கையின் உண்மையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது.
-
தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு அளவே இல்லையா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
17 Jul 2025சென்னை, தி.மு.க.-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா? என திருச்சி சிவாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.