Idhayam Matrimony

சத்தீஸ்கர்: குண்டு வெடிப்பில் ஏ.எஸ்.பி. பலி

திங்கட்கிழமை, 9 ஜூன் 2025      இந்தியா
Nakselit

Source: provided

 ராய்ப்பூர் : சத்தீஸ்கரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஏ.எஸ்.பி., ஆகாஷ் ராவ் உயிரிழந்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோண்டா- எரபோரா சாலையில் டோண்ட்ரா அருகே நக்சலைட்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் சுக்மா மாவட்டத்தின் ஏ.எஸ்.பி., ஆகாஷ் ராவ் பலத்த காயமடைந்தார். பின்னர் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

மேலும் குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படையினர் சிலர் காயம் அடைந்துள்ளனர் என ஐ.ஜி., சுந்தர்ராஜ் தெரிவித்து உள்ளார். சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா கூறியதாவது:கோண்டா-எரபோரா சாலையில் உள்ள டோண்ட்ரா அருகே குண்டு வெடிப்பில் ஏ.எஸ்.பி., ஆகாஷ் ராவ் பலத்த காயமடைந்து, தனது உயிரை தியாகம் செய்துள்ளார்.

அவர் ஒரு துணிச்சலானவர். அவர் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இது எங்களுக்கு ஒரு சோகமான தருணம். பதுங்கி இருக்கும் நக்சலைட்டுகளை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து