எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : தமிழ், ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் இசைப் பள்ளி சான்றிதழ், 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழுக்கு இணையானது என பள்ளிக்கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணை: பள்ளிகளில் 10-ம் வகுப்பு மாணவர்கள் தமிழ் (பகுதி-1) ஆங்கிலம் (பகுதி-2) ஆகிய மொழி பாடங்களையும், பகுதி-3-ல் முதன்மை பாடங்களான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களையும் பயில்கின்றனர். இந்த நிலையில், இசைப் பள்ளி மாணவர்கள் பகுதி 3-ல் முதன்மை பாடம், துணைப்பாடம், வாய்மொழி தேர்வு, இசையியல் பாடங்கள் (தியரி எக்ஸாம்) ஆகியவற்றை பயில்கின்றனர்.
அரசு தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்படும் 10-ம் வகுப்பு தமிழ், ஆங்கில மொழி பாடங்களில் அவர்கள் தேர்ச்சி பெறும் பட்சத்தில், பகுதி 3-ல் அவர்கள் பயின்றதை சிறப்பு நிகழ்வாக முதன்மை பாடங்களாக கருதலாம். அவர்களது இசைப்பள்ளி தேர்ச்சி சான்றிதழை அரசு தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்படும் 10-ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழுக்கு இணையானது என அரசு தேர்வு துறை சான்றிதழ் வழங்கலாம்.
அதேபோல, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, நேரடியாக இசைப் பள்ளிகளில் 3 ஆண்டு படித்து முதன்மை பாடங்கள் (தாள்-1, 2), துணைப்பாடம், வாய்மொழி தேர்வு, மேல்நிலை இசையியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 12-ம் வகுப்பு தமிழ், ஆங்கிலம் மொழி பாடங்களில் தேர்ச்சி பெறும்பட்சத்தில் அவர்களது இசைப்பள்ளி தேர்ச்சி சான்றிதழை 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு (கலை, தொழில் பிரிவுகள் மட்டும்) தேர்ச்சிக்கு இணையானது என அரசு தேர்வுகள் இயக்ககம் சான்றிதழ் வழங்கலாம்.
மாணவர்கள் உயர்கல்வி, வேலைவாய்ப்பை தடையின்றி பெற வேண்டும், இடைநிற்றலை தவிர்க்க வேண்டும், இசை குறித்த பட்டறிவை ஊக்குவிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொழி தேர்வுகள் தங்களுக்கு தேவையில்லை என்று கருதும் மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படும் மாவட்ட இசைப் பள்ளி தேர்ச்சி சான்றிதழை வழக்கம்போல தொடர்ந்து வழங்கலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 1 week ago |
-
விரைவில் நல்ல செய்தி வரும்: ராமதாஸ்
08 Jun 2025சென்னை : அரசியலுக்கு வயது கிடையாது. வயது என்பது வெறும் எண் மட்டுமே. விரைவில் நல்ல செய்தி வரும் என்று பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
-
வேலூர் தீர்த்தகிரி கோவிலில் 92 அடி உயர முருகன் சிலை கும்பாபிஷேகம்
08 Jun 2025வேலூர் : வேலூர் தீர்த்தகிரி கோவிலில் அமைக்கப்பட்டுள்ள 92 அடி உயர பிரம்மாண்ட முருகன் சிலைக்கு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
-
அமித்ஷாவை வரவேற்க காத்திருந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள்
08 Jun 2025மதுரை : மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்பதற்காக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் 3 மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
-
கூட்ட நெரிசலில் 11 பேர் பலி: சித்தராமையா பதவி விலக கோரி பா.ஜ.க. போராட்டம்
08 Jun 2025பெங்களூரு : கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில், காங்கிரஸ் அரசை கண்டித்து, கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் பெங்களூருவில் உள்ள சட்டசபை முன்பு போராட்டம் நடத்தினர்.&n
-
எலான் மஸ்க் உடனான உறவு முடிந்து விட்டது: ட்ரம்ப் அதிரடி
08 Jun 2025வாஷிங்டன் : எலான் மஸ்க் உடனான நட்புறவு முற்று பெற்று விட்டதாக அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
-
கொலம்பியாவில் அதிர்ச்சி சம்பவம்: அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு
08 Jun 2025போகோடா : கொலம்பிய செனட்டரும் 2026 அதிபர் தேர்தல் வேட்பாளருமான மிகுவல் யூரிப் (39), சனிக்கிழமை தலைநகர் போகோடாவில் நடந்த தேர்தல் பிரச்சார நிகழ்வின் போது துப்பாக்கிச்சூட்ட
-
விருதுநகர் தொழிற்சாலை தீவிபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
08 Jun 2025சென்னை : விருதுநகர் அருகே வெடிபொருள் தொழிற்சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவ
-
ஒரே நாளில் 6 பேர் உயிரிழப்பு: நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு 6 ஆயிரத்தை கடந்தது
08 Jun 2025புதுடெல்லி : நாடு முழுவதும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 133 ஆக உயர்ந்துள்ளது.
-
நாளை விண்வெளிக்கு செல்கிறார் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா
08 Jun 2025புதுடில்லி : 'ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ் - 4' என்ற திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு, நாளை (ஜூன் 10ம் தேதி) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா செல்கிறார்.
