எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோவை, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி நந்தினி தேவி, நேற்று 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு கடந்து வந்த பாதை பின்வருமாறு:-
தமிழகத்தை உலுக்கிய கொடூரம்;
2019 பிப்ரவரி தொடக்கம்:- பொள்ளாச்சி பாலியல் வல்லுறவு வழக்கு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
2019 பிப்.12:- பாலியல் வன்கொடுமை தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் கொடுத்தார்.
2019 பிப்.24:- புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
2019 மார்ச்.5:- தலைமறைவாக இருந்து வீடியோ பதிவு வெளியிட்ட திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார். அவரது செல்போனில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் பதியப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றம்
2019 மார்ச் கடைசி:- இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.
2019 ஏப்.25:- சி.பி.ஐ.க்கு வழக்கு மாற்றப்பட்டது. குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், லேப்டாப்களில் இருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் மின்னணு ஆதார ஆவணங்களாக பதிவு செய்யப்பட்டன.
குற்றப்பத்திரிகை தாக்கல்
2019 மே.24:- பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்ட 20 பெண்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றவாளிகள் சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தராஜன், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
2021 ஜன.6:- வழக்கில் தேடப்பட்டு வந்த அருளானந்தம், ஹெரன்பால், பாபு ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது. 3 பேரும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டதால் அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
2021 பிப்.22:- அருளானந்தம், ஹெரன்பால், பாபு ஆகியோர் மீது 2-வது கூடுதல் குற்றப்பத்திரிகை கோவை மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
2021 ஆக.16:- 9-வது குற்றவாளியான அருண்குமார் கைது செய்யப்பட்டார். அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
2024 பிப்.23:- சி.பி.ஐ. கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பித்த நிலையில் 9 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
2025 ஏப்.5:- குற்றம்சாட்டப்பட்ட 9 பேரிடம் கேள்விகள் கேட்பதற்காக கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு:
2025 ஏப்.28:- இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் மே மாதம் 13-ந் தேதி தீர்ப்பு வெளியிடப்படும் என்று கோவை மகளிர் நீதிமன்றம் தெரிவித்தது.
2025 மே 13 (நேற்று):- காலை 10.30 மணிக்கு குற்றம் சுமத்தப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள்தான் என்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி, 12.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதி
பொள்ளாச்சி பாலியல் வழக்கை கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தொடர்ந்து 5 ஆண்டுகளாக விசாரித்து வந்தார். இடையில் அவருக்கு பணியிட மாற்ற உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, இந்த வழக்கை அவர் விசாரித்து வந்தார். குற்றவாளிகள் 9 பேர் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் 76 விதமான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அரசு தரப்பில் 205 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டன.
குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து 12 ஆவணங்கள் குறிக்கப்பட்டன. 11 ஆவணங்களை நீதிமன்றமே தானாக எடுத்துக்கொண்டது. குற்றவாளிகளிடம் கைப்பற்றப்பட்ட செல்போன்கள், லேப்டாப், ஹார்டு டிஸ்க் உள்பட 30 பொருட்கள் ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பெண்களும், 48 சாட்சியாக இறுதிவரை பிறழ்சாட்சியாக மாறவில்லை. மொத்தம் 1500 பக்கங்களில் குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. சாட்சிகளிடம் 236 கேள்விகள் கேட்கப்பட்டு அவை பதிவு செய்யப்பட்டன. இத்தனையையும் அலசி ஆராய்ந்த நீதிபதி நந்தினி தேவி நேற்று 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா தலையீடு : அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
14 May 2025சவுதி : இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தனது தலையீடு இருந்தது என்று மீண்டும் வலியுறுத்திப் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.
-
தங்கம் விலை ரூ.400 சரிவு
14 May 2025சென்னை : சென்னையில் நேற்று (மே 14) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.70,440க்கு விற்பனையானது.
-
350 ட்ரோன்களை பறக்கவிட்டு பாகிஸ்தான் வீரர்களுக்கு பயிற்சி அளித்த துருக்கி..!
14 May 2025புதுடில்லி : இந்தியாவுக்கு எதிரான போரின் போது, பாகிஸ்தானுக்கு 350 ட்ரோன்களையும், அதனை இயக்குவதற்கு ஆபரேட்டர் களையும் துருக்கி வழங்கியது தெரிய வந்துள்ளது.
-
தமிழ்நாட்டிற்கான அனைத்தையும் பெற்று தரும் இயக்கம் அ.தி.மு.க : எடப்பாடி பழனிசாமி பேட்டி
14 May 2025சென்னை : தமிழ்நாட்டிற்கான அனைத்தையும் பெற்று தரும் இயக்கம் அ.தி.மு.க என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு கூடுதல் பாதுகாப்பு
14 May 2025புதுடெல்லி : பாகிஸ்தான் - இந்தியா போர் பதற்றம் சற்று தணிந்திருக்கும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.
