எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மும்பை : ஐ.பி.எல். தொடரில் அதிவேக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ள 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
அதிரடி சதம்...
ஐ.பி.எல். தொடரில் ஜெய்பூரில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
முறியடிப்பு...
ஐ.பி.எல். தொடரில் அதிவேக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை யூசுப் பதான் தன்வசம் வைத்திருந்த நிலையில், அதனை தற்போது சூர்யவன்ஷி முறியடித்துள்ளார். யூசுப் பதான் 37 பந்துகளில் சதம் விளாசியிருந்த நிலையில், சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் விளாசி அவரது சாதனையை முறியடித்தார்.
பாராட்டு மழை...
ஐ.பி.எல். தொடரில் அதிவேக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்துள்ள வைபவ் சூர்யவன்ஷியை கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் வெகுவாக பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
சச்சின் டெண்டுல்கர்...
வைபவ் சூர்யவன்ஷி அச்சமின்றி பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாடினார். அவரது பேட்டின் வேகம், பந்தின் லென்த்தினை கணித்து சிறப்பாக விளையாடிய விதம் அவரது வெற்றியின் ரகசியம். கடைசியில் முடிவு 38 பந்துகளில் 101 ரன்கள். மிகவும் நன்றாக விளையாடினீர்கள் சூர்யவன்ஷி.
யூசுப் பதான்...
ஐ.பி.எல். தொடரில் அதிவேகமாக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற என்னுடைய சாதனையை முறியடித்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு எனது வாழ்த்துகள். அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிபோது, இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது அவரது சதத்தினை மேலும் சிறப்பானதாக மாற்றியுள்ளது.
யுவராஜ் சிங்...
நீங்கள் 14 வயதில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இந்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாடி சதம் விளாசியுள்ளார். வைபவ் சூர்யவன்ஷி - இந்த பெயரை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். துளியும் அச்சமற்ற அதிரடியான ஆட்டம். உங்களது அதிரடியான ஆட்டத்தைப் பார்த்து பெருமையாக இருக்கிறது.
சூர்யகுமார் யாதவ்...
வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியான ஆட்டத்தை என்னால் நம்பவே முடியவில்லை. முற்றிலும் அதிரடியான ஆட்டம்.
முகமது ஷமி...
வைபவ் சூர்யவன்ஷி, என்ன ஒரு அசாத்திய திறமை கொண்ட இளம் வீரர். 14 வயதில் சதம் விளாசுவது நம்பமுடியாத விதமாக இருக்கிறது. தொடர்ந்து சிறப்பாக விளையாடுங்கள்.
மிதாலி ராஜ்...
வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தினைப் பார்த்தபோது, வரலாறு படைக்கப்படுவதை பார்ப்பது போன்று உணர்ந்தேன். 14 வயதில் 200-க்கும் அதிகமான இலக்கை எடுக்கவேண்டிய போட்டியில் மிகுந்த நம்பிக்கையுடன் சிறப்பாக விளையாடினார். 35 பந்துகளில் அதிரடியாக சதம் விளாசி அசத்தினார். சிறப்பாக விளையாடினீர்கள்.
இயான் பிஷப்...
வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் மிகவும் அற்புதமாக இருந்தது. இந்த இளம் வயதில் இப்படி ஒரு அதிரடியான ஆட்டத்தை நம்ப முடியவில்லை.
ஆரோன் பின்ச்...
இதுபோன்ற ஒரு ஆட்டத்தை இதற்கு முன்பாக நீங்கள் யாராவது பார்த்திருக்கிறீர்களா? என்ன ஒரு திறமையான வீரர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 4 days ago |
-
கோடை விடுமுறை நிறைவு: ஐகோர்ட்டின் வழக்கமான பணிகள் இன்று துவக்கம்
01 Jun 2025சென்னை : ஒரு மாத கோடை விடு முறைக்குப்பிறகு சென்னை உயர் நீதிமன் றம் தனது அன்றாடப் பணிகளை இன்று முதல் தொடங்குகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-06-2025
01 Jun 2025 -
பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
01 Jun 2025பழனி : வார விடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
-
வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு: மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் இன்பதுரை, தனபால் போட்டி: தே.மு.தி.க.வுக்கு 2026-ல் சீட் என உறுதி
01 Jun 2025சென்னை : மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க.
-
தி.மு.க.வில் இரண்டு புதிய அணிகள்: மதுரை பொதுக்குழுவில் அறிவிப்பு
01 Jun 2025சென்னை : தி.மு.க.வில் மாற்றுத்திறனாளிகள் அணி, கல்வியாளர் அணி என இரண்டு புதிய அணிகள் உருவாக்கப்படுவதாக தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி ‘மதராசி கேம்ப்’ மக்கள் சொந்த ஊர் திரும்ப உதவி: தமிழக அரசு உறுதி
01 Jun 2025சென்னை : புதுடெல்லியின் 'மதராசி கேம்ப்' குடியிருப்பாளர்களில் உள்ள தமிழர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கு அரசு உதவிக்கரம் நீட்டும் 
-
அ.தி.மு.க.-தே.மு.தி.க. உறவை உடைக்கும் முயற்சி நடக்காது : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
