முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்காசியில் சோகம் ஆதரவற்றோர் இல்லத்தில் 3 பேர் பலி; 8 பேர் மருத்துவமனையில் அனுமதி

வியாழக்கிழமை, 12 ஜூன் 2025      தமிழகம்
Suicide 2023 04 29

Source: provided

தென்காசி: தென்காசி அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்த வந்த 3 பேர் கெட்டுப்போன உணவு உண்டதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரத்தில் ஆதரவற்றோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் வசித்து வந்த 11 பேருக்கு நேற்றிரவு உணவு அருந்திய பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சங்கர் கணேஷ், முருகம்மாள் , அம்பிகா, ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரவு வழங்கப்பட்ட உணவு கெட்டுப்போயிருக்கலாம் அல்லது உணவு விஷத்தன்மை கொண்டதாக இருந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பான உணவுப் பாதுகாப்புத்துறையினர், சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து