எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தனிப்பட்ட ஸ்டாலினையோ, தி.மு.க அரசையோ நீங்கள் பாராட்ட வேண்டும் என்று நான் கேட்கவில்லை. தமிழ்நாட்டை பாராட்டுங்கள் என்றுதான் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், தனித்துவத்தையும் மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் துணையோடு தமிழ்நாட்டை நிச்சயம் வளர்த்தெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்று சென்னையில் நடந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் உடனான சந்திப்பு நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (மே 6) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள், ஊடகத்துறையினர் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியதாவது: “2021-ல், தமிழ்நாட்டில் மக்களுடைய நம்பிக்கையையும், ஆதரவையும் பெற்று, ஆறாவது முறையாக திமுக ஆட்சி அமைந்தது. மே 7-ம் நாள் நான் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டேன். இன்று மே-7 திராவிட மாடல் அரசு 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போகிறது.
தேர்தல் அறிக்கையில் சொன்ன பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல திட்டங்களையும் தொலைநோக்குப் பார்வையோடு அதையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும், புதிய புதிய திட்டங்களை அறிவிக்கிறோம், நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் சாதனைத் திட்டத்தின் தொடக்கத்திற்கான நாளாக இருந்து கொண்டிருக்கிறது.
நாம் எந்த மாதிரியான சூழலில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றோம், மற்ற எல்லோரையும் விட பத்திரிகையாளர்களான உங்களுக்குத் தான் நன்றாக தெரியும். முந்தைய ஆட்சியாளர்களால் சீரழிந்த பத்தாண்டு கால நிர்வாகம் ஒருபக்கம். மதவாதம் உள்ளிட்ட பிற்போக்குத்தனங்களுக்கு இடமளித்து, இந்திய நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கக்கூடிய அந்த நிலை ஒரு பக்கம். தமிழ்நாட்டுக்கு எந்தவித ஒத்துழைப்பையும் தர மறுக்கும் மத்திய அரசு இன்னொரு பக்கம்.
இதையெல்லாம் சமாளித்து நாம் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு போகவேண்டும் என்ற எண்ணம்தான் எனக்குள் இருந்தது. சரியான இலக்கை நிர்ணயித்து, அதனை நோக்கி உறுதியாக பயணித்து, நிச்சயம் சாதிக்க முடியும் என்பதற்கு இந்த நான்காண்டு கால திராவிட மாடல் அரசே சாட்சியாக அமைந்திருக்கிறது.
அரசுகளை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று, கொள்கை அரசு. இன்னொன்று, சேவை அரசு. நம்முடைய திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரைக்கும், கொள்கை , சேவை இரண்டிலும் சிறந்து விளங்குகின்ற அரசாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நான்காண்டுகளில் எப்படிப்பட்ட நெருக்கடிகள் எல்லாம் வந்தன, எவ்வளவு அவதூறுகள் பரப்பப்பட்டன என்பது வேறு யாரையும் விட உங்களுக்கு நன்றாக தெரியும். இருந்தாலும், எந்த இடத்திலும், நாங்கள் கொள்கையில் தடம் மாறவில்லை. எந்தச் சூழ்நிலையிலும் மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் நாங்கள் சோர்ந்து போகவில்லை.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், விடியல் பயணம் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்கள், நான் முதல்வன் திட்டம் என்று ஏராளமான திட்டங்களை வரிசைப்படுத்தி சொல்லிக் கொண்டே இருக்க முடியும். இந்தச் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் உங்களுடைய பங்கு மிக அதிகம். அதற்கு முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
நீங்கள் நேர்மையாகவும், ஆக்கப்பூர்வமான அணுகுமுறையோடும் செயல்பட்டதால்தான் அரசின் சாதனைகள் மக்கள் மனதில் நிலைத்திருக்கிறது. இதற்காக நான் எத்தனை முறை உங்களுக்கு நன்றி சொன்னாலும் தகும். அரசின் செய்தி அறிக்கையை வெளியிடுவது, நேரலை செய்வது என்று மட்டுமல்லாமல், திட்டங்களின் நோக்கத்தை விளக்குவது, திட்டங்களால் பயன்பெற்றவர்களின் பேட்டிகளை பதிவு செய்து வெளியிடுவது என்று நம்முடைய அரசின் செயல்பாடுகளை விரிவாக கொண்டு சேர்த்திருக்கிறீர்கள்.
