எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : 47 ஆண்டுகளுக்கு பிறகு மதுரையில் இன்று தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. உத்தங்குடி, கலைஞர் திடலில் இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவரும், முதல்வரமான மு.க.ஸ்டாலின் தலமையில் நடைபெறும் இன்றைய கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூன் 1) மதுரையில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, உத்தங்குடியில் அமைந்துள்ள கலைஞர் திடலில் 90 ஏக்கரில் பரந்து விரிந்த பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதமாக மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மற்றும் வருவாய் மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தியின் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.
பொதுக்குழு கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். பந்தலில் குளிர்சாதன வசதிகள், வண்ண விளக்குகள், பசுமை புல்வெளிகள், செயற்கை நீருற்றுகள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நுழைவு வாயில், சென்னை அண்ணா அறிவாலயத்தை ஒத்த தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் கட்-அவுட்கள், தி.மு.க. அரசின் சாதனைகளை சுட்டி காட்டும் பதாகைகள் மற்றும் 100 அடி உயர கொடிக்கம்பம் ஆகியவை அரங்கின் அமைப்பை கூட்டுகின்றன. இதில் பங்கேற்க முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று மதியம் 1 மணியளவில் விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ. மணிமாறன் உள்ளிட்டோர் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் தனியார் நட்சத்திர ஓட்டலுக்குச் சென்று ஓய்வெடுத்தார்.
பிறகு நேற்று மாலை, அவ்விடமிருந்து கார் மூலம் அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் சிலைக்கு செல்லும் முதல்வர், அங்கிருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் நடைபெற்ற ரோடு ஷோவில் பங்கேற்றார். இந்த ரோடு ஷோ வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், டி.வி.எஸ்.நகர், பழங்காநத்தம், வ.உ.சி. பாலம், காளவாசல், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக நடைபெற்றது.
ரோடு ஷோவின் ஒரு பகுதியாக ஜெய்ஹிந்த்புரத்தில் நடைபயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்தார். அப்போது, வீரகாளியம்மன் கோவிலில் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட மேற்கூரையையும் அவர் திறந்து வைத்தார். தொடர்ந்து, மேயர் முத்து சிலை அருகே புதிதாக அமைக்கப்பட்ட வெண்கல சிலையை திறந்து வைத்தார்.
இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல முக்கிய அரசியல் அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின்வரும் பாதையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது அதே நேரத்தில் முதல்வர் பயணிக்கும் பகுதிகளில் ட்ரோன் பறக்க விட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 6 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-06-2025.
03 Jun 2025 -
ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு: அரசியல் பணியை தீவிரப்படுத்தும் விஜய்
03 Jun 2025சென்னை: ஜனநாயகன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அரசியல் பணியை விஜய் தீவிரப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
நீரில் மூழ்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
03 Jun 2025சென்னை: தடுப்பணையில் தவறி விழுந்த இருவரை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த பீட்டர் ஜான்சனின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி வழங்கியுள்ளார்.
-
சிந்து நதிநீர் நிறுத்தம்: கடும் தண்ணீர் பஞ்சத்தில் பாக்.,
03 Jun 2025லாகூர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததால் பாகிஸ்தான் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
-
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது ஒரேநாளில் 5 பேர் பலி
03 Jun 2025புதுடெல்லி: மீண்டும் வேகமெடுக்கும் கொரோனாவால், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 26 ஆக உயர்ந்துள்ளது.
-
பிலாவல் பூட்டோ தலைமையில் உலக நாடுகளுக்கு அனைத்துக்கட்சி குழுக்களை அனுப்பும் பாகிஸ்தான்
03 Jun 2025இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான சமீபத்திய மோதலில் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க பாகிஸ்தான் வெளிநாடுகளுக்கு அனைத்துக் கட்சி குழுக்களை அனுப்புகிறது.
