எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: தமிழ்நாட்டில் சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் பழிக்குப் பழிவாங்கும் கொலைகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர்ஜிவால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு காவல்துறை சார்பில் சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் பழிக்குப் பழிவாங்கும் கொலைகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு காவல்துறையில் துணை கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அதிகாரிகள் தலைமையில் பிரத்யேக மண்டல அளவிலான சரித்திர பதிவேடு ரவுடிகள் கண்காணிப்பு குழுக்கள், வடக்கு, மத்திய, மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்களிலும், மாநகர ஆணையரகங்களிலும் அவர்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுகின்றன.
மாநகரங்களில் துணை காவல் ஆணையர்கள் (தலைமையகம்) மற்றும் மாவட்டங்களில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் (தலைமையகம்) ஆகியோர் சரித்திர பதிவேடு ரவுடிகளுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளின் நீதிமன்ற முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து, விசாரணையை விரைவுப்படுத்தி தண்டனை பெற நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.
விசாரணையின் முடிவுறும் தருவாயில் உள்ள நிலுவை வழக்குகள் மற்றும் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ள வழக்குகள் அடையாளம் காணப்பட்டு, வழக்கு விசாரணையை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டன. 2025-ம் ஆண்டில், இதுபோன்று 376 வழக்குகள் அவற்றின் விசாரணையை கூர்ந்து கண்காணிக்க அடையாளம் காணப்பட்டுள்ளன.
2024-ம் ஆண்டில், 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட தண்டனை வழங்கப்பட்டு 150 சரித்திர பதிவேடு ரவுடிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர், இது கடந்த 12 ஆண்டுகளைவிட மிக அதிக அளவாகும். இதுவரை (ஏப்ரல், 2025 வரை) சரித்திர பதிவேடு ரவுடிகளுக்கு எதிரான 29 முக்கிய வழக்குகள் தண்டனையில் முடிவடைந்துள்ளன. மேற்கு மண்டலத்தில் திருப்பூர், தர்மபுரி, கோயம்புத்தூர் & கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் திருப்பூர் நகரம் ஆகியவற்றில் 5 வழக்குகள்; மத்திய மண்டலத்தில் பெரம்பலூர், மயிலாடுதுறை (3), திருவாரூர் மற்றும் திருச்சி மாவட்டங்கள் ஆகியவற்றில் 6 வழக்குகள்; தென் மண்டலத்தில் திருநெல்வேலி (5), தென்காசி, விருதுநகர் (3), தூத்துக்குடி (2), திண்டுக்கல் (2), ராமநாதபுரம் (3) கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் மதுரை நகரம் ஆகியவற்றில் 18 வழக்குகள் தண்டனையில் முடிவடைந்துள்ளன.
தென் மண்டலத்தில் சரித்திர பதிவேடு ரவுடி கொலைகளில் பொது விமர்சனங்களை ஏற்படுத்தும் வழக்குகளும் கருத்தில் கொள்ளப்பட்டன. இத்தகையை கொலை வழக்குகளை முறையாக கண்காணித்ததன் விளைவாக, 18 வழக்குகள் தண்டனையில் முடிவடைந்துள்ளன. நீதிமன்ற வழக்கு விசாரணையை கண்காணித்தல் மற்றும் தண்டனை பெறுவதில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம், கொலைகள், குறிப்பாக சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் பழிக்குப் பழி கொலைகள் குறைவதற்கு முக்கிய பங்களித்துள்ளது. சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் சமூக விரோத சக்திகளுக்கு எதிரான இந்த முறையான, முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், தமிழ்நாட்டில் பழிக்குப் பழி மற்றும் சரித்திர பதிவேடு ரவுடிகள் கொலைகளில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்து நல்ல பலனைத் தந்துள்ளன. பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைகள் போன்ற பிற வழக்குகளிலும் இதேபோன்ற நடவடிக்கை பின்பற்றப்படுகிறது.
