எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈரோடு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். ரூ.159.53 கோடி மதிப்பீட்டில் 11 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். ரூ.25.41 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 4,524 பயனாளிகளுக்கு முதல்வர் வழங்கினார்.
முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள் வருமாறு., கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் பவானி வட்டம், ஜம்பையில் 59 லட்சம் ரூபாய் செலவில் கால்நடை மருந்தகம், கூட்டுறவுத் துறை சார்பில் சத்தியமங்கலம் வட்டம் கோணமூலை கிராமத்தில் 1 கோடியே 65 லட்சம் ரூபாய் செலவில் 1000 மெ.டன் ஏலக்கூட கிடங்கு, கண்ணம்மாபுரத்தில் 16 லட்சம் ரூபாய் செலவில் வீரப்பம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கிளை அலுவலகக் கட்டிடம், 51 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட முகாசிப்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகக் கட்டிடம், நீர்வளத்துறை சார்பில் தாளவாடி வட்டம், மல்லன்குழி கிராமம், பீமராஜ் நகரில் 40 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் தடுப்பணை, மெட்டல்வாடி அருகில் 38 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் செலவில் தடுப்பணை, பைனாபுரம் கிராமம், தொட்டமுடுகரையில் 33 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் தடுப்பணை, மாதேஸ்வரன் கோவில் அருகில் 20 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் தரைப்பாலம் மற்றும் மண் சாலை; வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அந்தியூர் வட்டம், கொண்டையம்பாளையம் கிராமத்தில் 35 லட்சம் ரூபாய் செலவில் தரம் பிரிப்பு கூடத்துடன் கூடிய உலர்களம், சத்தியமங்கலம் வட்டம், பெரிய கள்ளிப்பட்டி கிராமத்தில் 35 லட்சம் ரூபாய் செலவில் தரம் பிரிப்பு கூடத்துடன் கூடிய உலர்களம், சித்தோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 10 கோடி ரூபாய் செலவில் மஞ்சள் ஏற்றுமதி மையத்தை திறந்து வைத்தார்.
வனத்துறை சார்பில் அந்தியூர் வனச்சரகம், கொங்காடை கிராமத்தில் 26 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கசிவுநீர் குட்டை, கேர்மாளம் வனச்சரகம் கெத்தேசால் காவல் சுற்றில் 2 கி.மீ.-க்கு 10 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் செலவிலும், கேர்மாளம் மேற்கு காவல் சுற்றில் 1 கி.மீ.-க்கு 5 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் செலவிலும் அமைக்கப்பட்டுள்ள யானை புகா அகழிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் பெருந்துறை ஒன்றியம், பொன்முடி ஊராட்சியில் பொன்முடி ஆதிதிராவிடர் குடியிருப்பு கிராமத்தில் 25 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவில் விவசாய சேமிப்பு கிடங்கு, அந்தியூர் ஒன்றியம், நகலூர் ஊராட்சி, சோலைகர் காலனியில் 8 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கதிர் அடிக்கும் களம் என மொத்தம் 15 கோடியே 70 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் 16 முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அடிக்கல் நாட்டப்பட்ட பணிகளின் விவரங்கள் வருமாறு., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் பெருந்துறை சிப்காட் தொழிற்பூங்காவில் 136 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 2000 கிலோ லிட்டர் கொள்ளளவுள்ள ஜீரோ திரவ வெளியேற்ற அடிப்படையிலான பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வடிவமைத்து, கட்டுமானப் பணிகள், இயக்குதல் மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளும் பணி, நீர்வளத்துறை சார்பில் அணை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ள கீழ்பவானி அணை (பவானி சாகர் அணை) 19 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தும் பணி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி வட்டாரத்தில் 1 கோடியே 77 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மற்றும் நீர்பாசன வசதிப் பணிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 1 கோடியே 10 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 2 விவசாய சேமிப்பு கிடங்குகள் மற்றும் 6 கதிரடிக்கும் களங்கள் என மொத்தம் 159 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 11 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள்:
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 2163 பயனாளிகளுக்கு 2 கோடியே 72 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், நுண்ணீர் பாசனத்திட்டம், ஒருங்கிணைந்த பண்ணையம், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம், தேசிய சமையல் எண்ணெய் இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், மாநில வேளாண் வளர்ச்சி திட்டம், விதை கிராம திட்டம், தமிழ்நாடு நீர்வள நில வள மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்களில் நிதியுதவி; வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு 48 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வேளாண் உட்கட்டமைப்பு நிதி, தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கம் திட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், வேளாண்மை கட்டமைப்பு நிதி, பொருளீட்டுக் கடன் ஆகிய திட்டங்களில் நிதியுதவி; வேளாண் பொறியியல் துறை சார்பில் 23 பயனாளிகளுக்கு 16 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மானியத்துடன் வேளாண் கருவிகள் மானியத்தில் வழங்குதல், மானியத்துடன் கூடிய மின்மோட்டார்; தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 1256 பயனாளிக்ளுக்கு 9 கோடியே 24 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நுண்ணீர் பாசன திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம், மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம், மானாவாரி பகுதி மேம்பாட்டு திட்டம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் ஆகிய திட்டங்களில் உதவிகள்; தாட்கோ சார்பில் 23 பயனாளிகளுக்கு 40 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம், முதலமைச்சரின் மற்றும் பிரதம மந்திரி அஜய் திட்டங்களில் உதவிகள்; கூட்டுறவுத் துறை சார்பில் 746 பயனாளிகளுக்கு 8 கோடியே 70 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடன், மத்தியகாலக் கடன், கூட்டுப்பொறுப்பு குழுக் கடன் ஆகிய திட்டங்களில் கடனுதவி; மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 2 பயனாளிகளுக்கு 1 கோடியே 58 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வேளாண் சார்ந்த உற்பத்தி நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் வழங்குவதற்கான ஒப்பளிப்பு ஆணை; வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 21 பயனாளிகளுக்கு உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் 4 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய்க்கான இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை என மொத்தம் 25 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 4524 பயனாளிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கான பாடலை நயினார் நாகேந்திரன் வெளியிட்டார்
17 Jun 2025மதுரை : முருக பக்தர்கள் மாநாட்டு ஆன்மிக பாடலை நயினார் நாகேந்திரன் வெளியிட்டார்.
-
முற்றும் இஸ்ரேல் - ஈரான் போர்: அமெரிக்க மீது சீனா குற்றச்சாட்டு
17 Jun 2025பெய்ஜிங் : இஸ்ரேல் - ஈரான் போர் வலுத்து வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.
-
ஒரே நேரத்தில் உருவானது இரண்டு புயல் சின்னங்கள்: தமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
17 Jun 2025சென்னை, ஒரே நேரத்தில் இரண்டு புயல் சின்னம் உருவான நிலையில் தமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கீழடி விவகாரத்தில் மதுரை வீரகனூரில் மத்திய அரசுக்கு எதிராக இன்று தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்: திரளாக பங்கேற்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
17 Jun 2025சென்னை, கீழடி விவகாரத்தில் இன்று மதுரை வீரகனூரில் தி.மு.க.
-
அகமதாபாத் விமான விபத்து: விமானி உடல் மும்பை கொண்டு வரப்பட்டது
17 Jun 2025மும்பை : கடந்த வாரம் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் விமானி கேப்டன் சுமித் சபர்வாலின் உடல் மும்பைக்கு கொண்டு வரப்பட்டது.
-
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: தமிழக அரசுக்கு த.வெ.க. தலைவர் விஜய் கோரிக்கை
17 Jun 2025சென்னை : தமிழக அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்த வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
-
உண்மையை ஏற்க சில மனங்கள் மறுக்கின்றன: தங்கம் தென்னரசு
17 Jun 2025சென்னை : நம் மொழியின் பெருமையை உலகறியச் செய்து வருகிறோம். ஆனால், சில மனங்கள் இன்னும் உண்மையை ஏற்க மறுக்கின்றன என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
ஆமதாபாத் விமான விபத்து: நடிகர் ரஜினிகாந்த் வருத்தம்
17 Jun 2025சென்னை : ''ரொம்ப வருத்தமான விஷயம்.
-
மோடியின் காலை தொட்டு வணங்கிய சைப்ரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்
17 Jun 2025நிகோசியா : இந்திய பிரதமர் மோடியின் காலை தொட்டு வணங்கிய சைப்ரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்.
-
திருப்புவனம் தடுப்பணை கட்டுமான பணி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
17 Jun 2025சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை கட்டுமான பணிகளை துணை முதல்வர்உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.