-
முத்தமிழுக்கு செம்மொழி சிறப்பு செய்த காவலர்: கருணாநிதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
03 Jun 2025சென்னை: முச்சங்கம் கண்ட முத்தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு செய்த முத்தமிழ்க் காவலரைப் போற்றிடும் செம்மொழி நாள் என்று கருணாநிதிக்கு மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்
-
சாலை விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
03 Jun 2025சென்னை: அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூவருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
03 Jun 2025கடலூர்: வீரணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
தமிழ் போல் வாழ்க உன் புகழ்: கருணாநிதிக்கு கனிமொழி புகழாரம்
03 Jun 2025சென்னை: கருணாநிதி பிறந்தநாள் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ் போல் வாழ்க உன் புகழ் என்று கனிமொழி எம்.பி. புகழாரம் சூட்டியுள்ளார்.
-
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 27 பேர் பலி
03 Jun 2025காசா சிட்டி: காசாவில் தொடருந்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள்: கோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
03 Jun 2025சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
-
வக்ப் சொத்துக்களை பதிவு செய்ய இணையதளம் ஜூன் 6-ல் துவக்கம் மத்திய அரசு முடிவு
03 Jun 2025புதுடில்லி: வக்ப் சொத்துக்களை பதிவு செய்வதற்காக, இணையதளத்தை (வக்ப் சொத்து மேலாண்மைக்கான உமீத் போர்டல்) ஜூன் 6ம் தேதி மத்திய அரசு தொடங்க உள்ளது.
-
இந்தியா குறிப்பிட்டதை விட அதிக இடங்களில் தாக்குதல் பாகிஸ்தான் ஒப்புதல்
03 Jun 2025புதுடில்லி: இந்தியா குறிப்பிட்டதை விட அதிக இடங்களில் தாக்குதல் நடத்தியதால் தான், போரை நிறுத்தும்படி பாகிஸ்தான் கெஞ்சியது தெரியவந்துள்ளது.
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்: 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்
03 Jun 2025கராச்சி: நிலநடுக்க சூழ்நிலையை பயன்படுத்தி பாகிஸ்தானில் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச்சென்றனர்.
-
வடகிழக்கு மாநிலங்களில் பெய்த கனமழைக்கு இதுவரை 37 பேர் பலி
03 Jun 2025அசாம்: வடகிழக்கு மாநிலங்களில் பெய்த கனமழைக்கு இதுவரை 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கமல்ஹாசன் என்ன மொழியியல் அறிஞரா? கர்நாடக உயர் நீதிமன்றம் காட்டம்
03 Jun 2025பெங்களூரு: கமல்ஹாசன் என்ன வரலாற்று ஆய்வாளரா அல்லது மொழியியல் அறிஞரா? என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.
-
பாகிஸ்தானின் 48 மணி நேர முயற்சியை, 8 மணி நேரத்தில் இந்தியா முறியடித்தது முப்படை தலைமை தளபதி பெருமிதம்
03 Jun 2025புனே:பாகிஸ்தானின் 48 மணி நேர முயற்சியை, 8 மணி நேரத்தில் இந்தியா முறியடித்தது என முப்படை தலைமை தளபதி அனில் சவுஹான் கூறியுள்ளார்.
-
பாராளுமன்ற சிறப்புக்கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்டியா கூட்டணி கடிதம்
03 Jun 2025புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தி இன்டியா கூட்டணியைச் சேர்ந்த 16 எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு
-
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு
03 Jun 2025சென்னை: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
-
கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
03 Jun 2025புதுச்சேரி: “கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை.
-
சிவகங்கை அருகே ஆடு திருட வந்த 2 பேர் அடித்துக்கொலை
03 Jun 2025சிவகங்கை: சிவகங்கை அருகே ஆடு திருட வந்த 2 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கம் விலை உயர்வு
03 Jun 2025சென்னை: சென்னையில் நேற்று (ஜூன் 03) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.72,640க்கு விற்பனையானது.
-
12 கோடி ரூபாய் நலத்திட்டங்களுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஒப்புதல்
03 Jun 2025புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ. 12 கோடி நலத்திட்டங்களுக்கு முதல்வர் ரங்கசாமி ஒப்புதல் தந்துள்ளார்.
-
மின் தடை நடந்த மையங்களில் நீட் மறுதேர்வு நடத்த முடியாது ஐகோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்
03 Jun 2025சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வின் போது, மின் தடை ஏற்பட்ட தேர்வு மையங்களில் மறுதேர்வு நடத்த முடியாது என்று மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்