மதுரை மாநகரில் 8.7.2021 அன்று B4 கீரைத்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சம்பவ இடத்தில் 28 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக முருகன் மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவ்வழக்கானது சொத்துக்களுடன் சேர்த்து 28 கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனம், ஒரு கார் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் 31.12.21 அன்று இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு கொலை வழக்கு உட்பட 29 குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் மற்றும் மதுரை மாநகர், அண்ணாநகர் காவல் நிலையத்தில் சரித்திரபதிவேடு அவருக்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. விசாரணையை திறம்பட கண்காணித்ததன் காரணமாக அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மதுரை மாநகர், திருநகர் காவல் நிலையத்தில் 12.10.2016 அன்று முன்விரோத வழக்கான பஷீத் அகமது (வயது 30) என்பவரது கொலை வழக்கு குற்றச்சாட்டில் தொடர்புடைய ராஜேஷ்(30) மற்றும் திரு. விஷ்வா(18) என்பவர்களுக்கு ஆயுள் தண்டனையும் மற்றும் ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதிக்கன் மகன் பெருமாள் என்பவர், ராஜன் மகன் செல்வராஜ் என்பவரால் கொலை செய்யப்பட்டார். இதில் வைகுண்டம் என்பவர் குற்றம் சாட்டப்பட்ட செல்வராஜுக்கு எதிராக சாட்சியம் அளித்தார். எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்ற எட்டு குற்றவாளிகளுடன் சேர்ந்து வைகுண்டத்தைக் கொலை செய்தனர். இவ்வழக்கில் நீதிபதி 6.3.2025 அன்று செல்வராஜுக்கு மரண தண்டனையும், 4 கூட்டாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதித்தார். மீதமுள்ள 3 குற்றவாளிகளுக்கு 2 மாத சிறைத்தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வீரவநல்லூர் காவல் நிலைய எல்லையில் சுப்பையா(38) மற்றும் 20 பேர் சேர்ந்து முன் விரோதம் காரணமாக ரத்தினவேல்பாண்டியன் என்பவரை கொலை செய்தனர். முன்விரோதம் காரணமாக அந்த காவல் நிலைய எல்லையில் பதிவான 5 கொலை வழக்குகளிலும், 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், 1 குற்றவாளிக்கு மரண தண்டனையும், 2021-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் 3 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளம்பட்டி காவல் நிலையத்தில், சரித்திர பதிவேடு ரவுடிகள் ராஜா, பிரகாஷ், சரத்குமார் ஆகிய 3 பேர் 2021-ம் ஆண்டு ராஜபாண்டி என்பவரை கொலை செய்தனர். இவ்வழக்கில் 5.4.2025 அன்று ராஜா மற்றும் சரத்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பிரகாஷ் என்பவருக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.65 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த 2022-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தார் காவல் நிலைய எல்லையில், முன்பகை காரணமாக காளிபாண்டி என்பவர் மாரியப்பன் என்பவரை கொலை செய்துள்ளார். இவ்வழக்கில் 16.4.2025 அன்று மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 1 week ago |
-
பக்ரீத் பண்டிகை: தமிழக தலைவர்கள் வாழ்த்து
06 Jun 2025சென்னை, பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் இன்று (ஜூன் 7) உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி, தமிழக இ.பி.எஸ்.
-
இன்று பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
06 Jun 2025சென்னை, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு முதல்வர் மு.க.ஸடாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-06-2025.
06 Jun 2025 -
மதுரையில் நடப்பது சங்கிகள் மாநாடு: அமைச்சர் சேகர்பாபு கடும் விமர்சனம்
06 Jun 2025சென்னை, மதுரையில் நடப்பது சங்கிகள் மாநாடு என அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.
-
அதிபர் டிரம்ப் - எலான் மஸ்க் இடையே திடீரென மோதல்: நன்றியுணர்வு அற்றவர் என காட்டம்
06 Jun 2025வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கும் எலான் மஸ்கிற்கும் திடீரென மோதல் வெடித்துள்ளது.
-
குரூப் 1 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு
06 Jun 2025சென்னை, ஜூன் 15ம் தேதி நடைபெறவுள்ள குரூப் 1, 1ஏ தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
பணமோசடி வழக்கில் கைதான அ.இ.அ.தி.மு.க. நிர்வாகி நீக்கம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு
06 Jun 2025சென்னை, அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் கைதான அ.தி.மு.க. ஐ.டி.
-
தொகுதி மறுசீரமைப்புக்காக எதிராக தனது குரலை அ.தி.மு.க. பதிவு செய்திருக்கிறதா..? இ.பி.எஸ்.-க்கு அமைச்சர் ரகுபதி கேள்வி
06 Jun 2025சென்னை, தொகுதி மறுசீரமைப்புக்காக எதிராக ஒரு பேச்சோ, எழுத்தோ அ.தி.மு.க. பதிவு செய்திருக்கிறதா? என அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
நீதிபதி உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
06 Jun 2025சென்னை, ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனார்த்தனம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த உத்தரவிட்டுள்ள
-
பிரதமர் மோடி திறந்து வைத்த செனாப் பாலத்தின் சிறப்புகள்
06 Jun 2025காஷ்மீர் : ஜம்மு காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான பாலம் ரெயில்வேயால் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
-
ஓய்வு பெற்ற நீதிபதி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
06 Jun 2025சென்னை : ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனம் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவில் ரபேல் விமான பாகங்கள் தயாரிக்க டசால்ட்டுடன் டாடா ஒப்பந்தம்
06 Jun 2025புதுடெல்லி : ரபேல் விமானத்தின் கூண்டு பகுதியை இந்தியாவில் தயாரிப்பது தொடர்பாக டசால்ட்டுடன் டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
-
மாநிலங்களவைத் தேர்தல்: இ.பி.எஸ். முன்னிலையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
06 Jun 2025சென்னை, மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.
-
யானைகளை கொல்ல ஜிம்பாப்வே அரசு முடிவு
06 Jun 2025ஹராரே : ஜிம்பாப்வேயில் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து, சுமார் 50 யானைகளை கொன்று அவற்றின் மாமிசத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
-
பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
06 Jun 2025திருச்சி : தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
-
அமெரிக்காவில் ரயிலில் அடிப்பட்டு பெண் பலி
06 Jun 2025அமெரிக்கா : அமெரிக்காவில் நாயை காப்பாற்ற முயன்ற பெண் ரயில் அடிப்பட்டு உயிரிழந்தார்.
-
பெங்களூரு சம்பவம்: கர்நாடக முதல்வரின் செயலாளர் டிஸ்மிஸ்
06 Jun 2025பெங்களூரு : கர்நாடகாவில் நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்தில் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி., அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளார்.
-
தருமபுரி அருகே சாலை விபத்தில் மலையாள நடிகர் தந்தை உயிரிழப்பு
06 Jun 2025தருமபுரி, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நடந்த சாலை விபத்தில் மலையாள திரைப்பட நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழந்தார்.
-
என்.சி.பி. அணிகள் இணைப்பா? - சுப்ரியா சுலே எம்.பி. விளக்கம்
06 Jun 2025மும்பை : தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்.சி.பி.) இரண்டு அணிகளும் இணைவது குறித்து எந்த விவாதமோ அல்லது திட்டமோ இல்லை என்று என்.சி.பி. (சரத் பவார்) எம்.பி.
-
பஹல்காம் தாக்குதலால் காஷ்மீரின் வளர்ச்சி ஒருபோதும் பாதிக்காது: பிரதமர் நரேந்திரமோடி உறுதி
06 Jun 2025ஸ்ரீநகர், பஹல்காம் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்படாது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார்.
-
பெங்களூரு கூட்டநெரிசல் சம்பவம்: ஆர்.சி.பி. அணி நிர்வாகி உட்பட 4 பேர் கைது
06 Jun 2025பெங்களூரு, ஆர்.சி.பி. அணியின் ஐ.பி.எல்.
-
தொகுதி மறுவரையறை குறித்த தென் மாநிலங்களின் கவலைகள் குறித்து நிச்சயம் விவாதிக்கப்படும்: மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதி
06 Jun 2025புதுடெல்லி, தொகுதி மறுவரையறை பணியின்போது தென் மாநிலங்கள் தெரிவித்த கவலைகள் கவனிக்கப்படும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.
-
உலகின் மிக உயரமான ரயில் பாலம்: ஜம்மு-காஷ்மீரில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்
06 Jun 2025ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
-
கொரோனா பரவல் எதிரொலி: தமிழ்நாட்டில் கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய அறிவுறுத்தல்
06 Jun 2025சென்னை, கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் கமல்ஹாசன்
06 Jun 2025சென்னை : மாநிலங்களவை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த கமல்ஹாசன் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.