எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, மக்களவை துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையை விரைவாக தொடங்குமாறு பிரதமர் மோடியை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கார்கே எழுதியுள்ள கடிதத்தில், "அரசியலமைப்பு ரீதியாக மக்களவை துணை சபாநாயகர், சபாநாயகருக்குப் பிறகு அவையின் இரண்டாவது மிக உயர்ந்த தலைமை அதிகாரி ஆவார். அரசியலமைப்பின் 93-வது பிரிவின்படி, மக்களவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு மிகவும் முக்கியம். இரண்டு பதவிகளும் காலியாகும்போது, மற்றொருவர் அந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
பாரம்பரியமாக, புதிதாக அமைக்கப்பட்ட மக்களவையின் இரண்டாவது அல்லது மூன்றாவது அமர்வில் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தத் தேர்தலுக்கான நடைமுறை சபாநாயகர் தேர்வுக்கான நடைமுறையைப் போன்றதே. இதில் இருக்கும் ஒரே வித்தியாசம், துணை சபாநாயகர் தேர்தலுக்கான தேதியை நிர்ணயிப்பவர் சபாநாயகர் என்பது மட்டுமே. முதல் மக்களவை முதல் பதினாறாவது மக்களவை வரை, ஒவ்வொரு சபைக்கும் ஒரு துணை சபாநாயகர் இருந்துள்ளார். பொதுவாக, பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களில் இருந்து துணை சபாநாயகரை நியமிப்பது மரபு.
எனினும், சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக, இந்தப் பதவி கடந்த 17-வது மக்களவையிலும், தற்போதைய 18-வது மக்களவையிலும் காலியாகவே உள்ளது. இந்தப் பதவியை காலியாக வைத்திருப்பது இந்தியாவின் ஜனநாயக அரசியலுக்கு நல்லதல்ல. மேலும் அரசியலமைப்பின் நன்கு வடிவமைக்கப்பட்ட விதிகளை மீறுவதாகும். எனவே, கூடிய விரைவில், புதிய துணை சபாநாயகரை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
12 Jun 2025மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 6,339 கன அடியாக உயர்ந்துள்ளது.
-
டில்லியில் கடுமையான வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை
12 Jun 2025புதுடில்லி: தலைநகர் டில்லியில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதையடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
பா.ம.க. தலைவராக நானே நீடிப்பேன்: ராமதாஸ் உறுதி
12 Jun 2025விழுப்புரம், 2026 தேர்தல் வரை நானே பா.ம.க. தலைவராக நீடிப்பேன் என்று ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
தென்காசியில் சோகம் ஆதரவற்றோர் இல்லத்தில் 3 பேர் பலி; 8 பேர் மருத்துவமனையில் அனுமதி
12 Jun 2025தென்காசி: தென்காசி அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்த வந்த 3 பேர் கெட்டுப்போன உணவு உண்டதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
தி.மு.க. கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியேறாது: திருமாவளவன்
12 Jun 2025சிதம்பரம், தி.மு.க. கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியேறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
முடிவுக்கு வந்தது மோதல்: எலான் மஸ்க்கின் மன்னிப்பை ஏற்று கொண்ட அதிபர் டிரம்ப்
12 Jun 2025வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறித்து தான் தெரிவித்த கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டு கொள்வதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
சர்வதேச செஸ் போட்டிகளில் வென்ற தமிழக வீரர்களுக்கு உதயநிதி வாழ்த்து
12 Jun 2025சென்னை: சர்வதேச செஸ் போட்டிகளில் வென்ற தமிழக வீரர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பாரதிய ஜனதாவின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
12 Jun 2025திருச்சி, எங்கள் கூட்டணியில் இருந்து கட்சிகளை தங்கள் கூட்டணிக்கு இழுக்கும் எல். முருகன் எண்ணம் நிறைவேறாது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
