முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இமயமலையேற்றத்தின்போது இந்தியர் மயங்கி விழுந்து பலி

சனிக்கிழமை, 17 மே 2025      இந்தியா
India-China 2024-10-25

Source: provided

காத்மண்டு : இமயமலையேற்றத்தின்போது இந்தியர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இந்தியா, நேபாளம் இடையே இமயமலை உள்ளது. இந்த மலையில் உள்ள எவரஸ் உள்ளிட்ட சிகரங்களில் ஏற உலகம் முழுவதும் இருந்து மலையேற்ற வீரர், வீராங்கனைகள், சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் மேற்குவங்காளத்தை சேர்ந்த சபரதா கோஷ் (வயது 45) நேபாளத்தில் இருந்து நேற்றுமுன்தினம் இமயமலையின் எவரஸ் சிகரம் நோக்கி மலையேற தொடங்கியுள்ளார். அவருக்கு வழிகாட்டியாக சம்பல் தமுக் என்பவர் சென்றுள்ளார். சபரதா கோஷுடன் மேலும் சில மலையேற்ற வீரர்கள் சென்றுள்ளனர்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் மதியம் 2 மணியளவில் சிகரத்தை அடைந்தபின் அங்கிருந்து அனைவரும் முகாம் திரும்பியுள்ளனர். வரும் வழியில் சபரதா கோஷுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது வழிகாட்டி இரவு முகாமிற்கு வந்து தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, உயிரிழந்த சபரதா கோஷ் உடலை தேடும் பணியில் மலையேற்ற வீரர்கள் நேற்று ஈடுபட்டு வருகின்றனர். அவரது உடல் மீட்கப்பட்டு இந்தியாவில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து