என்னைப் பொறுத்தவரைக்கும், விமர்சனங்களை முன்வைத்தால், அதனை ஆக்கபூர்வமாக நான் ஏற்றுக்கொள்கிறவன். ஆலோசனைகள் இருந்தால், அதை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டிருக்கிறேன். உங்களுக்கு என்னுடைய அன்பான வேண்டுகோள் என்ன என்றால், இந்தியாவிற்கே முன்மாதிரியாக பல திட்டங்களைச் செயல்படுத்திக்கொண்டு இருக்கிறோம். நம்முடைய திட்டங்களை பார்த்து, பல்வேறு மாநில அரசுகள் அந்த திட்டங்களை அவர்கள் மாநிலங்களிலும் செயல்படுத்துகிறார்கள்.
அப்படிப்பட்ட திட்டங்களை, நீங்கள் மனப்பூர்வமாக பாராட்டவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். விமர்சிக்க வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. என்னுடைய அறுபதாண்டுகால அரசியல் வாழ்க்கையே விமர்சனங்களால் செதுக்கப்பட்டிருப்பது. உங்களுக்கு தெரியும். எனவே, நம்முடைய அரசின் திட்டங்களை இன்னும் செம்மைப்படுத்துவதற்கான கருத்துகள், ஆலோசனைகள் இருந்தால் நீங்கள் எடுத்துச் சொல்லுங்கள், அந்த திட்டங்களை இன்னும் சிறப்பாக செயல்படுத்துவோம். எல்லோருடைய கருத்துகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் நான் கவனமாக இருக்கிறேன்.
ஆனால், சில ஊடகங்கள் விமர்சிப்பதில் காட்டும் ஆர்வத்தை, நல்ல திட்டங்களை பாராட்டுவதில் அதிக கவனம் செலுத்துவது இல்லை. எல்லோரையும் சொல்லவில்லை. பாராட்டுவதில் மட்டும் மென்மையான போக்கைத்தான் கடைப்பிடிக்கிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை? பாராட்ட வேண்டியதை பாராட்டினால் தான், விமர்சனத்திற்கான மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். எனவே, தயாங்காமல் விமர்சிப்பது போன்று, தயங்காமல் பாராட்டுங்கள் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இந்தச் சந்திப்பில், உங்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காகதான் இந்த கூட்டத்தை கூட்டியிருக்கிறோம். தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மேலும் வலுப்படுத்த, உங்களுடைய ஆழமான, பரந்துபட்ட பார்வையும், அனுபவமும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக நிச்சயமாக இருக்கும். சமத்துவம், சமூகநீதி, சமதர்மம் , சகோதரத்துவம், மதச்சார்பின்மை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி ஆகிய அரசியல் பண்பாடுகளைக் கொண்ட மண், நம்முடைய தமிழ்நாடு. இந்த இலட்சியங்களை அடையும் பயணத்தில் நாங்கள் இருக்கிறோம். இந்தப் பயணத்தில், ஊடகங்களான உங்களின் பங்கு மிகவும் முக்கியமானது.
எனவே, தனிப்பட்ட ஸ்டாலினையோ, திமுக அரசையோ நீங்கள் பாராட்ட வேண்டும் என்று நான் கேட்கவில்லை. தமிழ்நாட்டை பாராட்டுங்கள் என்றுதான் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சியையும், தனித்துவத்தையும் மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். உங்கள் துணையோடு தமிழ்நாட்டை நிச்சயம் வளர்த்தெடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
நாளை மீனாட்சி திருக்கல்யாணம்: 2 சிறப்பு கட்டண சீட்டு விநியோகம்
06 May 2025மதுரை, மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு 2 வகையான சிறப்பு கட்டண சீட்டு விநியோகிக்கப்படவுள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை 2 நாட்கள் போர் பயிற்சி : ரபேல், மிராஜ் 2000 - சுகோய்-30 பங்கேற்பு
06 May 2025புதுடெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் 2 நாட்கள் போர் பயிற்சி நடத்தவுள்ளதாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
-
புதுக்கோட்டை, வடகாடு சம்பவம்: மதுபானக் கடைகளை மூட உத்தரவு
06 May 2025வடகாடு : புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உள்ள மதுபானக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
ஒரே நாளில் 2 முறை விலை உயர்ந்த தங்கம்
06 May 2025சென்னை : சென்னையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
06 May 2025வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.
-
இந்தியாவுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவோம்: அமெரிக்கா அறிவிப்பு
06 May 2025வாஷிங்டன் : பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிக்க அனைத்து விதமான முயற்சிகளையும் அமெரிக்க மேற்கொள்ளும் என்று அந்நாட்டு பிரதிநிதிகள் சபையின் சப
-
திருவள்ளூரில் தெப்பக் குளத்தில் தவறி விழுந்து மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
06 May 2025திருவள்ளூர் : திருவள்ளூர் வீரராகவபெருமாள் கோயில் தெப்பக் குளத்தில் தவறி விழுந்து, சேலையூர் வேத பாடசாலை மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம், பக்தர்கள், பொதுமக்கள் மத்தியி
-
நாடு முழுவதும் சாலை விபத்தில் காயமடைந்தால் இனி இலவச சிகிச்சை: மத்திய அரசு
06 May 2025புதுடெல்லி : நாடு முழுவதும் நிகழும் சாலை விபத்துகளில் காயமடைபவர்களுக்கு இனி இலவச சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
தீவிரவாதத்துக்கு எதிரான போர்: இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு
06 May 2025டோக்கியோ : தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிபர் விளாடிமிர் புதின் வாக்குறுதி அளித்துள்ளார்.
