Idhayam Matrimony

மாவோயிஸ்டுகள் 8 பேர் சரண்

சனிக்கிழமை, 31 மே 2025      இந்தியா
Nakselit

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் 8 பேர் போலீசில் சரண் அடைந்துள்ளனர்.

அடுத்த ஆண்டுக்குள் நாட்டில் நக்சல் அமைப்பு முற்றிலும் ஒழிக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் ஆதிக்கத்தில் இருந்த பெரும்பகுதி விடுவிக்கப்பட்டு விட்டது.

போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் தாக்குதலில் ஏராளமான நக்சல் அமைப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பலர் சரண் அடைந்து வருகின்றனர்.நீண்ட காலமாக நக்சல்கள் அமைப்பில் இருந்த பலர், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு தப்பி செல்லத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் 8 பேர் போலீசில் சரண் அடைந்தனர். மஹாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கரைச் சேர்ந்த ஒரு பிரிவு குழு உறுப்பினர் , இரண்டு பகுதி குழு உறுப்பினர்கள் உட்பட 8 மாவோயிஸ்டுகள் ஆயுதங்களை கைவிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷபரிஷ் முன் சரணடைந்தனர்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 355 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர். நக்சலிச பாதையை விட்டு வெளியேறி தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அமைதியான வாழ்க்கையை வாழ முடிவு செய்து சரண் அடைந்துள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து