விமான விபத்தில் பலியானோருக்கு தலா ரூ. 1 கோடி: டாடா குழுமம் அறிவிப்பு
12 Jun 2025புதுடில்லி: ஆமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று டாடா குழுமத் தலைவர் என்.
-
யு.பி.எஸ்.சி. தேர்வில் தமிழக மாணவர்கள் புதிய சாதனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jun 2025சென்னை, யு.பி.எஸ்.சி. முதனிலைத் தேர்வு முடிவுகளில் நம் மாணவர்கள் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை படைத்துள்ளனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நிர்வாகிகளுடன் பிரேமலதா 2-வது நாளாக ஆலோசனை
12 Jun 2025சென்னை, தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் பிரேமலதா 2-வது நாளாக ஆலோசனை நடத்தினார்.
-
டெல்லியில், பத்திரிகை அதிபர்களுடன் ராஜ்நாத்சிங் கலந்துரையாடல்
12 Jun 2025டெல்லியில், பத்திரிகை அதிபர்களுடன் ராஜ்நாத்சிங் கலந்துரையாடல்
-
பி.எஸ்.எப். வீரர்களுக்கு மோசமான ரயில்: 4 உயரதிகாரிகள் சஸ்பெண்ட்
12 Jun 2025புதுடில்லி, எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு மிக மோசமான நிலையில் உள்ள ரயிலை அனுப்பியதற்கு, 4 ரயில்வே உயரதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
-
அகமதாபாத்தில் பிரிட்டனுக்கு கிளம்பிய விமான விபத்து பிரதமர் கெயிர் ஸ்டார்மர் அதிர்ச்சி தகவல்
12 Jun 2025லண்டன்: அகமதாபாத்தில் பிரிட்டன் நாட்டவர்களுடன் கிளம்பிய விமானம் விபத்துக்கு உள்ளானது கடும் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது என அந்நாட்டு பிரதமர் கெயிர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.
-
விபத்தின் போது நடந்தது என்ன? டி.ஜி.சி.ஏ., விளக்கம்
12 Jun 2025புதுடில்லி, ஆமதாபாத்தில் விபத்துக்கு உள்ளான விமானத்தை இயக்கியவர் சுமீத் சபர்வால் அனுபவம் வாய்ந்தவர் என டி.ஜி.சி.ஏ., தெரிவித்து உள்ளது.
-
6 மாதங்களில் 25வது முறையாக வெடித்த ஹவாய்த்தீவு எரிமலை
12 Jun 2025ஹவாய் தீவு: அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ள கிலாவியா எரிமலை வெடித்து உள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் 25-வது முறையாக வெடித்துள்ளது.
-
அகமதாபாத்தில் விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார்
12 Jun 2025குஜராத்: அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார்.
-
தண்ணீர் இல்லாத கிணற்றில் யார் குதிப்பார்கள்? அமைச்சர் பெரியசாமி
12 Jun 2025திண்டுக்கல், தி.மு.க. கூட்டணியில் இருந்து யாரும் போக மாட்டார்கள் என்று அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
-
சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு
12 Jun 2025டெல்லி: சந்தைகளில் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அகமதாபாத் விமான விபத்து: அமித்ஷா, ராகுல் காந்தி இரங்கல்
12 Jun 2025புதுடில்லி, அகமதாபாத் விமான விபத்துக்கு மத்திய அமச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் எம்.பி., ராகுல் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
அமெரிக்க அதிபர் குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டம்: 400 பேர் கைது
12 Jun 2025லாஸ் ஏஞ்சலீஸ்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக, லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 400 பேர் கைது
-
மிக கனமழை எச்சரிக்கை: கோவை, நீலகிரிக்கு பேரிடர் மீட்பு குழுக்கள் வருகை
12 Jun 2025கோவை, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து கோவை மற்றும் நீலகிரிக்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் வருகை தர உள்ளனர்
-
அமெரிக்காவில் காட்டுத்தீ 700 குடும்பங்கள் வெளியேற்றம்
12 Jun 2025ஓரிகன்: அமெரிக்காவில் காட்டுத் தீக்கு 700 குடும்பங்கள் வெளியேற்றம் செய்யப்பட்டனர்.
-
மேற்குவங்கத்தில் இருதரப்பினர் மோதல் 40 பேர் கைது
12 Jun 2025கோல்கட்டா: மேற்குவங்கத்தில் இருதரப்பினர் இடையே மோதல் வன்முறையில் முடிந்தது. இது தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
-
அகமதாபாத் விமான விபத்து: பலி எண்ணிக்கை 204 ஆக உயர்வு
12 Jun 2025அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் பலி எண்ணிக்கை 204 ஆக உயர்ந்துள்ளது.