Idhayam Matrimony

எல்லைப் பகுதிகளில் அமைதி திரும்பியது

செவ்வாய்க்கிழமை, 13 மே 2025      இந்தியா
Manipur 2023 06 06

Source: provided

ஸ்ரீநகர் : சர்வதேச எல்லையில் போர்நிறுத்த மீறல்கள் எதுவும் நடக்கவில்லை. எல்லைப் பகுதிகளில் அதிமையான சூழ்நிலை நிலவுகிறது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

பஹல்காம் சம்பவத்திற்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்துார்' என்ற பெயரில், நம் பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுத்தனர். இதற்கிடையே கடந்த 10ம் தேதி, இருதரப்பிலும் போர்நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இருநாடுகளின் டி.ஜி.எம்.ஓ., எனப்படும் ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல்கள் நேற்றுமுன்தினம் பேச்சு நடத்தினர். அப்போது, இருதரப்பிலும் போர் நிறுத்த நடவடிக்கைகளை சுமூகமாக கடைப்பிடிப்பது குறித்து ஆலோசனை நடந்தது. தற்போது ஜம்மு-காஷ்மீர் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது. எல்லையோர பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நேற்று முதல் மீண்டும் திறக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர்.

நேற்றுமுன்தினம் இரவு சர்வதேச எல்லையில் போர்நிறுத்த மீறல்கள் எதுவும் நடக்கவில்லை என்பதை இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. ''எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. இருப்பினும், பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர்'' என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து