-
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள் இணையத்தில் வெளியீடு
06 May 2025புதுடெல்லி : சுப்ரீம்கோர்ட்டில் தற்போது 33 நீதிபதிகள் பணியாற்றி வரும் நிலையில், 21 பேரின் சொத்துகள், வெளியிடப்பட்டுஉள்ளது.
-
30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த உணவு பாதுகாப்பு துறை உத்தரவு
06 May 2025சென்னை : 30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள உணவு பாதுகாப்பு துறை, முறையான அனுமதியின்றி குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்தால் உடனட
-
மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் நியமனத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
06 May 2025சென்னை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 23.05.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முல்லை பெரியாறு வழக்கு: மேற்பார்வை குழு பரிந்துரைகளை கேரள அரசு செயல்படுத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
06 May 2025புதுடெல்லி, முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்க மேற்பார்வை குழு ஏப்ரல் 25ம் தேதி வழங்கி உள்ள பரிந்துரைகளை கேரளா அரசு செயல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட
-
காஷ்மீரில் விபத்து: 2 பேர் பலி
06 May 2025பூஞ்ச் : காஷ்மீரில் சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாராட்டுங்கள்: பத்திரிகை, ஊடகத்துறை சந்திப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
06 May 2025சென்னை, தனிப்பட்ட ஸ்டாலினையோ, தி.மு.க அரசையோ நீங்கள் பாராட்ட வேண்டும் என்று நான் கேட்கவில்லை. தமிழ்நாட்டை பாராட்டுங்கள் என்றுதான் கேட்டுக்கொள்கிறேன்.
-
முர்ஷிதாபாத் வன்முறை: பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து மம்தா பானர்ஜி ஆறுதல்
06 May 2025முர்ஷிதாபாத், முர்ஷிதாபாத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட 280 குடும்பங்களுக்கு தலா ரூ.1.20 லட்சம் வழங்குவோம் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
-
தேனி மாவட்டத்திற்கு மே 9, 12 விடுமுறை
06 May 2025தேனி, மே 6-ம் தேதியன்று தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
-
மு.க.ஸ்டாலின் உடன் நடிகர் பிரகாஷ் ராஜ் சந்திப்பு
06 May 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினை நடிகர் பிரகாஷ் ராஜ் நேற்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார் .
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2025
07 May 2025 -
இங்கு அனைவரும் சகோதர சகோதரிகளாக உள்ளனர்: தமிழிசைக்கு அமைச்சர் சேகர் பாபு பதில்
06 May 2025சென்னை, மொழியால், மதத்தால் பிளவு ஏற்படுத்தி தேர்தல் நேரத்தில் குளிர்காயலாம் என்று தமிழிசை சௌந்தரராஜன் நினைப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
ஒருநாள் முன்பே பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நாளை வெளியீடு : அரசு தேர்வுத்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு
06 May 2025சென்னை : பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுத் துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
-
மோதல் தவிர்க்கப்பட வேண்டும்: ஐ.நா. பொதுச் செயலாளரிடம் பாக். பிரதமர் வேண்டுகோள்
06 May 2025இஸ்லாமாபாத் : இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் தவிர்க்கப்பட வேண்டும் என்று ஐ.நா.
-
இந்தியா-இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு
06 May 2025புதுடெல்லி, இரு நாடுகளுக்கும் நன்மை தரக் கூடிய வகையில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இரட்டை பங்களிப்பு மாநாடு முடிவு இறுதி செய்யப்பட்
-
தி.மு.க.வை வீழ்த்த நினைப்பவர்களின் கணக்கு தப்புக்கணக்காகவே முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
06 May 2025சென்னை, சந்தர்பவாதிகளிடம் மறைமுக கூட்டணி வைத்து தி.மு.க.வை வீழ்த்த நினைப்பவர்களின் கணக்கு தப்புக்கணக்காகவே முடியும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையி
-
தோனிக்காக விதியை மாற்றியது இந்திய கிரிக்கெட்டுக்கு ஆபத்து : சுனில் கவாஸ்கர் விமர்சனம்
06 May 2025சென்னை : நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக வெளியேறியது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள சி.எஸ்.கே.