-
ராஜஸ்தானில் உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டு வருமா கெலாட் - பைலட் சந்திப்பு
08 Jun 2025ஜெய்ப்பூர் : அசோக் கெலாட் - சச்சின் பைலட் சந்திப்பு ராஜஸ்தானில் உட்கட்சி பூசலை முடிவுக்கு கொண்டு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
மாணவர்களின் இசைப்பள்ளி சான்றிதழ்: பள்ளிக்கல்வி துறை புதிய அரசாணை
08 Jun 2025சென்னை : தமிழ், ஆங்கில மொழி பாடங்களில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் இசைப் பள்ளி சான்றிதழ், 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழுக்கு இணையானது என பள்ளிக்கல்வி துறை அரசாணை
-
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது: அமெரிக்காவில் போராட்டம்
08 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறிய 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு போராட்டம் வெடித்தன.
-
வரும் ஜூலை 15-ம தேதி மாணவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்
08 Jun 2025சென்னை : வரும் ஜூலை 15-ம தேதி மாணவர்களுடன் மாநிலத் திட்ட அலுவலகத்தில் இருந்து காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார்.
-
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல் : 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
08 Jun 2025திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் முதலே பக்தர்கள் குவிந்தனர்.
-
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து - 10 பேர் காயம்
08 Jun 2025விழுப்புரம் : விழுப்புரத்தில் இருந்து சிறிய சரக்கு லாரி ஒன்று உளுந்தூர்பேட்டை நோக்கி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
-
இன்று வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்
08 Jun 2025திருச்செந்தூர் : முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று வெகு விமர்சையாக நடக்கிறது.
-
மணிப்பூரில் மீண்டும் கலவரம்: இணைய சேவை முடக்கம் - ஊரடங்கு உத்தரவு அமல்
08 Jun 2025இம்பால் : கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் மெய்தேய் இன அமைப்பான அரம்பாய் தெங்கோல் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக செய்தி பரவியதை தொடர்ந்து போராட்டம் வெடித்துள்ளது
-
புதுச்சேரியில் 104 டிகிரி வெப்பம் பதிவு
08 Jun 2025புதுச்சேரி : அக்னி நட்சத்திரம் முடிந்தும் புதுச்சேரியில் வெப்பநிலை அதிகரித்து நடப்பாண்டில் உச்ச அளவாக நேற்று (ஜூன் 8) 104 டிகிரி பதிவானது.
-
கடந்த 4 நாட்களில் கிளாம்பாக்கத்தில் இருந்து 6 லட்சம் பயணிகள் பயணம்
08 Jun 2025வண்டலூர் : கடந்த 4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை 4 நாட்களில் சுமார் 6 லட்சம் பேர் கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர் சென்று உள்ளனர்.
-
கச்சத்தீவை மீட்க வேண்டும்: அமித்ஷாவிடம் மதுரை ஆதீனம் மனு
08 Jun 2025மதுரை : மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்க வேண்டும் என மதுரை ஆதீனம் மனு அளித்தார்.
-
பதற்றம் காரணமாகவே அமித்ஷா அடிக்கடி தமிழகம் வருகிறார் : அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
08 Jun 2025சென்னை : பதற்றம் பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-06-2025.
08 Jun 2025 -
'தி அமெரிக்கன் பார்ட்டி' என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினார் மஸ்க்
08 Jun 2025நியூயார்க் : 'தி அமெரிக்கன் பார்ட்டி' என்ற பெயரில் புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
அமித்ஷாவுடன் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை தனித்தனியே சந்திப்பு
08 Jun 2025மதுரை : மதுரை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை தனித்தனியே சந்தித்து பேசினர்.
-
உணர்ச்சிவசப்படுகிறார்: எலான் மஸ்க் மீது ஜே.டி.வான்ஸ் விமர்சனம்
08 Jun 2025வாஷிங்டன் : எலான் மஸ்க் உணர்ச்சிவசப்படுகிறார். அவர் தனது அமைதியை இழந்து விட்டார்' என துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கடுமையாக சாடியுள்ளார்.