-
கோடநாடு வழக்கிலும் நிச்சயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
14 May 2025ஊட்டி : பொள்ளாச்சி வழக்கை போன்று கோடநாடு வழக்கிலும் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர் என்று ஊட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ஜனாதிபதி திரெளபதி முர்முவுடன் முப்படை தளபதிகள் சந்திப்பு : ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம்
14 May 2025புதுடில்லி : 'ஆபரேஷன் சிந்தூர்' திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, டில்லியில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை அவரது இல்லத்தில் முப்படை தளபதிகள் மற்றும் முப்படை தலைமை தளபதி அ
-
ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
14 May 2025ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார். கண்காட்சி வருகிற 25-ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
-
நீலகிரி அரசு மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு : நோயாளிகளிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்
14 May 2025ஊட்டி : முதல்வர் மு.க.
-
அருணாச்சல் எங்களுடையதே: சீனாவுக்கு இந்தியா கண்டனம்
14 May 2025புதுடெல்லி : அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளின் பெயரை சீனா மாற்றியுள்ள நிலையில் அதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
-
தமிழகத்தில் தருமபுரி, வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
14 May 2025சென்னை : தமிழகத்தில் இன்று (மே 15) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய
-
சுப்ரீம் கோர்ட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு : ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்
14 May 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நேற்று (மே 14) பதவியேற்றுக் கொண்டார்.
-
நாளை வெளியாகும் சூரியின் மாமன்
14 May 2025காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்திருப்பவர் நடிகர் சூரி. அவர் நடித்துள்ள 'மாமன்' திரைப்படம் நாளை வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
-
டாஸ்மாக் முறைகேடு வழக்கு: மத்திய, தமிழக அரசு, அமாலாக்கத்துறை பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
14 May 2025சென்னை : டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசு, அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்கக்கோரி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2025
14 May 2025 -
சீனா - துருக்கி ஊடகத்தின் எக்ஸ் பக்கங்கள் முடக்கம் : மத்திய அரசு நடவடிக்கை
14 May 2025புதுடெல்லி : சீன அரசு ஊடகமான க்ளோபல் டைம்ஸின் எக்ஸ் கணக்கை இந்திய அரசு முடக்கியுள்ளது.
-
பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு கைது செய்யப்பட்ட இந்திய வீரரை ஒப்படைத்தது பாக்.,
14 May 2025புதுடெல்லி : பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை பாகிஸ்தான் இந்தியாவிடம் நேற்று (மே.14) ஒப்படைத்தது.
-
அடுத்த 4 நாட்களுக்கு தென்னிந்தியாவில் கனமழை
14 May 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும்.
-
அனைவருக்கும் சாமி கும்பிடுவதற்கு உரிமை உண்டு: தேர் திருவிழாவை பட்டியலின மக்கள் வேடிக்கை மட்டும்தான் பார்க்கனுமா ? - மதுரை ஐகோர்ட் கிளை கேள்வி
14 May 2025மதுரை : அனைவருக்கும் சாமி கும்பிடுவதற்கு உரிமை உண்டு, தேர் திருவிழாவை பட்டியலின மக்கள் வேடிக்கை மட்டும்தான் பார்க்க வேண்டுமா?
-
வெற்றிவிழாவில் 'டூரிஸ்ட் பேமிலி' பட குழு
14 May 2025நடிகை சிம்ரன்- நடிகர் சசிகுமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில்,' டூரிஸ்ட் ஃபேமிலி '.
-
ஜி.பி.முத்து - கிராம மக்கள் இடையே வாக்குவாதம்
14 May 2025தூத்துக்குடி : ஜி.பி. முத்து மற்றும் கிராம மக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
கனடா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆனார் அனிதா ஆனந்த்..!
14 May 2025ஒட்டாவா : கனடா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியாக அனிதா ஆனந்த் நியமனம் செய்யப்பட்டார்.
-
எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளில் கொண்டாட்டம் வேண்டாம்: சுனில் கவாஸ்கர் கோரிக்கை
14 May 2025மும்பை : சமீபத்திய தீவிரவாத தாக்குதலில் சிலர் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்துள்ளதால் எஞ்சிய ஐ.பி.எல்.
-
சிறுபான்மையின மக்களின் உரிமைக்காக த.வெ.க. களத்தில் முதன்மையாக நிற்கும் : விஜய் அறிக்கை
14 May 2025சென்னை : சிறுபான்மையின மக்களின் உரிமைக்காக த.வெ.க. முதன்மை சக்தியாக களத்தில் நிற்கும் என்று அதன் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
'தி வெர்டிக்ட்' முன்னோட்டம் வெளியீடு
14 May 2025கொலையும் கொலை சார்ந்த புலனாய்வு கதையுமாக உருவாகியுள்ள 'தி வெர்டிக்ட்'. திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.