01 Jun 2025சென்னை : அ.தி.மு.க., - தே.மு.தி.க., இடையே சுமூகமான உறவு உள்ளது.
-
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி
01 Jun 2025நெல்லை : மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் என்ஜின் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
-
வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு
01 Jun 2025குவாஹாட்டி : வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
தி.மு.க. உறுப்பினர் விபத்தில் இனி இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
01 Jun 2025மதுரை : தி.மு.க. உறுப்பினர் சாலை விபத்தில் இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
பொது இடங்களில் எச்சில் துப்பினால் இனி ரூ.1,000 அபராதம்: கர்நாடக அரசு
01 Jun 2025பெங்களூரு : பொது இடங்களில் புகையிலை பயன்படுத்திவிட்டு எச்சில் துப்பினால், அவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.
-
2026-ல் வரலாறு காணாத வெற்றிக்கு மதுரை பொதுக்குழு அடித்தளமாக அமையட்டும்: உதயநிதி ஸ்டாலின்
01 Jun 2025சென்னை : 2026-ல் கழகம் பெறவிருக்கும் வரலாறு காணாத வெற்றிக்கு மதுரை பொதுக்குழு அடித்தளமாக அமையட்டும்.என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .
-
தே.மு.தி.க.வின் நிலைப்பாடு தேர்தலை ஒட்டி அறிவிக்கப்படும்: பிரேமலதா
01 Jun 2025சென்னை : தே.மு.தி.க.வின் பயணமும் தேர்தலை ஒட்டியே இருக்கும்" என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
-
பா.ம.க.வில் நிரந்தர தலைவர் யாரும் இல்லை: அன்புமணி
01 Jun 2025சென்னை : 'பா.ம.க.,வில் நிரந்தர தலைவர் யாரும் இல்லை' என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
-
குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
01 Jun 2025தென்காசி : தென்காசியில் மழை குறைந்து நீர்வரத்து சீராக இருந்ததால் ஒரு வாரத்துக்கு பின்னர் நேற்று (ஜூன் 1) முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
-
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடக்கம்
01 Jun 2025மேட்டூர் : மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த 3 அலகுகளில், மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
-
தலைவர்கள் குறித்து சர்ச்சை பேச்சு: எனது அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாக எடுத்துக் கொள்கிறேன்: ஆதவ்அர்ஜூனா
01 Jun 2025சென்னை : அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.
-
முதல்போக பாசனத்துக்காக முல்லை பெரியாறு அணையிலிருந்து நீர் திறப்பு
01 Jun 2025குமுளி : கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல்போக பாசனத்துக்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் நேற்று (ஜூன் 1) தண்ணீரை திறந்து வைத்தார்.
-
வடகிழக்கு மக்களுக்கு பாறை போன்று மோடி அரசு துணை நிற்கும்: அமித்ஷா
01 Jun 2025கொல்கத்தா : வடகிழக்கு மாநில மக்களுக்கு ஒரு பாறை போன்று மோடி அரசு துணையாக நிற்கும் என்று அமித்ஷா பதிவிட்டு உள்ளார்.
-
ரஷ்யாவில் பாலம் இடிந்ததில் ரயில் தடம் புரண்டு 7 பேர் பலி
01 Jun 2025மாஸ்கோ : ரஷ்யாவில் பாலம் இடிந்து விழுந்ததில் ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
ஆக்ரோஷமாக கொண்டாடி கோமாளியாக விரும்பவில்லை: பும்ரா கருத்தால் திடீர் பரபரப்பு
01 Jun 2025மும்பை : ஜஸ்பிரீத் பும்ராவின் சமீபத்திய பேட்டி விராட் கோலி ரசிகர்களை சீண்டும் விதமாக அமைந்துள்ளது கிரிக்கெட் உலகில் பேசுபொருளாகியுள்ளது.
-
இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு: காசாவில் 30 பேர் பலி
01 Jun 2025ஜெருசலேம் : காசாவில் உதவி மையம் அருகே இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனர்கள் 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 115 பேர் பலத்த காயமடைந்தனர்.
-
போதைப்பொருள் பயன்பாடு: எலான் மஸ்க் மறுப்பு
01 Jun 2025நியூயார்க் : நான் எந்த போதைப் பொருளையும் பயன்படுத்தவில்லை.
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சுப்மன் கில்லுக்கான மிகப் பெரிய வாய்ப்பு: முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் சபா கரீம்
01 Jun 2025மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் சுப்மன் கில்லுக்கான மிகப் பெரிய வாய்ப்பு என முன்னாள் அணித் தேர்வுக்குழு உறுப்பினர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.
-
பஸ் கவிழ்ந்து விபத்து; நைஜீரியாவில் விளையாட்டு வீரர்கள் 21 பேர் பரிதாப பலி
01 Jun 2025அபுஜா : நைஜீரியாவில் சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் விளையாட்டு வீரர்கள் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.