-
இருப்பை காண்பித்துக் கொள்ள ஏதாவது சொல்வார்கள்: அமைச்சர் கே.என்.நேரு
17 Jun 2025நெல்லை : இருப்பை காண்பித்துக் கொள்வதற்காக எதிர்க்கட்சி தலைவரும், மற்ற எதிர்க்கட்சியினரும் ஏதாவது இதுபோல் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள் என்று அமைச்சர் கே.என்.நேரு தெர
-
குடும்பத்துடன் பாதாள அறையில் தஞ்சமடைந்தார் அலி கொமேனி
17 Jun 2025டெஹ்ரான், இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமெனி (86) குடும்பத்துடன் பாதாள அறையில் தஞ்சமடைந்துள்ளார்.
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: இந்திய வீரர்களை வீட்டிற்கு அழைத்து பேசினார் கோலி!
17 Jun 2025லண்டன் : தொடக்க ஆட்டத்திற்கு முன் இந்திய வீரர்களை லண்டனில் உள்ள தனது வீட்டிற்கு விராட் கோலி அழைத்துள்ளார்.
-
ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் தரவரிசை: ஸ்மிருதி மந்தனா முதலிடம்
17 Jun 2025துபாய் : மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 2019-க்குப் பிறகு முதல் முறையாக முதலிடம் பிடித்துள்ளார்.
-
அகமதாபாத் விமான விபத்து: 101 பயணிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
17 Jun 2025ஆமதாபாத் : அகமதாபாத்விமான விபத்தில் பலியான 101 பயணிகளின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
ஈரான் ராணுவத் தளபதி அலி ஷத்மானி கொல்லப்பட்டார்: இஸ்ரேல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
17 Jun 2025டெல் அவிவ், ஈரானில் புதிதாக நியமிக்கப்பட்ட உயர் ராணுவ தளபதி அலி ஷத்மானியை கொன்று விட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
-
நிவாரணத்தொகை அதிகரிப்பு
17 Jun 2025சென்னை : பணியிடத்தில் விபத்தால் உயிரிழக்கும் கட்டுமான தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ.
-
80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்: வாலிபர் சுட்டுப்பிடிப்பு : 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் பலாத்காரம்: வாலிபர் சுட்டுப்பிடிப்பு
17 Jun 2025கடலூர் : கடலூர் அருகே போலீசாரை தாக்க முயன்ற வாலிபரை போலீசார் சுட்டு பிடித்தனர்.
-
ஹெலிகாப்டரில் திடீர் கோளாறு: ஆந்திர முதல்வரின் பயணம் ரத்து
17 Jun 2025திருப்பதி : ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு செல்லும் ஹெலிகாப்டர் திடீர் கோளாரால் பயணங்கள் ரத்து செய்யப்பட்டது.
-
ஜி-7 மாநாட்டில் இருந்து அவசரமாக வெளியேறினார்: ஈரான் மீது தாக்குதலை நடத்த டிரம்ப் திட்டமா?
17 Jun 2025ஒட்டாவா : ஜி 7 மாநாட்டில் இருந்து அவசரமாக டிரம்ப் வெளியேறிய நிலையில் ஈரான் மீது தாக்குதல் நடத்தி திட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
சிறுவன் கடத்தல் சம்பவம்: திருவாலங்காடு காவல் நிலையத்தில் ஜெகன் மூர்த்தியிடம் தீவிர விசாரணை
17 Jun 2025திருத்தணி, சிறுவன் கடத்தல் வழக்கு விசாரணைக்காக, நேற்று திருவாலங்காடு காவல் நிலையத்தில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜரானார்.
-
பெரியகுளம் மாணவர் விடுதியில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு
17 Jun 2025சென்னை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேனி மாவட்டம் பெரியகுளம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுடன் கலந்துரையாடினார
-
தெஹ்ரானை விட்டு உடனே வெளியேறுங்கள்: இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
17 Jun 2025புதுடெல்லி, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் அந்நகரை விட்டு வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
-
சூதாட்ட செயலிகளை ஊக்குவிக்கும் விளம்பரங்கள்: யுவராஜ், ரெய்னா, ஹர்பஜனிடம் அமலாக்கத்துறை விசாரணை
17 Jun 2025புதுடில்லி : சூதாட்ட செயலிகளை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் கள் யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் ஆகியோரிடம் அமலாக்கத் துறை விசாரண
-
பரமக்குடி தொகுதி உள்ளிட்ட 3 சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
17 Jun 2025சென்னை, 3 சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சியின் ஆக்கப்பணிகள், தேர்தல் செயல் திட்டங்கள் குறித்து நிர்வாகிகளிடம் தனித்தனியாக கேட்டறிந்தார